thiruththoNDar purANam (periya purANam) panniraNDAm tirumuRai

(in tamil script, TSCII format)

சேக்கிழார் அருளிய்

திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பன்னிரண்டாம் திருமுறை

இரண்டாம் காண்டம்

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்

This page was originally provided by Project Madurai. The songs have been proof-read by thiruchchirrambalam arakkattalai, Kovilpatti.


திருச்சிற்றம்பலம் 
 

6 வம்பறா வரிவண்டுச் சருக்கம்

28 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்
 1. வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 	1899-1
 பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத 	1899-2
 சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் 	1899-3
 பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம் 	1899-4

 2. சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம் 	1900-1
 மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர் 	1900-2
 பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் 	1900-3
 கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் 	1900-4

 3. அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே 	1901-1
 செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ 	1901-2
 ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே 	1901-3
 எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால் 	1901-4

 4. அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் 	1902-1
 விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள் 	1902-2
 புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் 	1902-3
 வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால் 	1902-4

 5. வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த 	1903-1
 தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால் 	1903-2
 களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி 	1903-3
 இளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல 	1903-4

 6. உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும் 	1904-1
 கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்து 	1904-2
 அளந்து அறியாப் பலூழி ஆற்றுதலால் அகல் இடத்து 	1904-3
 விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை 	1904-4

 7. பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில் 	1905-1
 வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் 	1905-2
 நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர் 	1905-3
 மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால் 	1905-4

 8. வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம் 	1906-1
 சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப் 	1906-2
 பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி 	1906-3
 மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால் 	1906-4

 9. காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும் 	1907-1
 தாமரையும் புல்லிதமும் தயங்கிய நூலும் தாங்கித் 	1907-2
 தூமரு நுண் துகள் அணிந்து துளி வருகண்ணீர் ததும்பித் 	1907-3
 தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால் 	1907-4

 10. புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி 	1908-1
 வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும் 	1908-2
 கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின் 	1908-3
 மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள் 	1908-4

 11. வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும் 	1909-1
 பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப 	1909-2
 ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும் 	1909-3
 வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு 	1909-4

 12. விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் 	1910-1
 தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் 	1910-2
 உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் 	1910-3
 நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம் 	1910-4

 13. மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் 	1911-1
 புடை எங்கும் மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவு 	1911-2
 கிடை எங்கும் கலைச் சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் 	1911-3
 இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி 	1911-4

 14. பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப் 	1912-1
 பொருவில் திருத் தோணிபுரம் பூம்தராய் சிரபுரம் முன் 	1912-2
 வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம் 	1912-3
 பரவு திருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால் 	1912-4

 15. அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை 	1913-1
 கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச் 	1913-2
 செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத இருதயர் என்று 	1913-3
 இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் 	1913-4

 16. மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு 	1914-1
 பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார் 	1914-2
 பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார் 	1914-3
 கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் 	1914-4

 17. மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் 	1915-1
 அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது 	1915-2
 பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய் 	1915-3
 விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் 	1915-4

 18. மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுந்த 	1916-1
 ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால் 	1916-2
 பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு 	1916-3
 ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார் 	1916-4

 19. மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார் 	1917-1
 அனையநிலை தலை நின்றே ஆய சேவடிக் கமலம் 	1917-2
 நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும் 	1917-3
 புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார் 	1917-4

 20. பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித் 	1918-1
 திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக் 	1918-2
 கருத்து முடிந்திடம் பரவும் காதலியார் மணி வயிற்றில் 	1918-3
 உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக 	1918-4

 21.  ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி 	1919-1
 மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்கு 	1919-2
 நாள் உடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக் 	1919-3
 கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வ்வுறுநாள் 	1919-4

 22. அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே 	1920-1
 பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத் 	1920-2
 திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத் 	1920-3
 தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க 	1920-4

 23. தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி 	1921-1
 எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க 	1921-2
 அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக 	1921-3
 வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப 	1921-4

 24. திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற 	1922-1
 மிசை உலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்ல 	1922-2
 அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல 	1922-3
 இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக 	1922-4

 25. தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற 	1923-1
 நாளுடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க 	1923-2
 வாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ 	1923-3
 ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக 	1923-4

 26. அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப் 	1924-1
 பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும் 	1924-2
 தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம் 	1924-3
 சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் 	1924-4

 27. அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர் 	1925-1
 எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றி 	1925-2
 மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே 	1925-3
 ஓப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார் 	1925-4

 28. சிவன் அருள் எனப் பெருகும் சித்தம் மகிழ் தன்மை 	1926-1
 இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் 	1926-2
 கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் 	1926-3
 அவன் வருநிமித்தம் இது என்று அதிசயித்தார் 	1926-4

 29. பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் 	1927-1
 தே மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் 	1927-2
 தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கி 	1927-3
 மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே 	1927-4

 30. மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில் 	1928-1
 சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே 	1928-2
 ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் 	1928-3
 சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் 	1928-4

 31. பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த 	1929-1
 நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் 	1929-2
 ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா 	1929-3
 வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் 	1929-4

 32. பயன் தருவ ப·றருவும் வல்லிகளும் மல்கித் 	1930-1
 தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் 	1930-2
 வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா 	1930-3
 நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் 	1930-4

 33. அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் 	1931-1
 சங்கம் படகம் கருவி தாரை முதலான 	1931-2
 எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் 	1931-3
 மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் 	1931-4

 34. இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத் 	1932-1
 தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில் 	1932-2
 பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே 	1932-3
 அரும் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார் 	1932-4

 35. காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார் 	1933-1
 மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் 	1933-2
 சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச் 	1933-3
 சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார் 	1933-4

 36. மா மறை விழுக்குல மடந்தையர்கள் தமில் 	1934-1
 தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்னத் 	1934-2
 தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக் 	1934-3
 காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார் 	1934-4

 37. சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி 	1935-1
 உண்ணிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் 	1935-2
 வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார் 	1935-3
 புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் 	1935-4

 38. செம் பொன் முதலான பல தான வினை செய்வார் 	1936-1
 நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் 	1936-2
 வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் 	1936-3
 நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் 	1936-4

 39. ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் 	1937-1
 நெய் அகில் நறுங்குறை நிறைத்த புகையாலும் 	1937-2
 வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும் 	1937-3
 தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார் 	1937-4

 40.  ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் 	1938-1
 நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த 	1938-2
 தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் 	1938-3
 மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார் 	1938-4

 41. நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச் 	1939-1
 சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத் 	1939-2
 தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத் 	1939-3
 தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் 	1939-4

 42. பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் 	1940-1
 அரு மறை குழைத்த அமுது செய்து அருளுவாரைத் 	1940-2
 தருமிறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே 	1940-3
 திருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் 	1940-4

 43.  ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே 	1941-1
 பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு 	1941-2
 வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் 	1941-3
 நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார் 	1941-4

 44. தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும் 	1942-1
 தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும் 	1942-2
 சேய பொருள் திருமறையும் தீம் தமிழும் சிறக்க வரு 	1942-3
 நாயகனைத் தாலாட்டும் நலம் பல பாராட்டினார் 	1942-4

 45. வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார் 	1943-1
 அரு மறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப் 	1943-2
 பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் 	1943-3
 திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார் 	1943-4

 46.  நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது 	1944-1
 போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால் 	1944-2
 காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் 	1944-3
 தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார் 	1944-4

 47. விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து 	1945-1
 கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை 	1945-2
 நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் 	1945-3
 மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார் 	1945-4

 48. சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும் 	1946-1
 காழியர் தம் சீர் ஆட்டே கவுணியர் கற்பகமே என்று 	1946-2
 ஏழ் இசையும் எவ் உலகும் தனித் தனியே 	1946-3
 வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப 	1946-4

 49. திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும் 	1947-1
 வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும் 	1947-2
 உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் 	1947-3
 பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார் 	1947-4

 50. வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு 	1948-1
 உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்று 	1948-2
 கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள் 	1948-3
 தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார் 	1948-4

 51. தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து 	1949-1
 சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த 	1949-2
 பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின் 	1949-3
 மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார் 	1949-4

 52. சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை 	1950-1
 நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் 	1950-2
 குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோல 	1950-3
 மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் 	1950-4

 53. மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த 	1951-1
 திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின் 	1951-2
 அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு மறையோடு உலகு உய்ய 	1951-3
 எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்து தலும் 	1951-4

 54. நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப் 	1952-1
 பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த 	1952-2
 சேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு 	1952-3
 மூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் 	1952-4

 55. பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர் 	1953-1
 மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத் 	1953-2
 தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் 	1953-3
 கொண்டு எழலும் வெருக் கொண்டாற் போல் அழுவார் குறிப்பு அயலாய் 	1953-4

 56. மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி 	1954-1
 நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத் 	1954-2
 தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச் 	1954-3
 சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் 	1954-4

 57. பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர் 	1955-1
 முன்செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் 	1955-2
 மின் செய் பொலங் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை 	1955-3
 உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் 	1955-4

 58. கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் 	1956-1
 இடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய் 	1956-2
 விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம் 	1956-3
 தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் 	1956-4

 59. பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித் 	1957-1
 தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி 	1957-2
 வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி 	1957-3
 உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார் 	1957-4

 60. நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார் 	1958-1
 நீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின் 	1958-2
 ஆராத விருப்பினால் அகமர் உடம்படிய நீர் 	1958-3
 பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் 	1958-4

 61. மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாது 	1959-1
 இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் 	1959-2
 முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார் 	1959-3
 நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார் 	1959-4

 62. கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து 	1960-1
 வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப 	1960-2
 எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப 	1960-3
 புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார் 	1960-4

 63. மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் 	1961-1
 தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளை மைதானோ 	1961-2
 செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணி சிகரம் பார்த்து 	1961-3
 அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள 	1961-4

 64. அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால் 	1962-1
 முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான் 	1962-2
 பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச் 	1962-3
 சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார் 	1962-4

 65. திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த 	1963-1
 பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் 	1963-2
 ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த 	1963-3
 அரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார் 	1963-4

 66. அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை 	1964-1
 எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும் 	1964-2
 தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள் 	1964-3
 பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன 	1964-4

 67.  ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் 	1965-1
 காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவான 	1965-2
 சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து 	1965-3
 வார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி 	1965-4

 68. எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி 	1966-1
 உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும் 	1966-2
 கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து 	1966-3
 அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள் புரிந்தார் 	1966-4

 69. யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் 	1967-1
 ஆவதனால் ஆளுடையப் பிள்ளையாராய் அகில 	1967-2
 தேவருக்கும் முனிவர்க்கும் தெரிஅரிய பொருளாகும் 	1967-3
 தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார் 	1967-4

 70. சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் 	1968-1
 பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் 	1968-2
 உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் 	1968-3
 தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் 	1968-4

 71.  எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் 	1969-1
 அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் 	1969-2
 இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும் 	1969-3
 துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார் 	1969-4

 72. சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில் 	1970-1
 நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி 	1970-2
 பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கி 	1970-3
 யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா 	1970-4

 73. எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று 	1971-1
 கைச் சிறியது ஒருமாறு கொண்டோச்சக் கால் எடுத்தே 	1971-2
 அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து 	1971-3
 உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி 	1971-4

 74. விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல் 	1972-1
 பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன் 	1972-2
 எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி 	1972-3
 உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால் 	1972-4

 75. எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை 	1973-1
 மல்லல் நெடும் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்ப 	1973-2
 பல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால் 	1973-3
 செல்லு முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து 	1973-4

 76. செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும் 	1974-1
 மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் 	1974-2
 தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு 	1974-3
 எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் 	1974-4

 77. மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் 	1975-1
 கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட 	1975-2
 எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட 	1975-3
 அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார் 	1975-4

 78. தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார் 	1976-1
 வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும் 	1976-2
 இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை 	1976-3
 விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார் 	1976-4

 79. வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை 	1977-1
 நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும் 	1977-2
 போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும் 	1977-3
 ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் 	1977-4

 80. திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி 	1978-1
 இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருள 	1978-2
 அருள் கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் 	1978-3
 பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார் 	1978-4

 81. வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும் 	1979-1
 கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும் 	1979-2
 இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும் 	1979-3
 அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க 	1979-4

 82. மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர் தம் 	1980-1
 நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து 	1980-2
 உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவாமெய்ப் 	1980-3
 பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ 	1980-4

 83. அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால் 	1981-1
 இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் 	1981-2
 புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்து 	1981-3
 துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி 	1981-4

 84. அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே 	1982-1
 மண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும் 	1982-2
 கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப் 	1982-3
 புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் 	1982-4

 85.  ஈறில் பெரும் தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார் 	1983-1
 மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி 	1983-2
 வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் 	1983-3
 கூறும் அரும் தமிழின் பொருளான குறிப் போவார் 	1983-4

 86. தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல் 	1984-1
 காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார் 	1984-2
 தோணி புரத்திறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் 	1984-3
 பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார் 	1984-4

 87. அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார் 	1985-1
 முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி 	1985-2
 இப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு உளது என்று என்றே 	1985-3
 துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ 	1985-4

 88. பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி 	1986-1
 தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே 	1986-2
 இங்கு எனை ஆளும் உடையான் உமையோடும் இருந்தான் என்று 	1986-3
 அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் 	1986-4

 89. இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே 	1987-1
 சொன்முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் 	1987-2
 பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் 	1987-3
 பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார் 	1987-4

 90. பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே 	1988-1
 நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி 	1988-2
 வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் 	1988-3
 தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார் 	1988-4

 91.  காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து 	1989-1
 ஆழிய கடலே அதன் இடை அமுதே அடியார் முன் 	1989-2
 வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன் 	1989-3
 ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்று அனை என்பார் 	1989-4

 92.  மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப் 	1990-1
 பொறை அணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித் 	1990-2
 துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து 	1990-3
 இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் 	1990-4

 93.  புண்ணிய முதலே புனை மணி அரை ஞாணொடு போதும் 	1991-1
 கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் 	1991-2
 பண் இயல் கதியே பருவமது ஒரு மூவருடத்தே 	1991-3
 எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் 	1991-4

 94. என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் 	1992-1
 நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண் மேல் ஏந்தி நிரந்த போது 	1992-2
 சென்று அணைந்த தாதையர் சிவபாத இருதயர் தாம் தெய்வ ஞானக் 	1992-3
 கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல 	1992-4

 95. மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத் தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து 1993-1
 தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே 	1993-2
 பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத அதன் மீது பொங்கும் 	1993-3
 காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்தாக 	1993-4

 96. நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் 	1994-1
 மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாசத் 	1994-2
 தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவிநிற்பர் 	1994-3
 கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்தாக 	1994-4

 97. மங்கல தூர் இயந்து வைப்பர் மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப் 	1995-1
 பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண கும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார் 	1995-2
 அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத் 	1995-3
 தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம் செய்து சாரும் காலை 	1995-4

 98. தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம் 	1996-1
 அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் 	1996-2
 சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் 	1996-3
 பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார் 	1996-4

 99. தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத 	1997-1
 மா மறைகள் திரண்ட பெரும் திருத் தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய 	1997-2
 கா மரு சேவடிக் கமலம் கருத்திலுற இடையறாக் காதல் கொண்டு 	1997-3
 நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத் தோணி நம்பர் கோயில் 	1997-4

 100. காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள் 	1998-1
 தாதை யாரையும் வெளியே தாங்க அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து 	1998-2
 போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத் தாயாரையும் முன் வணங்கிப் போற்றி 	1998-3
 மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் கா இறைஞ்ச விருப்பில் சென்றார் 	1998-4

 101. பெருக் கோல் இட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த 	1999-1
 வரிக் கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி 	1999-2
 திருக் கோலக்கா எய்திதித் தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று 	1999-3
 இருக்கோல் இட்டு அறிவு அரிய திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார் 	1999-4

 102. மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழுப் பொருளை வேணி மீது 	2000-1
 பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள் பரித்து அருளுவானை 	2000-2
 மைந் நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் 	2000-3
 கைந் நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை 	2000-4

 103. கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த 	2001-1
 செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் 	2001-2
 ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த 	2001-3
 வையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே 	2001-4

 104. காழி வரும் பெரும் தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டு 	2002-1
 வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயில் 	2002-2
 ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித் 	2002-3
 தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார் 	2002-4

 105. உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கித் 	2003-1
 தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை உள்ளோர் துதித்து மண் மேல் 	2003-2
 வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் 	2003-3
 தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளிச் சண்பை நகர் சாரச் செல்வார் 	2003-4

 106. செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன் நடந்து செல்லும் போது 	2004-1
 தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ள 	2004-2
 அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் 2004-3
 திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத் தோணிச் சிகரக் கோயில் 	2004-4

 107. திருப் பெருகு பெரும் கோயில் சூழ வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே 2005-1
 அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று 	2005-2
 விருப்புறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார் தமைப் பாட மேவும் காதல் 	2005-3
 பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை 	2005-4

 108. எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத் தாளத்தினால் இசைய ஒத்தி 	2006-1
 அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி 	2006-2
 மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ விளங் கோலத்துக் காட்சி 	2006-3
 கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞானக் கொண்டலார் தாம் 	2006-4

 109. அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமை முன்னம் அளித்த தாயார் 	2007-1
 முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் 	2007-2
 மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக் 	2007-3
 கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் 	2007-4

 110. மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே 	2008-1
 எங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும் அல்லா ஏனையோரும் 	2008-2
 பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாங் கொண்டு புகலியார் தம் 	2008-3
 சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் 	2008-4

 111. வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் 	2009-1
 சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை 	2009-2
 தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் 	2009-3
 எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ் உலகும் ஏத்தும் நாளில் 	2009-4

 112. செழும் தரளப் பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் 	2010-1
 கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே 	2010-2
 எழுந்து அருள வேண்டும் என இசைந்து அருளித் தோணி வீற்று இருந்தார் 	2010-3
 பாதம் தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார் 2010-4

 113. தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது 	2011-1
 போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை 	2011-2
 மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள 	2011-3
 நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் 	2011-4

 114. தேன் அலரும் கொண்றையினார் திரு நன்னி பள்ளியினைச் சாரச் செல்வார் 	2012-1
 வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப் 	2012-2
 பானல் வயல் திரு நன்னி பள்ளி எனத் தாதையர் பணிப்பக் கேட்டு 	2012-3
 ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல் தொடை மாலை நவிலல் உற்றார் 	2012-4

 115.  காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச் 	2013-1
 சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில் 	2013-2
 நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம் 	2013-3
 பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் 	2013-4

 116.  ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர 	2014-1
 நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப் 	2014-2
 போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் 	2014-3
 காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம் 	2014-4

 117. அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட 	2015-1
 நம் பெரும் தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி 	2015-2
 உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு 	2015-3
 தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் 	2015-4

 118. காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டி 	2016-1
 பூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி 	2016-2
 ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை 	2016-3
 மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் 	2016-4

 119. திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப் 	2017-1
 பெரு மறை ஓசை மல்கப் பெரும் திருக் கோயில் எய்தி 	2017-2
 அரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின் 	2017-3
 தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார் 	2017-4

 120. கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி போந்து 	2018-1
 மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் 	2018-2
 இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏந்தி 	2018-3
 நிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார் 	2018-4

 121. பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச் 	2019-1
 சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடி 	2019-2
 பொன்னி சூழ் புகாரில் நீடு புனிர்தம் திருச்சாய்க் காட்டு 	2019-3
 மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார் 	2019-4

 122. வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத் 	2020-1
 தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து 	2020-2
 மானிடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண்புகார் என்று 	2020-3
 ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை 	2020-4

 123. சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப் 	2021-1
 பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும் 	2021-2
 ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு 	2021-3
 ஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே 	2021-4

 124. பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு 	2022-1
 சென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று 	2022-2
 இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க 	2022-3
 மன்னுசீர் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார் 	2022-4

 125. முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச் 	2023-1
 சித்த நீடு உவகை யோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப் 	2023-2
 பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்து 	2023-3
 நித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார் 	2023-4

 126. மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச் 	2024-1
 செப்பரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி 	2024-2
 முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி 	2024-3
 ஒப்பரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் 	2024-4

 127. அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் 	2025-1
 திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி 	2025-2
 மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத் 	2025-3
 தருமலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் 	2025-4

 128. தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய 	2026-1
 ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச் 	2026-2
 சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய 	2026-3
 வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார் 	2026-4

 129. வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம் 	2027-1
 செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு 	2027-2
 எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித் 	2027-3
 தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை 	2027-4

 130. அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் 	2028-1
 மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றி 	2028-2
 உய் வகை மண் உளோருக்கு உதவிய பதிகம் பாடி 	2028-3
 எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில் 	2028-4

 131. திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின் 	2029-1
 வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார் 	2029-2
 ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத் 	2029-3
 தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் 	2029-4

 132. பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச் 	2030-1
 சுரும்பு ஆர் கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்து 	2030-2
 விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து 	2030-3
 வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் 	2030-4

 133. அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயா நீர் 	2031-1
 உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே 	2031-2
 இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு 	2031-3
 கள நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார் 	2031-4

 134. கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்து 	2032-1
 ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என 	2032-2
 ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி 	2032-3
 மேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் 	2032-4

 135. தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால் 	2033-1
 ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை 	2033-2
 மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க 	2033-3
 ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார் 	2033-4

 136. யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி 	2034-1
 வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத் 	2034-2
 தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று 	2034-3
 ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் 	2034-4

 137. எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப் 	2035-1
 பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின் 	2035-2
 கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து 	2035-3
 நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப 	2035-4

 138. பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த 	2036-1
 வெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம் 	2036-2
 உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த் 	2036-3
 தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார் 	2036-4

 139. காழியர் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார் 	2037-1
 ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை 	2037-2
 யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார் 	2037-3
 ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர் 	2037-4

 140. சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் 	2038-1
 நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும் 	2038-2
 அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் 	2038-3
 பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார் 	2038-4

 141. மற்றதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள 	2039-1
 பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச் 	2039-2
 சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே 	2039-3
 அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் 	2039-4

 142. சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞான சம்பந்தர் 	2040-1
 பரவு திருத் தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்த 	2040-2
 விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் 	2040-3
 தர இசையும் குறிப்பு அறியத் தவ முனிவர்க்கு அருள் செய்தார் 	2040-4

 143. பிள்ளையார் அருள் செய்யப் பெரும் தவத்தால் பெற்று எடுத்த 	2041-1
 வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப 	2041-2
 வெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்று இருந்த 	2041-3
 புள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார் 	2041-4

 144. தாழ்வில் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும் 	2042-1
 மேவிய சீர் அடியார்கன் புடை வர வெம் குரு வேந்தர் 	2042-2
 பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த் 	2042-3
 தேவர்கள் தம் பெரும் தேவர் திருத் தில்லை வழிச் செல்வார் 	2042-4

 145. நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி 	2043-1
 முள்ளிடைப் புற வெள் இதழ்க் கோதை முகிழ் விரி மணம் சூழப் 	2043-2
 புள்ளிடைத் தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திடப் போந்து 	2043-3
 கொள்ளிடத் திரு நதிக்கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் 	2043-4

 146. வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித் 	2044-1
 தண் தலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடித்தாழ 	2044-2
 தெண் திரைக் கடல் பவழமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும் 	2044-3
 கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி 	2044-4

 147. பல்கு தொண்டர் தம் குழாத் தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழச் 	2045-1
 செல் கதிப் பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தரக் கண்டு 	2045-2
 மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் 	2045-3
 நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆரமுது உண்டார் 	2045-4

 148. செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இத் திருந்து உலகினிற்கு எல்லாம் 	2046-1
 மங்கலம் தரு மழவிளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் 	2046-2
 தங்கு புள்ளலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாசப் 	2046-3
 பொங்கு செம்முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை 	2046-4

 149. கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திடக் கடி மணக் குளிர் கால் வந்து 	2047-1
 உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப 	2047-2
 இலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட 	2047-3
 மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை 	2047-4

 150. இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் கொடி இன் அமுது என ஞானம் 	2048-1
 குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வரக் கண்டு 	2048-2
 மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவித் 	2048-3
 தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி 	2048-4

 151. ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்து அருளும் அந் நலம் கண்டு 	2049-1
 சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீசச் 	2049-2
 சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களி கூர்வ 	2049-3
 போல் அசைந்து இரு புடைமிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் 	2049-4

 152. பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்விச் 	2050-1
 சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே 	2050-2
 தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே 	2050-3
 நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடுவானம் 	2050-4

 153. கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி 	2051-1
 அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அணைத்தின் ஆகரம் ஆன 	2051-2
 மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி 	2051-3
 நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் திரு வாயில் நேர் அணித்தாக 	2051-4

 154. பொங்கு கொங்கையில் கறந்த மெய் ஞானமாம் போனகம் பொன் குன்றம் 	2052-1
 மங்கை செங்கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று 	2052-2
 அங்கண் வாழ் பெரும் திருத்தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி 	2052-3
 எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர் கொள அணைவார்கள் 	2052-4

 155. வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு இடை நிறைந்து ஓங்க 	2053-1
 சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச் 	2053-2
 சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக் 	2053-3
 கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு புக்கார் 	2053-4

 156. செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசைத் திருவாயில் 	2054-1
 எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ 	2054-2
 மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கைத் 	2054-3
 தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர் 	2054-4

 157. மலர்ந்த பேர் ஒளி குளிர் தரச் சிவமணம் கமழ்ந்து வான் துகள் மாறிச் 	2055-1
 சிலம்பு அலம்பு சேவடியவர் பயில் உறும் செம்மையால் திருத்தொண்டு 	2055-2
 கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் திருவீதி கண் களி செய்யப் 	2055-3
 பலன் கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி 	2055-4

 158. நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு நிலவிய திரு முன்றின் 	2056-1
 மாடு செம் பொனின் மாளிகை வலம் கொண்டு வானுற வளர் திங்கள் 	2056-2
 சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்த 	2056-3
 ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில் 	2056-4

 159. நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட 	2057-1
 அந்தம் இல்லவர் அணுகி முன் தொழுதிரு அணுக்கனாம் திருவாயில் 	2057-2
 சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை யேற 	2057-3
 உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் 	2057-4

 160. அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பல முந்தம் 	2058-1
 உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும் 	2058-2
 கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழிப் 	2058-3
 புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு 	2058-4

 161. உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின் கண் 	2059-1
 அணையும் ஐம் பொறி அளவினும் எளிவர அருளினை எனப் போற்றி 	2059-2
 இணை இல் வண் பெருங் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் 	2059-3
 புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி 	2059-4

 162.  ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால் 	2060-1
 வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே 	2060-2
 ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் 	2060-3
 காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி 	2060-4

 163. பண்ணார் பதிகத் திருக் கடை காப்புப் பரவி 	2061-1
 உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் 	2061-2
 விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக் 	2061-3
 கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் 	2061-4

 164. முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று 	2062-1
 சொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி 	2062-2
 பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற 	2062-3
 பொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார் 	2062-4

 165. செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் 	2063-1
 மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் 	2063-2
 நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் 	2063-3
 அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார் 	2063-4

 166. செய்ய சடையார் திருவேட்களம் சென்று 	2064-1
 கை தொழுது சொல் பதிகம் பாடிக் கழுமலக் கோன் 	2064-2
 வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்றாடும் 	2064-3
 ஐயன் திருக் கூத்துக் கும்பிட்டு அணை உறும் நாள் 	2064-4

 167. கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து 	2065-1
 மெய்ம் மாலைச் சொல் பதிகம் பாடி விரைக் கொன்றைச் 	2065-2
 செம்மாலை வேணித் திரு உச்சி மேவியுறை 	2065-3
 அம்மானைக் கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் 	2065-4

 168. பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி 	2066-1
 நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் 	2066-2
 நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் 	2066-3
 ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் 	2066-4

 169.  ஆங்கு அவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே 	2067-1
 ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார் 	2067-2
 தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்து 	2067-3
 பூங்கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்கண் 	2067-4

 170. அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை 	2068-1
 முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும் 	2068-2
 தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக் 	2068-3
 கண்ட அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார் 	2068-4

 171. செல்வம் பிரிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும் 2069-1
 எல்லையில் சீர்ச் சண்பை இளவேறு எழுந்து அருளி 	2069-2
 ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி 	2069-3
 மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் 	2069-4

 172. பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம் 	2070-1
 சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த 	2070-2
 பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் 	2070-3
 செங்கையொடும் சென்று திருவாயில் உட்புக்கார் 	2070-4

 173. ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக் 	2071-1
 குன்று அனைய பேர் அம்பலம் மருங்கு கும்பிட்டு 	2071-2
 மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர் 	2071-3
 சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக் கீழ் 	2071-4

 174.  ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் 	2072-1
 பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் 	2072-2
 நீடு வாழ் தில்லை நான் மறையோர் தமைக் கண்ட அந் நிலை எல்லாம் 	2072-3
 கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்துச் சிற்றம் பலம் எனக் கூறி 	2072-4

 175. இன்ன தன்மையில் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்பு ஏத்தி 	2073-1
 மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் 	2073-2
 பின்னுவார் சடைக் கூத்தர் பேர் அருள் பெறப் பிரியாத விடைபெற்றுப் 	2073-3
 பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புறமுன்றில் 	2073-4

 176. அப் புறத்து இடை வணங்கி அங்கு அருளுடன் அணிமணித் திருவாயில் 	2074-1
 பொற்புறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய புகழ்ப் பாணர் 	2074-2
 நற்பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவாக்கரை மேய 	2074-3
 ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் 	2074-4

 177. பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து 	2075-1
 தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச் 	2075-2
 செங்கை யாழ்த் திரு நீலக் கண்டப் பெரும் பாணருடன் சேர 	2075-3
 மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வரவந்தார் 	2075-4

 178. இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம் புலியூரின் 	2076-1
 மருங்கு சென்றுற நீல கண்டப் பெரும்பாணர் வணங்கிக் கார் 	2076-2
 நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியேன்பதி என நெடிது இன்புற்று 	2076-3
 அருங்கலைச் சிறு மழ இளங்களிறனார் அங்கணைந்து அருள் செய்வார் 	2076-4

 179.  ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு 	2077-1
 செய்வாறு எனச் சிறப்பு உரைத்து அருளி அச் செழும்பதி இடம் கொண்ட 	2077-2
 மை கொள் கண்டர் தம் கோயில் உட்புக்கு வலம் கொண்டு வணங்கி பார் 	2077-3
 உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் 	2077-4

 180. அங்கு நின்று எழுந்து அருளி மற்றவருடன் அம்பொன்மா மலை வல்லி 	2078-1
 பங்கர் தாம் இனிது உறையும் நற் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித் 	2078-2
 துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர் 	2078-3
 செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார் 	2078-4

 181. மொய் கொள் மா மணிக் கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று 2079-1
 எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி 	2079-2
 செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்கு 	2079-3
 ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் 	2079-4

 182. வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலம் கொள்வார் 	2080-1
 தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி 	2080-2
 ஞான போதகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு உள்புக்கு 	2080-3
 தேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் 	2080-4

 183. தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ் தொடை சாத்தி 	2081-1
 வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன் இடை வைகுவார் மணி வெற்புச் 	2081-2
 சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை 	2081-3
 வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் 	2081-4

 184.  ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை 	2082-1
 ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனிப் பரஞ்சோதிப் 	2082-2
 பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை 	2082-3
 தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார் 	2082-4

 185. கருவரைப்பில் புகாதவர் கை தொழும் 	2083-1
 ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப் 	2083-2
 பெருவரத்தினில் பெற்றவர் தம் உடன் 	2083-3
 திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார் 	2083-4

 186. முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது 	2084-1
 தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து 	2084-2
 அந்தணாளர் அவர் அருகே செலச் 	2084-3
 சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் 	2084-4

 187.  ஆதியார் தம் அரத்துறை நோக்கியே 	2085-1
 காதலால் அணைவார் கடிது ஏகிட 	2085-2
 தாதையாரும் பரிவுறச் சம்பந்தர் 	2085-3
 பாத தாமரை நொந்தன பைப்பய 	2085-4

 188. மறை அனைத்தும் ஒரு வடிவாம் என 	2086-1
 நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத் 	2086-2
 துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை 	2086-3
 இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார் 	2086-4

 189. பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை 	2087-1
 ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால் 	2087-2
 தேசு மிக்க திருவுரு ஆனவர் 	2087-3
 ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார் 	2087-4

 190. இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட 	2088-1
 வந்த வைதிக மாமணி ஆனவர் 	2088-2
 சிந்தை ஆரமுதாகிய செம் சடைத் 	2088-3
 தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார் 	2088-4

 191. மாறன் பாடி எனும் பதி வந்துற 	2089-1
 ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் 	2089-2
 வேறு செல்பவர் வெய் துறப் பிள்ளையார் 	2089-3
 ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட 	2089-4

 192. உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு 	2090-1
 எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக் 	2090-2
 கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய் 	2090-3
 வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன் 	2090-4

 193. அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச் 	2091-1
 சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப் 	2091-2
 பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் 	2091-3
 வெற்றி மாதவத்தோருடன் மேவினார் 	2091-4

 194. இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய் 	2092-1
 மன்னனார் தம் வழி வருத்தத் தினை 	2092-2
 அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச் 	2092-3
 சென்னியாற்றர் திருவுளம் செய்தனர் 	2092-4

 195.  ஏறுதற்குச் சிவிகை இடக்குடை 	2093-1
 கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள் 	2093-2
 மாறில் முத்தின் படியினால் மன்னிய 	2093-3
 நீறு வந்த நிமலர் அருளுவார் 	2093-4

 196. நீடு வாழ் பதி யாகும் நெல் வயலின் 	2094-1
 மாட மாமணை தோறும் மறையோர்க்குக் 	2094-2
 கூடு கங்குல் கனவில் குலமறை 	2094-3
 தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் 	2094-4

 197.  ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் 	2095-1
 மான முகத்தின் சிவிகை மணிக் குடை 	2095-2
 ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக் 	2095-3
 கோன் அவன் பால் அணைந்து கொடும் என 	2095-4

 198. அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் 	2096-1
 வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் 	2096-2
 சிந்தையோடும் செழுநீர் அரத்துறை 	2096-3
 இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர் 	2096-4

 199.  ஆங்கு மற்ற அருள் அடியாருடன் 	2097-1
 ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின 	2097-2
 ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் 	2097-3
 தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார் 	2097-4

 200. சால மிக்க வியப்புறு தன்மையின் 	2098-1
 பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் 	2098-2
 காலம் எய்திடக் காதல் வழிப்படும் 	2098-3
 சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் 	2098-4

 201. திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால் 	2099-1
 துங்க வெண் குடை தூய சிவிகையும் 	2099-2
 பொங்க ஊதும் பொருவரும் சின்னமும் 	2099-3
 அங்கண் நாதர் அருளினால் கண்டனர் 	2099-4

 202. கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து 	2100-1
 எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத் 	2100-2
 தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து 	2100-3
 அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர் 	2100-4

 203. சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் 	2101-1
 பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ 	2101-2
 அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் 	2101-3
 பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 	2101-4

 204. மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர் 	2102-1
 ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர் 	2102-2
 தேசுடைச் சிவிகை முதலாயின 	2102-3
 ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் 	2102-4

 205. இத்தலை இவர் இன்னணம் ஏகினார் 	2103-1
 அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா 	2103-2
 முத்த நற் சிவிகை முதல் ஆயின 	2103-3
 உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார் 	2103-4

 206. அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை 	2104-1
 வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை 	2104-2
 கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என 	2104-3
 உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின் 	2104-4

 207. சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் 	2105-1
 பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர் 	2105-2
 தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம் 	2105-3
 விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் 	2105-4

 208. மாலை யாமம் புலர் உறும் வைகறை 	2106-1
 வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி 	2106-2
 கோல மேனியர் ஆய்க் கைம் மலர் குவித்து 	2106-3
 ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர் 	2106-4

 209. போத ஞானப் புகலிப் புனிதரைச் 	2107-1
 சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக் 	2107-2
 காதல் செய்பவன் போலக் கருங்கடல் 	2107-3
 மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் 	2107-4

 210.  ஆய போழ்தின் அரவு எனும் ஆர்ப்புடன் 	2108-1
 தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை 	2108-2
 மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு 	2108-3
 ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் 	2108-4

 211. வந்து தோன்றிய அந்தணர் மாதவர் 	2109-1
 கந்த வார் பொழில் காழி நல்ன்னாடர் முன் 	2109-2
 அந்தமில் சீர் அரத்துறை ஆதியார் 	2109-3
 தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் 	2109-4

 212. என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது 	2110-1
 ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் 	2110-2
 நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது 	2110-3
 மன்று உளரர் அருள் என்று வணங்கினார் 	2110-4

 213. மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் 	2111-1
 தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் 	2111-2
 செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள் 	2111-3
 எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே 	2111-4

 214.  எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள் 	2112-1
 வந்தவாறு மற்று எவ் வணமோ என்று 	2112-2
 சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை 	2112-3
 புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார் 	2112-4

 215. பொடி அணிந்த புராணன் அரத்துறை 	2113-1
 அடிகள் தம் அருளே இதுவாம் எனப் 	2113-2
 படி இலாத சொல் மாலைகள் பாடியே 	2113-3
 நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார் 	2113-4

 216. சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் 	2114-1
 மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று 	2114-2
 ஆதியார் அருள் ஆதலின் அஞ்செஎழுத்து 	2114-3
 ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் 	2114-4

 217. தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை 	2115-1
 அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக் 	2115-2
 கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி 	2115-3
 வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது வானம் 	2115-4

 218. விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் 	2116-1
 கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் 	2116-2
 களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்த்தன முத்து 	2116-3
 விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே 	2116-4

 219. பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப் 	2117-1
 புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் 	2117-2
 அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரைத் தரங்கம் 	2117-3
 மல்கு பால் கடல் வளர்மதி உதித்தது என வந்தார் 	2117-4

 220. நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி 	2118-1
 மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தே 	2118-2
 ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம் 	2118-3
 கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் 	2118-4

 221. செய்ய பொன் புனை வெண்டரளத்து அணிசிறக்க 	2119-1
 சைவ மா மறைத் தலைவர் பால் பெறும் தனிக் காளம் 	2119-2
 வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் 	2119-3
 உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத 	2119-4

 222. சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே 	2120-1
 தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம் 	2120-2
 முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட 	2120-3
 பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க 	2120-4

 223. புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே 	2121-1
 இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரை 	2121-2
 அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது 	2121-3
 உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத 	2121-4

 224. தெருளும் மெய்க்கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை 	2122-1
 இருளும் நீங்கவும் எழுது சொன் மறை அளிப்பவர் தாம் 	2122-2
 பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு 	2122-3
 அருளும் அங்கணர் திரு அரத் துறையை வந்து அணைந்தார் 	2122-4

 225. வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச் 	2123-1
 சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து 	2123-2
 சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல 	2123-3
 அந்தி நாண்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார் 	2123-4

 226. மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்து 	2124-1
 சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார் 	2124-2
 என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும் 	2124-3
 பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார் 	2124-4

 227. சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் 	2125-1
 ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி 	2125-2
 நீடினார் திரு அருள் பெரும் கருணையே நிகழப் 	2125-3
 பாடினார் திருப் பதிகம் ஏழ் இசையொடும் பயில 	2125-4

 228. இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி 	2126-1
 மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு 	2126-2
 திசை விளங்கிடத் திரு அருள் பெற்றவர் சில நாள் 	2126-3
 அசைவில் சீர்த் தொண்டர் தம் உடன் அப்பதி அமர்ந்தார் 	2126-4

 229. தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி 	2127-1
 மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத் 	2127-2
 தாவில் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக் 	2127-3
 காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் 	2127-4

 230. விளங்கு வேணு புரத்து திருத் தோணி வீற்று இருந்த 	2128-1
 களம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூட 	2128-2
 உளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி 	2128-3
 வளம் கொள் பூம் புனல் புகலிமேல் செல மனம் வைத்தார் 	2128-4

 231. அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி 	2129-1
 நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு 	2129-2
 உள் நிறைந்த பூங்கழல் இணை உச்சி மேல் கொண்டே 	2129-3
 வெள் நிலா மலர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார் 	2129-4

 232. சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்கப் 	2130-1
 கவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக் 	2130-2
 குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப் 	2130-3
 புவிகை மாறு இன்றிப் போற்ற வந்து அருளினார் போந்தார் 	2130-4

 233. மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின் 	2131-1
 குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம் 	2131-2
 முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப் 	2131-3
 பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம் 	2131-4

 234. உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதியோர் 	2132-1
 புடை இரண்டினும் கொடியொடு பூந்துகில் விதானம் 	2132-2
 நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி 	2132-3
 மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார் 	2132-4

 235. அனைய செய்கையால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின் 	2133-1
 வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப் 	2133-2
 புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் 	2133-3
 பனை நெடும் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் 	2133-4

 236. அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியர் 	2134-1
 பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின் 	2134-2
 துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன் 	2134-3
 பங்கயச் சேவடி பணிந்து பாடுவார் 	2134-4

 237. மண்ணினில் பொலி குலமலையர் தாம் தொழுது 	2135-1
 எண் இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் 	2135-2
 நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப் 	2135-3
 பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார் 	2135-4

 238. பாவின இசை வழிபாடி அங்கு அகன்றி	2136-1
 யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் 	2136-2
 மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் 	2136-3
 மேவிய பெரும் திரு விசய மங்கையில் 	2136-4

 239. அந்தணர் விசய மங்கையினில் அங்கணர் 	2137-1
 தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் 	2137-2
 வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய 	2137-3
 செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார் 	2137-4

 240. விசய மங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் 	2138-1
 அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப் போந்து 	2138-2
 இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார் 	2138-3
 திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் 	2138-4

 241. புறம் பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய் 	2139-1
 திறம் புரி நீர்மையில் பதிகச் செம்தமிழ் 	2139-2
 நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய 	2139-3
 அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார் 	2139-4

 242. அத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல் 	2140-1
 கைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழு 	2140-2
 முத் தமிழ் விரபராம் முதல்வர் நண்ணினார் 	2140-3
 செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் 	2140-4

 243. திரு மலி புகலி மன் சேரச் சேய் ஞலூர் 	2141-1
 அரு மறையவர் பதி அலங்கரித்து முன் 	2141-2
 பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே 	2141-3
 வருமுறை எதிர் கொள வந்து முந்தினார் 	2141-4

 244. ஞான சம்பந்தரும் நாயனார் சடைத் 	2142-1
 தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் 	2142-2
 பான்மையில் வரும் பதி என்று நித்தில 	2142-3
 யானமுன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார் 	2142-4

 245. மா மறையாளர் வண் புகலிப் பிள்ளையார் 	2143-1
 தாம் எழுந்து அருளிடத் தங்கள் பிள்ளையார் 	2143-2
 காமரும் பதியில் வந்து அருளக் கண்டனர் 	2143-3
 ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் 	2143-4

 246. களித்தனர் புண்ணியக் கரக வாசநீர் 	2144-1
 தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர் 	2144-2
 துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம் 	2144-3
 அளித்தவர் கோயிலுள் அவர் முன்பு எய்தினார் 	2144-4

 247. வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப் 	2145-1
 பொங்கிய விருப்பினால் புடை வலம் கொடு 	2145-2
 செங்கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்கு 	2145-3
 அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர் 	2145-4

 248. வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல் 	2146-1
 காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார் 	2146-2
 தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார் 	2146-3
 பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார் 	2146-4

 249. இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே 	2147-1
 நன்னெடும் பதி உளோர் நயக்க வைகிய 	2147-2
 பின்னர் வெண்பிறை அணி வேணிப் பிஞ்ஞகர் 	2147-3
 மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார் 	2147-4

 250.  ஆங்கணி சொன் மலர் மாலை சாத்தி அப் 	2148-1
 பாங்கு பந்தணை நலூர் பணிந்து பாடிப் போய்த் 	2148-2
 தீங்கு தீர் மா மறைச் செம்மை அந்தணர் 	2148-3
 ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர் 	2148-4

 251. மற்ற நல் பதி வட தளியின் மேவிய 	2149-1
 அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச் 	2149-2
 சொல் தொடைபாடி அங்கு அகன்று சூழ் மதில் 	2149-3
 பொன் பதி வாழ் கொளி புத்தூர் புக்கனர் 	2149-4

 252. சீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க் 	2150-1
 கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் 	2150-2
 பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார் 	2150-3
 வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர் 	2150-4

 253. நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில் 	2151-1
 கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய 	2151-2
 வம்பலர் செந்தமிழ் மாலை பாடி நின்று 	2151-3
 எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார் 	2151-4

 254. அப்பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் 	2152-1
 மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன் 	2152-2
 பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர் 	2152-3
 பைப் பணியவர் கருப் பறியல் ஊரினில் 	2152-4

 255. பரமர் தம் திருக் கருப் பறியல் ஊரினைச் 	2153-1
 சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ் 	2153-2
 உரை இசை பாடி அம் மருங்கின் உள்ளவாம் 	2153-3
 சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார் 	2153-4

 256. மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி 	2154-1
 எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக் 2154-2
 கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத் 2154-3
 தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப் பிரம புரம் சாரச் செல்லும்போது 	2154-4

 257. பிள்ளையார் எழுந்து அருளக் கேட்ட செல்வப் பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல்2155-1
 உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும் உமைப் பாகர் கழல் வணங்கி உவகை கூர 2155-2
 வெள்ள மறை ஒலிபெருகு மறுகு தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் 	2155-3
 தெள்ளுபுனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர் கொள் சிறப்பில் செய்வார் 2155-4

 258.  ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப் 2156-1
 பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப் புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி 	2156-2
 வாரணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச் 	2156-3
 சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழுந்தரளக் குடை நிழல் கீழ் சென்று கண்டார் 2156-4

 259. கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித் 	2157-1
 தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை 2157-2
 எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி 2157-3
 வண்டமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் 2157-4

 260. திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர் 2158-1
 மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து 2158-2
 துங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சி புக்குச் சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் 2158-3
 தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் 	2158-4

 261. பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணைத் திருவருளின் பரிசு போற்றி 2159-1
 விரவு மலர்க் கண் பனிப்பப் கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச் 2159-2
 சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது திரு நீல கண்ட யாழ்ப்பாணர் பின்னே 	2159-3
 வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார் 2159-4

 262. மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில் 	2160-1
 நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த 2160-2
 இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த 2160-3
 முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்தில் புக்கார் முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் 	2160-4

 263. செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து 2161-1
 மல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகுநாளில் 2161-2
 ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணரப் பெற்றார் 2161-3
 தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்யத் தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற 	2161-4

 264. ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமையாகும் 2162-1
 இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று 2162-2
 வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் 2162-3
 பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம் 	2162-4

 265. சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப் 2163-1
 பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப் பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை 2163-2
 கருதி ஆதரவோடும் வியப்பு உற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன் 2163-3
 வரும் தியானப் பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் 2163-4

 266. மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த 2164-1
 சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் 	2164-2
 முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்தஞ்சு என்பார் 	2164-3
 அந்தியினுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளிச்செய்தார் 	2164-4

 267. அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள் அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து 	2165-1
 சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத் திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து 2165-2
 மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்து 	2165-3
 பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர் தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில் 2165-4

 268. பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது 	2166-1
 வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பில் ஞானத்து அமுது உண்ட 	2166-2
 செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காக 	2166-3
 அந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக் கரையர் 	2166-4

 269.  வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார் எனக் கேட்டு 	2167-1
 பூக்கமழ் வாசத் தடம் சூழ் புகலிப் பெரும் தகையாரும் 	2167-2
 ஆக்கிய நல் வினைப் பேறு என்று அன்பர் குழாத் தொடும் எய்தி 	2167-3
 ஏற்கும் பெரு விருப்போடும் எதிர் கொள எய்தும் பொழுதில் 	2167-4

 270. சிந்தை இடை அறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும் 	2168-1
 கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும் 	2168-2
 வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திரு நீறும் 	2168-3
 அந்தம் இலாத் திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய 	2168-4

 271. கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல் 	2169-1
 தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே 	2169-2
 அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச 	2169-3
 மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார் 	2169-4

 272. பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்து 	2170-1
 போர் விடையார் திருத்தோணிப் பொன் கோயில் உட்புகும் போதில் 	2170-2
 ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் 	2170-3
 சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார் 	2170-4

 273. அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால் 	2171-1
 இணையில் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்துப் 	2171-2
 புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு 	2171-3
 உணரும் சொல் மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார் 	2171-4

 274. அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கு அரசர் 	2172-1
 மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவிடம் கும்பிட வேண்டி 	2172-2
 பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும் 	2172-3
 பின்னாக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார் 	2172-4

 275. வாக்கின் தனி மன்னர் ஏக மாறாத் திரு உளத்தோடும் 	2173-1
 பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து 	2173-2
 தேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்று இருந்தாரைத் 	2173-3
 தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில் 	2173-4

 276. செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களான் மொழி மாற்றும் 	2174-1
 வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்குச் 	2174-2
 சந்த வியமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக் குறள் சாத்தி 	2174-3
 எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு 	2174-4

 277. நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம் 	2175-1
 சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக 	2175-2
 மூல இலக்கியமாக எல்லாப் பொருள்களும் முற்ற 	2175-3
 ஞாலத்து உயர் காழியாரைப் பாடினார் ஞான சம்பந்தர் 	2175-4

 278. இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும் 	2176-1
 மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும் 	2176-2
 பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப் 	2176-3
 பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார் 	2176-4

 279. அங்கண் அமர் கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும் 	2177-1
 திங்கள் சடை அண்ணலார்தம் திருப்பதி யாவையும் கும்பிட்டு 	2177-2
 எங்கும் தமிழ் மாலை பாடி இங்கு எய்துவன் என்று 	2177-3
 தம் குலத் தாதையா ரோடும் தவ முனிவர்க்கு அருள் செய்தார் 	2177-4

 280. பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும் 	2178-1
 அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன் 	2178-2
 இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் 	2178-3
 ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் 	2178-4

 281.  ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தேணி மேவும் 	2179-1
 நீண்ட சடையார் அடிக்கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே 	2179-2
 ஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும் 	2179-3
 காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார் 	2179-4

 282. அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன்போதுவார் போத 	2180-1
 மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை கொண்டு மீள்வார்கள் மீள 	2180-2
 முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளித் தாமம் நிரத்த 	2180-3
 நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற 	2180-4

 283. சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார் 	2181-1
 என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற 	2181-2
 முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப 	2181-3
 மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க 	2181-4

 284. சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க 	2182-1
 மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத் 	2182-2
 திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று 	2182-3
 பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார் 	2182-4

 285. திருமறைச் சபையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில் 	2183-1
 பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும் 	2183-2
 உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்தி 	2183-3
 வரு புனல் பொன்னி வடபால் குட திசை நோக்கி வருவார் 	2183-4

 286. போற்றிய காதல் பெருக புள்ளிருக்கும் திருவேளூர் 	2184-1
 நால் தடம் தோளுடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணி 	2184-2
 ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி 	2184-3
 ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொற் பதிகம் அணிந்தார் 	2184-4

 287. நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்திக் 	2185-1
 கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறி 	2185-2
 நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப் புன்கூர் நண்ணி 	2185-3
 ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார் 	2185-4

 288. அங்கு நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன 	2186-1
 எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தை 	2186-2
 பங்கர் உறை பழ மண்ணிப் படிக்கரைக் கோயில் வணங்கித் 	2186-3
 தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார் 	2186-4

 289. திருக்குறுக்கைப் பதி மன்னித் திரு வீரட்டானத்து அமர்ந்த 	2187-1
 பொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து அன்னியூர் சென்று போற்றிப் 	2187-2
 பருக்கை வரை உரித்தார் தம் பந்தண நல்லூர் பணிந்து 	2187-3
 விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார் 	2187-4

 290. அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணம் சேரி 	2188-1
 செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி 	2188-2
 எப்பொருளும் தரும் ஈசர் எதிர் கொள் பாடிப் பதி எய்தி 	2188-3
 ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக் குடி உற்றார் 	2188-4

 291. செழுந்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நற்கோலம் 	2189-1
 பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில் 	2189-2
 தழும்பிய தன்னைமையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக் 	2189-3
 கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிக் காவிற் சென்றடைந்தார் 2189-4

 292. திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை 	2190-1
 எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள்ளேனப் 	2190-2
 பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல் மாலைகள் பாடிக் 	2190-3
 கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கை தொழச் சென்றார் 	2190-4

 293. கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண் உற்று இறைஞ்சி முன் போந்து 	2191-1
 மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி 	2191-2
 அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச் 	2191-3
 செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார் 	2191-4

 294. வெங் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித் 	2192-1
 தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி 	2192-2
 அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது 	2192-3
 செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன் குடி சேர்ந்தார் 	2192-4

 295. திருந்து தேவன் குடி மன்னும் சிவ பெருமான் கோயில் எய்திப் 	2193-1
 பொருந்திய காதலில் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார் 	2193-2
 மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று 	2193-3
 அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார் 	2193-4

 296. மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அந் நெறி செல்வார் 	2194-1
 செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்து இடை போய் 	2194-2
 மை திகழ் கண்டர் தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி 	2194-3
 எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்தம் கோயில் 	2194-4

 297. இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கான 	2195-1
 பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவி 	2195-2
 பொன்னங் கழல் இணை போற்றிப் புறம் போந்து அணைந்து புகுந்தார் 	2195-3
 மன்னும் தடம் கரைப் பொன்னி வட குரங்காடுதுறையில் 	2195-4

 298. வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட 	2196-1
 அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளிப் 	2196-2
 புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி 	2196-3
 படை கொண்ட மூவிலை வேலர் பழனம் திருப்பதி சார்ந்தார் 	2196-4

 299. பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் 	2197-1
 உழைபுக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி 	2197-2
 விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் 	2197-3
 அழனக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் 	2197-4

 300. மாட நிரை மணி வீதித் திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் 	2198-1
 நாடு உய்யப் புகலிவரு ஞான போனகர் வந்து நண்ணினார் என்று 	2198-2
 ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து 	2198-3
 நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள நித்தில யானத்து நீங்கி 	2198-4

 301. வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்பால் 	2199-1
 நந்தி திரு அருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் 	2199-2
 ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று 	2199-3
 புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் 	2199-4

 302. மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் 	2200-1
 அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல் 	2200-2
 தணியாத கருத்தின் ஓடும் தம்பெருமான் கோயில் வலம் கொண்டு தாழ்ந்து 	2200-3
 பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் 	2200-4

 303.  கோடல் கோங்கம் குளி கூவிளம் என்னும் திருப்பதிகக் குலவு மாலை 	2201-1
 நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற 	2201-2
 ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று 	2201-3
 பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய 	2201-4

 304. பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத் தொண்டரோடு 	2202-1
 நிலவு திருப்பதி அதன் கண் நிகழும் நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை 	2202-2
 அலையும் மதி முடியார் தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக் 	2202-3
 குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் 	2202-4

 305. குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு அருள் பெற்றுக் குறிப்பின் ஓடும் 2203-1
 படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணி 	2203-2
 அடையும் மனம் உற வணங்கி அரும் தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும் 	2203-3
 புடைவளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்றச் சென்றார் 	2203-4

 306. செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப் புறத்துச் சேரச் செல்வார் 	2204-1
 அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் 	2204-2
 மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் 	2204-3
 பொங்கு மா தவம் உடையார் எனத் தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் 2204-4

 307. மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம் கொண்டு எய்தி 	2205-1
 செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச் சென்று தாழ்ந்து எழுந்து நின்று 	2205-2
 தொழுது ஆடிப் பாடி நறும் சொல் மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே 2205-3
 ஒழியாத நேசம் உடன் உடையவரைக் கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் 	2205-4

 308. அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ 	2206-1
 முதன் மறையோர் அன்பிலாந் துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப் 	2206-2
 பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பயில் பதியும் பணிந்து பாடி 	2206-3
 மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் 	2206-4

 309. சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார் தம் 2207-1
 முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து 	2207-2
 துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள் தொழுது வழிபாடு செய்ய 	2207-3
 நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல் மாலை நிகழப் பாடி 	2207-4

 310. அங்கண் அகன்று அம் மருங்கில் அங்கணர் தம் பதி பிறவும் அணைந்து போற்றிச் 2208-1
 செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறாப் 	2208-2
 பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி வட கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர் 	2208-3
 நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிரமம் பணிய நண்ணும் போதில் 	2208-4

 311. அந் நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் 	2209-1
 கன்னி இள மடப்பிணையாம் காமரு கோமளக் கொழுந்தின் கதிர் செய் மேனி 	2209-2
 மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தித் 	2209-3
 தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத் தானும் மனம் தளர்வு கொள்வான் 	2209-4

 312. மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் 	2210-1
 பற்றியே வரும் குலத்துப் பான்மையினான் ஆதலினால் பரிவு தீரப் 	2210-2
 பொன் தொடியைக் கொடு வந்து போர் கோலச் சேவகராய் புரங்கள் மூன்றும் 	2210-3
 செற்றவர் தம் கோயில் உட் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் 	2210-4

 313. அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார் எழுந்து அருளி அணுக எய்தச் 	2211-1
 செவ்விய மெய்ஞ் ஞானம் உணர் திருஞான சம்பந்தன் வந்தான் என்றே 	2211-2
 எவ் உலகும் துயர் நீங்கப் பணி மாறும் தனிக் காளத்து எழுந்த ஓசை 	2211-3
 எவ் உயிர்க்கும் அவன் கேளா மெல் இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் 	2211-4

 314.  மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாசத் 	2212-1
 தூ நறும் பூரண கும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் 	2212-2
 ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவித் தானும் 	2212-3
 வானவர் நாயகர் மகனார் வருமுன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் 	2212-4

 315.  பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் 	2213-1
 வெள்ளம் நீர் கண் பொழியத் திருமுத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது 	2213-2
 வள்ளலார் எழுக என மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னி 	2213-3
 கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான் 	2213-4

 316. மங்க தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதிச் சடையார் கோயில் 	2214-1
 பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை நின்றும் 	2214-2
 அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணிவாயில் பணிந்து புக்கு 	2214-3
 தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு திருமுன் வணங்கச் சாரும் காலை 	2214-4

 317. கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி 2215-1
 என் இது என்று அருள் செய்ய மழவன்தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற 	2215-2
 பொன் இவளை முயலகனாம் பொருவில் அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில் 2215-3
 முன் அணையக் கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் 	2215-4

 318. அணிகிளர் தார் அவன் சொன்ன மாற்றம் அருளடும் கேட்டு அந் நிலையின் நின்றே 2216-1
 பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து 	2216-2
 மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று 	2216-3
 தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத் தண்தமிழ் பாடினார் சண்பை நாதர் 	2216-4

 319. பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி 	2217-1
 மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் 	2217-2
 கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும் எனப் பார் மிசை நின்று எழுந்து 	2217-3
 பொன்னின் கொடி என ஒல்கிவந்து பெருவலித் தாதை புடை அணைந்தாள் 	2217-4

 320. வன்பிணி நீங்கு மகளைக் கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கக் 	2218-1
 தன்தனிப் பாவையும் தானும் கூடச் சண்பையர் காவலர் தாளில் வீழ 	2218-2
 நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர் அணிவேணி நிமலர் பாதம் 	2218-3
 ஒன்றிய சிந்தை உடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் 	2218-4

 321. நீடு திரு வாச்சிரமம் மன்னும் நேரிழை பாகத்தர் தாள் வணங்கிக் 	2219-1
 கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே 	2219-2
 ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து பணிந்து அடிபோற்றி ஏகிச் 	2219-3
 சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச் சிவபெருமானை இறைஞ்சச் சென்றார் 	2219-4

 322. பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப் பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து 	2220-1
 மண் பரவும் தமிழ் மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து 	2220-2
 திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச் 	2220-3
 சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈகோய் மலையைச் சார்ந்தார் 	2220-4

 323. செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் 	2221-1
 கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசைப் பதிகம் புனைந்து 	2221-2
 பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக் 2221-3
 கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோதில் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் 2221-4

 324. அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து 	2222-1
 தெண்திரை நீர்த் தடம் பொன்னித் தென் கரையாம் கொங்கின் இடை 	2222-2
 வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் 	2222-3
 கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாடச் செங்குன்றூர் 	2222-4

 325. அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து 	2223-1
 பன்னெடுந்தோரணமுதலாப் பயில் அணிகள் பல அமைத்து 	2223-2
 முன் உறவந்து எதிர் கொண்டு பணிந்து ஏத்திமொய் கரங்கள் 	2223-3
 சென்னியுறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழுங்கோயில் 	2223-4

 326. தம் பெருமான் கோயிலினுள் எழுந்து அருளித் தமிழ் விரகர் 	2224-1
 நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க 	2224-2
 இம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை வண் தமிழ் பாடிக் 	2224-3
 கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார் 	2224-4

 327. அப்பாலைக் குட புலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில் 	2225-1
 எப்பாலும் சென்று ஏத்தித் திரு நணாவினை இறைஞ்சிப் 	2225-2
 பைப் பாந்தள் புணைந்த வரைப் பரவிப் பண்டு அமர்கின்ற 	2225-3
 வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார் 	2225-4

 328.  ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண் 	2226-1
 தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலை 	2226-2
 வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வரப் 	2226-3
 பாங்கர் வரையும் குளிரும் பனிப் பருவம் எய்தியதால் 	2226-4

 329. அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலரப் 	2227-1
 பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை எனத் 	2227-2
 துளித் தலைமேல் அறுகு பனி தொடுத்து அசையச் சூழ் பனியால் 	2227-3
 குளிர்க் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும் 	2227-4

 330. மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய்க் 	2228-1
 கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி 	2228-2
 வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடை 	2228-3
 ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகுமால்.	2228-4

 331. நீடிய அப் பதிகள் எலாம் நிறை மாடத் திறைகள் தொறும் 	2229-1
 பேடையுடன் பவளக்கால் புறவு ஒடுங்கப் பித்திகையின் 	2229-2
 தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள் 	2229-3
 ஆடவர் தம் பணைத்தோளும் மணி மார்பும் அடங்குவன 	2229-4

 332. அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் 	2230-1
 பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் 	2230-2
 எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம் 	2230-3
 விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் 	2230-4

 333. அந்நாளில் கொடி மாடச் செங் குன்றூர் அமர்ந்து இருந்த 	2231-1
 மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள் 	2231-2
 பன்னாளும் அந்நாட்டில் பயின்ற அதனால் பனித்த குளிர் 	2231-3
 முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் 	2231-4

 334. அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம் 	2232-1
 முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே 	2232-2
 இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறு என்று 	2232-3
 சென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார் 	2232-4

 335.  அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த 	2233-1
 வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் 	2233-2
 எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே 	2233-3
 செய்வினைத் தீண்டா திரு நீல கண்டம் எனச் செப்பினார் 	2233-4

 336.  ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச் செய்து 	2234-1
 தூய பதிகத் திருக் கடைக் காப்புத் தொடுத்து அணிய 	2234-2
 மேய அப்பொன்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் 	2234-3
 தீய பனிப் பிணி அந்நாட்டு அடங்கவும் தீர்ந்தது அன்றே 	2234-4

 337. அப்பதியின் கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று 	2235-1
 துப்புறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி 	2235-2
 முப்புரி நூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும் 	2235-3
 செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார் 	2235-4

 338. பருவம் அருப் பொன்னிப் பாண்டிக் கொடு முடியார் தம்பாதம் 	2236-1
 மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி 	2236-2
 விரி சுடர் மாளிகை வெஞ்ச மாக் கூடல் விடையவர் தம் 	2236-3
 பெருவில் தானம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார் 	2236-4

 339. செல்வக் கருவூர்த் திருவானிலைக் கோயில் சென்று இறைஞ்சி 	2237-1
 நல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்று 	2237-2
 மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து 	2237-3
 மல்கு திரைப் பொன்னித் தென் கரைத் தானம் பல பணிவார் 	2237-4

 340. பன்னெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் 	2238-1
 அந் நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி 	2238-2
 மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் 	2238-3
 பொன் இயல் வேணிப் புனிதர் பராய்த் துறையுள் புகுந்தார் 	2238-4

 341. நீடும் பராயத் துறை நெற்றித் தனிக் கண்ணர் கோயில் நண்ணிக் 	2239-1
 கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச் சொல் மாலை 	2239-2
 பாடும் கவுணியர் கண்பனி மாரி பரந்து இழியச் 	2239-3
 சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார் 	2239-4

 342. தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவு உற்று 	2240-1
 எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா 	2240-2
 வழுவில் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் 	2240-3
 செழு மலர்ச் சோலைத் திருக் கற்குடி மலை சேர வந்தார் 	2240-4

 343. கற்குடி மாமலை மேல் எழுந்த கனகக் கொழுந்தினைக் கால் வளையப் 	2241-1
 பொன் திரள் மேருச் சிலை வளைத்த போர் விடையாளியைப் போற்றி இசைத்து 	2241-2
 நற்றமிழ் மாலை புனைந்து அருளி ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும் 	2241-3
 செற்றமிழ் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார் 	2241-4

 344. செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப் பள்ளி மேய செழும் சுடரை 	2242-1
 கைம் மலை ஈருரி போர்வை சாத்தும் கண் நுதலாரைக் கழல் பணிந்து 	2242-2
 மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து 	2242-3
 மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் 	2242-4

 345. விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை 2243-1
 நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் 	2243-2
 அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப் 	2243-3
 பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால் 	2243-4

 346. நாரணன் நான்முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும் 	2244-1
 சீரணி நீடு திருக்கயிலை செல்வத் திருவாரூர் மேய பண்பும் 	2244-2
 ஆரணத்து உட் பொருள் ஆயினாரை ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி 	2244-3
 ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார் 	2244-4

 347. கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து காமர் பதி அதன் கண் சில நாள் 	2245-1
 வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவத்துறை வானவர் தாள் 	2245-2
 எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து 	2245-3
 வைதிக மாமணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்திச் செல்வார் 	2245-4

 348.  ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மாமலையே முதலா 	2246-1
 வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ 	2246-2
 ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச 	2246-3
 நீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் 	2246-4

 349. நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும் 2247-1
 இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி 2247-2
 அடும் பணிச் செஞ்சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றிக் 	2247-3
 கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப் பள்ளிப்பதி கை தொழுவார் 	2247-4

 350. சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச் செம் சடை நம்பர் தம் கோயில் எய்தி 	2248-1
 முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கை தொழுவார் 	2248-2
 கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக் கண் நுதலாரை முன் போற்றி செய்து 	2248-3
 மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் 	2248-4

 351. அங்கு அப்பதி நின்று எழுந்தருளி அணிந்திரு வாலம் பொழில் வணங்கி 	2249-1
 பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி பொய் இலியாரைப் பணிந்து போற்றி 	2249-2
 எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள எப்பதியும் தொழுது 	2249-3
 செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக் கண்டியூர் தொழச் சென்று அணைந்தார் 2249-4

 352. கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக் கலந்து அடியாருடன் காதல் பொங்கக் 	2250-1
 கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் 	2250-2
 தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில் 	2250-3
 அண்டர் பிரான் தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி 	2250-4

 353. வினவி எடுத்த திருப் பதிகம் மேவு திருக்கடைக் காப்பு தன்னில் 	2251-1
 அனைய நினைவு அரியேன் செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை 	2251-2
 புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலிக் கவுணியனார் 	2251-3
 துனை புனல் பொன்னித் திரை வலம் கொள் சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார் 2251-4

 354.  அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்று 	2252-1
 ஒப்பில் வண் தமிழ் மாலை ஒருமையால் 	2252-2
 செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார் 	2252-3
 முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன் 	2252-4

 355. தொல்லை நீள் திருச் சோற்றுத் துறை உறை 	2253-1
 செல்வர் கோயில் வலம் கொண்டு தேவர்கள் 	2253-2
 அல்லல் தீர்க்க நஞ்சு உண்ட பிரான் அடி 	2253-3
 எல்லையில் அன்பு கூர இறைஞ்சினார் 	2253-4

 356. இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை 	2254-1
 நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு 	2254-2
 உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் 	2254-3
 சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில் 	2254-4

 357. வேத வேதியர் வேதி குடியினில் 	2255-1
 நாதர் கோயில் அணைந்து நலம் திகழ் 	2255-2
 பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து 	2255-3
 ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை 	2255-4

 358. எழுது மா மறையாம் பதிகத்து இசை 	2256-1
 முழுதும் பாடி முதல்வரைப் போற்றி முன் 	2256-2
 தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ் 	2256-3
 பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில் 	2256-4

 359. வெண்ணி மேய விடையவர் கோயிலை 	2257-1
 நண்ணி நாடிய காதலின் நாண் மதிக் 	2257-2
 கண்ணியார் தம் கழல் இணை போற்றியே 	2257-3
 பண்ணில் நீடும் பதிக முன் பாடினார் 	2257-4

 360. பாடி நின்று பரவிப் பணிந்து போய் 	2258-1
 ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன 	2258-2
 மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர் 	2258-3
 நீடு சண்பை நிறை புகழ் வேதியர் 	2258-4

 361. மொய் தரும் சோலை சூழ் முளரி முள்ளடவி போய் 	2259-1
 மெய் தரும் பரிவிலான் வேள்வியைப் பாழபடச் 	2259-2
 செய்த சங்கரர் திருச்சக்கரப் பள்ளி முன் 	2259-3
 பெய்தவம் அருளினார் இயல் இசைத் தலைவனார் 	2259-4

 362. சக்கரப் பள்ளியார் தம் திருக் கோயில் உள் 	2260-1
 புக்கு அருத்தியின் உடன் புனை மலர்த் தாள் பணிந்து 	2260-2
 அக்கரைப் பரமர்பால் அன்பு உறும் பரிவு கூர் 	2260-3
 மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார் 	2260-4

 363. தலைவர் தம் சக்கரப் பள்ளி தன் இடை அகன்று 	2261-1
 அலைபுனல் பணைகளின் அருகு போய் அருமறைப் 	2261-2
 புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கைப் பதி 	2261-3
 குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார் 	2261-4

 364. மன்னும் அக் கோயில் சேர் மான் மறிக் கையர்தம் 	2262-1
 பொன் அடித்தலம் உறப் புரிவொடும் தொழுது எழுந்து 	2262-2
 இன் இசைத் தமிழ் புனைந்து இறைவர் சேல் ஊருடன் 	2262-3
 பன்னு பாலைத் துறைப் பதி பணிந்து ஏகினார் 	2262-4

 365. காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் 	2263-1
 வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் 	2263-2
 பூவின் மேல் விழை உறும் புகலியார் தலைவனார் 	2263-3
 சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார் 	2263-4

 366. மன்றலங் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் 	2264-1
 துன்று மங்கல வினைத் துழனியால் எதிர் கொளப் 	2264-2
 பொன் தயங்கு ஒளி மணிச் சிவிகையில் பொலிவு உறச் 	2264-3
 சென்று அணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார் 	2264-4

 367. நித்திலச் சிவிகை மேல் நின்று இழிந்து அருளியே 	2265-1
 மொய்த்த அந்தணர் குழாம் முன் செலப் பின் செலும் 	2265-2
 பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே 	2265-3
 அத்தர் தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார் 	2265-4

 368. வெள்ளி மால் வரையை நேர் விரிசுடர்க் கோயிலைப் 	2266-1
 பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர் 	2266-2
 வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர் 	2266-3
 துள்ளுவார் சடையரைத் தொழுது முன் பரவுவார் 	2266-4

 369. பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவுதான் 	2267-1
 வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து 	2267-2
 அரவு உடைச் சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் 	2267-3
 விரவும் அப்பதி அமர்ந்து அருளியே மேவினார் 	2267-4

 370. அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்து அருளி 	2268-1
 மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கிப் 	2268-2
 பன்னும் இன்னிசைப் பதிகமும் பல முறை பாடி 	2268-3
 நல் நெடும் குல நான் மறையவர் தொழ நயந்தார் 	2268-4

 371. நீடும் அப்பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர் 	2269-1
 ஆடுவார் திரு அருள் பெற அகன்று போந்து அங்கண் 	2269-2
 மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார் 	2269-3
 தேடும் மால் அயற்கு அரியவர் திருக்கருகாவூர் 	2269-4

 372. வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச் 	2270-1
 சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே 	2270-2
 அந்தம் இல்லவர் வண்ணமார் அழல் வண்ணம் என்று 	2270-3
 சிந்தை இன்புறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம் 	2270-4

 373. பதிக இன் இசை பாடிப் போய்ப் பிறப்பதி பலவும் 	2271-1
 நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி 	2271-2
 மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள் 	2271-3
 அதிர் சிலம்பு அடியார் மகிழ் அவள் இவள் நல்லூர் 	2271-4

 374. மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த 	2272-1
 தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார் 	2272-2
 என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப் 	2272-3
 பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் 	2272-4

 375. பழுது இல் சீர்த் திருப் பரிதி நல் நியமும் பணிந்து அங்கு 	2273-1
 எழுது மாமறையாம் பதிகத்து இசை போற்றி 	2273-2
 முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை 	2273-3
 வழுவு இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து 	2273-4

 376. பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து 	2274-1
 பங்கயத் தடம் பணைப் பதி பலவும் முன் பணிந்தே 	2274-2
 எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் 	2274-3
 அங்கணர்க்கு இடம் ஆகிய பழம்பதி ஆவூர் 	2274-4

 377. பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்தின் இனிது இருந்த 	2275-1
 மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித் 	2275-2
 தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி 	2275-3
 அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார் 	2275-4

 378. மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொன் தாள் 	2276-1
 நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும் 	2276-2
 பிறை அணிந்தவர் அருள் பெறப் பிரச மென் மலர் வண்டு 	2276-3
 அறை நறும் பொழில் திரு வலம் சுழியில் வந்து அணைந்தார் 	2276-4

 379. மதி புணைந்தவர் வலம் சுழி மருவு மாதவத்து 	2277-1
 முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்து 	2277-2
 எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர் செல மதியைக் 	2277-3
 கதிர் செய் வெண் முகில் குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார் 	2277-4

 380. கலந்த அன்பர்கள் தொழுது எழக் கவுணிய தலைவர் 	2278-1
 அலர்ந்த செம் கமலக் கரம் குவித்து உடன் அணைவார் 	2278-2
 வலம் சுழிப் பெருமான் மகிழ் கோயில் வந்து எய்திப் 	2278-3
 பொலம் கொள் நீள் சுடர்க் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் 	2278-4

 381. மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டு 	2279-1
 உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த் 	2279-2
 திருவலம் சுழி உடையவர் சேவடித் தலத்தில் 	2279-3
 பெருகும் ஆதரவு உடன் பணிந்து எழுந்தனர் பெரியோர் 	2279-4

 382. ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் 	2280-1
 ஆன காதலில் அங்கணவர் தமை வினவும் 	2280-2
 ஊனமில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் 	2280-3
 பான் அலார் மணிகண்டரைப் பாடினார் பரவி 	2280-4

 383. புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே 	2281-1
 இலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினில் இருந்து 	2281-2
 நலம் கொள் காதலின் நாதர்தாள் நாள்தொறும் பரவி 	2281-3
 வலம் சுழிப் பெருமான் தொண்டர் தம் உடன் மகிழ்ந்தார் 	2281-4

 384. மகிழ்ந்த தன்தலை வாழும் அந் நாள் இடை வானில் 	2282-1
 திகழ்ந்த ஞாயிறு துணைப் புணர் ஓரை உள் சேர்ந்து 	2282-2
 நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற 	2282-3
 வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில் 	2282-4

 385. தண் புனல் குளிர் கால் நறும் சந்தனத் தேய்வை 	2283-1
 பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் 	2283-2
 நண்புடைத் துணை நகை மணி முத்தணி நாளும் 	2283-3
 உண்ப மாதுரியச் சுவை உலகு உளோர் விரும்ப 	2283-4

 386. அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையுமான் 	2284-1
 பெறல் அரிய புனல் என்று பேத்தேரின் பின் தொடரும் 	2284-2
 உறை உணவு கொள்ளும் புள் தேம்பிஅயல் இரை தேரும் 	2284-3
 பறவை சிறை விரித்து ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால் 	2284-4

 387. நீண் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும் 	2285-1
 வாண் நிழல் நல் சோலையிலும் மலர் வாவிக் கரை மாடும் 	2285-2
 பூண் நிலவு முத்து அணிந்த பூங்குழலார் முலைத் தடத்தும் 	2285-3
 காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவாரால் 	2285-4

 388. மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் கமல முகை விரிய 	2286-1
 குயில் ஒடுங்காச் சோலையின் மென் தளிர் கோதிக் கூவி எழத் 	2286-2
 துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயிலச் சுடர் வானில் 	2286-3
 வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில் 	2286-4

 389. சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலம் சுழியை 	2287-1
 எண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்கு 	2287-2
 நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி 	2287-3
 விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் 	2287-4

 390. திருவாறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செந்தீயின் 	2288-1
 உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றி 	2288-2
 மருவாரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் 	2288-3
 தருவார் தம் திரு சத்தி முற்றத்தின் புறம் சேர்ந்தார் 	2288-4

 391. திருச் சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள் 	2289-1
 அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக் 	2289-2
 கருச் சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி 	2289-3
 விருப்பு உற்றுத் திருப் பட்டீச்சரம் பணிய மேவும் கால் 	2289-4

 392. வெம்மை தரு வேனில் இடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு 	2290-1
 மும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம் 	2290-2
 தம்மை அறியாதபடி தண் தரளப் பந்தர் எடுத்து 	2290-3
 எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப 	2290-4

 393. அவ்வுரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழச் 	2291-1
 செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார் 	2291-2
 இவ் வினைதான் ஈசர் திரு அருளால் ஆகில் இசைவது என 	2291-3
 மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார் 	2291-4

 394. அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்கக் 	2292-1
 கதிர் ஒளிய மணிக் காம்பு பரிசனங்கள் கைக் கொண்டார் 	2292-2
 மதுர மொழி மறைத் தலைவர் மருங்கு இமையோர் பொழிவாசப் 	2292-3
 புது மலரால் அப்பந்தர் பூம் பந்தரும் போலும் 	2292-4

 395. தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி 	2293-1
 எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்து அருளும் பிள்ளையார் 	2293-2
 வெண் தரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில் 	2293-3
 அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் 	2293-4

 396. பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின் 	2294-1
 ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றி 	2294-2
 ஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்து 	2294-3
 சேர வரும் தொண்டர் உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார் 	2294-4

 397. சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி உள்புக்கு 	2295-1
 வென்றி விடையவர் கோயில் வலம் கொண்டு வெண் கோட்டுப் 	2295-2
 பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு 	2295-3
 முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் 	2295-4

 398. அருள் வெள்ளத் திறம் பரவி அளப்பரய ஆனந்தப் 	2296-1
 பெரு வெள்ளத்து இடை மூழ்கிப் பேராத பெருங்காதல் 	2296-2
 திரு உள்ளப் பரிவுடனே செம்பொன் மலை வல்லியார் 	2296-3
 தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் 	2296-4

 399. அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார் 	2297-1
 செப்பரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி 	2297-2
 ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு 	2297-3
 எப்பொருளுமாய் நின்றார் இரும் பூளை எய்தினார் 	2297-4

 400. தேவர் பிரான் அமர்ந்த திரு இரும் பூளை சென்று எய்தக் 	2298-1
 காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்பப் 	2298-2
 பூவண மாலைகள் நாற்றிப் பூரண பொன் குடம் நிரைத்து அங்கு 	2298-3
 யாவர்களும் போற்றி இசைப்பத் திருத் தொண்டர் எதிர் கொண்டார் 	2298-4

 401. வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத் 	2299-1
 தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழத் தாமும் தொழுதே 	2299-2
 அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று 	2299-3
 பண்டு அரும் இன் இசைப் பதிகம் பரம் பொருளைப் பாடுவார் 	2299-4

 402. நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானை 	2300-1
 நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானை 	2300-2
 தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர் 	2300-3
 பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார் 	2300-4

 403. பாடும் அரதைப் பெரும் பாழியே முதலாகச் 	2301-1
 சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குட வாயில் 	2301-2
 நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி 	2301-3
 நீடு தமிழ் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார் 	2301-4

 404. அங்கண் இனிது அமரு நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் 	2302-1
 செங்கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்து 	2302-2
 கங்கைச் சடை கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால் 	2302-3
 பொங்குமிசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார் 	2302-4

 405. போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உயிரும் 	2303-1
 தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அண்ணனார் 	2303-2
 ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்கு 	2303-3
 நாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார் 	2303-4

 406. தேமருவு மலர்ச் சோலைத்திரு குடமூக்கினில் செல்வ 	2304-1
 மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத் 	2304-2
 தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்க 	2304-3
 கோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் 	2304-4

 407. திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர 	2305-1
 வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் 	2305-2
 உருகா நின்று உளம் மகிழ்க் குட மூக்கை உவந்து இருந்த 	2305-3
 பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் 	2305-4

 408. வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளை 	2306-1
 சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டருடன் செல்வார் 	2306-2
 அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும் 	2306-3
 கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார் 	2306-4

 409. பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம் 	2307-1
 மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் 	2307-2
 தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து 	2307-3
 காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார் 	2307-4

 410. கண்ணாரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதை 	2308-1
 நண்ணாதார் புரம் எரித்த நான் மறையின் பொருளானைப் 	2308-2
 பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்திப் பிறபதியும் 	2308-3
 எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்து அருளி 	2308-4

 411. திரு நாசேச் சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றை 	2309-1
 கரு நாகத்து உரி புணைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சி 	2309-2
 அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து 	2309-3
 பெரு ஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்தின் புற்றார் 	2309-4

 412. மா நாகம் அர்ச்சித்த மலர் கமலத் தாள் வணங்கி 	2310-1
 நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி 	2310-2
 பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடை மருதில் 	2310-3
 பூ நாறும் புனல் பொன்னித் தடங்கரை போய் புகுகின்றார் 	2310-4

 413.  ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளித் 	2311-1
 தாங்க அரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் 	2311-2
 ஈங்கு எனை ஆளுடைய பிரான் இடை மருது ஈதோ என்று 	2311-3
 பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்து அருளினார் 	2311-4

 414. அடியவர்கள் எதிர் கொள்ள எழுந்து அருளி அங்கு அணைந்து 	2312-1
 முடிவில் பரம் பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சிப் 	2312-2
 படியில் வலம் கொண்டு திரு முன்பு எய்திப் பார் மீது 	2312-3
 நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய 	2312-4

 415. பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்த அப்பதியில் 	2313-1
 விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் பதியோடு 	2313-2
 அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால் 	2313-3
 உரவு திருத் தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள் 	2313-4

 416. மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதிக்கரை போய்க் 	2314-1
 குரங்கு ஆடு துறை அணைந்து குழகனார் குரை கழல்கள் 	2314-2
 பெரும் காதலினால் பணிந்து பேணிய இன்னிசை பெருக 	2314-3
 அரும் கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து 	2314-4

 417. அம் மலர்த் தடம் பதிபணிந்து அகன்று போந்து அருகு 	2315-1
 கைம்மலர்க் களத்து இறைவர் தம் கோயில்கள் வணங்கி 	2315-2
 நம் மலத்துயர் தீர்க்க வந்து அருளிய ஞானச் 	2315-3
 செம்மலார் திரு ஆவடு துறையினைச் சேர்ந்தார் 	2315-4

 418. மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூலத் 	2316-1
 தேவர் தம் திரு ஆவடு துறைத் திருத் தொண்டர் 	2316-2
 பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணைப் புகலிக் 	2316-3
 காவலர்க்கு எதிர் கொள்ளும் ஆதரவு உடன் கலந்தார் 	2316-4

 419. வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ்ச் சண்பை 	2317-1
 அந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்தார் 	2317-2
 சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே 	2317-3
 சிந்தை இன்புற இறைவர் தம் கோயில் முன் சென்றார் 	2317-4

 420. நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான் 	2318-1
 மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கி 	2318-2
 ஆடும் ஆதியை ஆவடு துறையுள் ஆர் அமுதை 	2318-3
 நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார் 	2318-4

 421. அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால் 	2319-1
 முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர் 	2319-2
 துன்பு போம் மனத் திருத்தொண்டர் தம்முடன் தொழுதே 	2319-3
 இன்பம் மேவி அப்பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் 	2319-4

 422. மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு 	2320-1
 ஆவது ஆகிய காலம் வந்து அணை உற அணைந்து 	2320-2
 தாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும் 	2320-3
 போவதற்கு அரும் பொருள் பெற எதிர் நின்று புகன்றார் 	2320-4

 423. தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர் 	2321-1
 முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி 	2321-2
 அந்தமில் பொருள் ஆவன ஆவடு துறையுள் 	2321-3
 எந்தையார் அடித் தலங்கள் அன்றோ என எழுந்தார் 	2321-4

 424. சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி 	2322-1
 நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது 	2322-2
 ஒன்றும் மற்றிலேன் உன்னடி அல்லது ஒன்று அறியேன் 	2322-3
 என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் 	2322-4

 425. எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர் 	2323-1
 தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் 	2323-2
 மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி 	2323-3
 அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார் 	2323-4

 426. நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர் 	2324-1
 இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் 	2324-2
 அச் சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து 	2324-3
 உச்சி வைத்தது பசும் பொன் ஆயிரக் கிழி ஒன்று 	2324-4

 427. வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் 	2325-1
 உய்ந்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்கு 	2325-2
 நித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதே 	2325-3
 அத்தனார் திரு அருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் 	2325-4

 428. பணிந்து எழுந்து கை தொழுது முன் பனி மலர்ப் பீடத்து 	2326-1
 அணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டு அருமறைகள் 	2326-2
 துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் 	2326-3
 தணிந்த சிந்தை அத் தாதையார்க்கு அளித்து உரைசெய்வார் 	2326-4

 429.  ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணி 	2327-1
 நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி 	2327-2
 தீது நீங்க நீர் செய்யவும் திருக் கழுமலத்து 	2327-3
 வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால் 	2327-4

 430. என்று கூறி அங்கு அவர்தமை விடுத்த பின் அவரும் 	2328-1
 நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண 	2328-2
 வென்றி ஞான சம்பந்தரும் விருப்பொடு வணங்கி 	2328-3
 மன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார் 	2328-4

 431. அண்ணலார் திரு ஆவடுதுறை அமர்ந்தாரை 	2329-1
 உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து 	2329-2
 மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல் 	2329-3
 தெள் நிலா அணிவார் திருக் கோழம்பம் சேர்ந்தார் 	2329-4

 432. கொன்றைவார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சி 	2330-1
 என்றும் நீடிய இன் இசைப் பதிகம் முன் இயம்பி 	2330-2
 மன்று உளார் மகிழ் வைகல் மாடக் கோயில் மருங்கு 	2330-3
 சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர் 	2330-4

 433. வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய மருந்தைக் 	2331-1
 கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி 	2331-2
 செய்ய இன் இசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து 	2331-3
 நையும் உள்ளத்தர் ஆய்த்திரு நல்லத்தில் நண்ணி 	2331-4

 434. நிலவு மாளிகைத் திரு நல்லம் நீடு மாமணியை 	2332-1
 இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப் 	2332-2
 பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம் 	2332-3
 அலை புனல் திருவழுந்தூர் மாடக் கோயில் அடைந்தார் 2332-4	

435. மன்னுமாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கிப் 	2333-1
 பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவிப் 	2333-2
 பொன்னி மா நதிக் கரையினில் மீண்டு போந்து அணைந்து 	2333-3
 சொன்னவாறு அறிவார் தமைத் துருத்தியில் தொழுதார் 	2333-4

 436. திரைத் தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில் 	2334-1
 வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம் 	2334-2
 உரைத்து மெய் உறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின் 	2334-3
 கரைக் கண் மூவலூர்க் கண் நுதலார் கழல் பணிந்தார் 	2334-4

 437. மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால் 	2335-1
 மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து 	2335-2
 பூ அலம்பு தண் புனல் பணைப் புகலியார் தலைவர் 	2335-3
 வாவி சூழ் திரு மயிலாடு துறையினில் வந்தார் 	2335-4

 438. மல்கு தண் தலை மயிலாடு துறையினில் மருவும் 	2336-1
 செல்வ வேதியர் தொண்டரொடு எதிர் கொளச் சென்று 	2336-2
 கொல்லை மான்மறிக் கையரைக் கோயில் புக்கு இறைஞ்சி 	2336-3
 எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் 	2336-4

 439. உள்ளம் இன்புற உணர் உறும் பரிவு கொண்டு உருகி 	2337-1
 வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிகத் 	2337-2
 தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி 	2337-3
 வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் 	2337-4

 440. அத்திருப்பதி அன்று போய் அணிகிளர் சூலங் 	2338-1
 கைத்தலப் படை வீரர் செம் பொன் பள்ளி கருதி 	2338-2
 மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம் 	2338-3
 பத்தர் தம் உடன் பணிந்து இசைப் பதிகம் முன் பகர்ந்தார் 	2338-4

 441. பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும் 	2339-1
 தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் 	2339-2
 காடு கொண்ட செம் சடைமுடிக் கடவுளர் கருது 	2339-3
 நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர் 	2339-4

 442. பரமர் தம் திருப் பறியலூர் வீரட்டம் பரவி 	2340-1
 விரவு காதலின் வேலையின் கரையினை மேவி 	2340-2
 அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கிச் 	2340-3
 சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர் கொளச் செல்வார் 	2340-4

 443. அடியவர்கள் களி சிறப்பத் திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய்ப் போகிக் 2341-1
 கடி கமழும் மலர் பழனக் கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கிக் 	2341-2
 கொடி மதில் சூழ் தரும புரம் குறுகினார் குண்டர் சாக்கியர் தம் கொள்கை 	2341-3
 படி அறியப் பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் 	2341-4

 444. தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார 	2342-1
 வரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர் கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டு 	2342-2
 பெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த 2342-3
 அருமை உடைப் பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளிச் செய்தார் 	2342-4

 445. கிளைஞரும் மற்று அது கேட்டுக் கெழுவு திரு பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை 	2343-1
 அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் 	2343-2
 வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் 	2343-3
 உளம் நடுங்கிப் பணிந்து திருநீல கண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார் 	2343-4

 446. அலகில் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் 	2344-1
 உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் 2344-2
 பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் பண்பு நீடி 	2344-3
 இலகும் இசை யாழின்கண் அடங்காமையான் காட்டப் பெறுவன் என்றார் 	2344-4

 447. வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை 	2345-1
 பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத 	2345-2
 நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார் 	2345-3
 மாதர் மடப்பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த 	2345-4

 448. வண் புகலி வேதியனார் மாதர் மடப்பிடி எடுத்து வனப்பில் பாடிப் 	2346-1
 பண் பயிலும் திருக்கடைக் காப்பு சாத்த அணைந்து பெரும் பாணர் தாம் 	2346-2
 நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்தப்புக்கு  	2346-3
 எண் பெருகும் அப் பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே 	2346-4

 449. அப்பொழுது திருநீல கண்ட இசைப் பெரும்பாணர் அதனை விட்டு 	2347-1
 மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி 	2347-2
 இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்னச் 	2347-3
 செப்பியது இக் கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் 	2347-4

 450.  வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனைப் போக்க 2348-1
 ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் 	2348-2
 ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என வாங்கிக் கொண்டு அவனி செய்த 	2348-3
 பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் 	2348-4

 451. ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அதென்  ஆள் உடையாள் உடனே கூடச் 	2349-1
 செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்பால் 	2349-2
 எய்திய இக் கருவியினில் அளவு படுமோ நம் தம் இயல்புக்கு ஏற்ப 	2349-3
 வையகத்தோர் அறிவு உற இக்கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் 	2349-4

 452.  சிந்தையால் அளவு படா இசைப் பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் 	2350-1
 இந்த யாழினைக் கொண்டே இறைவர் திருப் பதிக இசை இதனில் எய்த 	2350-2
 வந்தவாறே பாடி வாசிப்பீர் எனக் கொடுப்பப் புகலி மன்னர் 	2350-3
 தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு பெரும் பாணர் தலை மேல் கொண்டார் 2350-4

 453. அணைவுறும் அக் கிளைஞர் உடன் பெரும் பாணர் ஆள் உடைய பிள்ளையார் தம் 2351-1
 துணை மலர்ச் சேவடி பணிந்து துதித்து அருளத் தோணிபுரத் தோன்றலாரும் 	2351-2
 இணையில் பெரும் சிறப்பு அருளித் தொண்டருடன் அப்பதியில் இனிது மேவிப் 	2351-3
 பணை நெடும் கை மதயானை உரித்தவர் தம் பதி பிறவும் பணியச் செல்வார் 	2351-4

 454. பங்கய பாசடைத் தடம் சூழ் பழன நட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி 	2352-1
 மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனைப் பலவும் வணங்கிப் போற்றித் 	2352-2
 தங்கி இசை யாழ்ப் பெரும் பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் 2352-3
 செங்கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திரு நள்ளாறு 	2352-4

 455. நள்ளாற்றில் எழுந்து அருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று 	2353-1
 கொள்ளாற்றில் எதிர் கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத் 2353-2
 தெள்ளாற்று வேணியர் தம் திருவளர் கோபுரம் இறைஞ்சிச் செல்வக் கோயில் 	2353-3
 உள்ளாற்ற வலம் கொண்டு திருமுன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார் 	2353-4

 456. உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல 	2354-1
 மருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர்ப் புளகம் வளர்க்கும் நீராய் 	2354-2
 அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று 	2354-3
 பொருவில் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்துப் போற்றி 	2354-4

 457. யாழ்நரம்பில் ஆர இயல் இசை கூடப் பாடியே எண்ணில் கற்பச் 	2355-1
 சேணளவு பட ஓங்கும் திருக் கடைக் காப்பு சாத்திச் செங்கண் நாகப் 	2355-2
 பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும் 	2355-3
 பாணனார் யாழில் இடப் பால் அறா வாயர் அருள் பணித்த போது 	2355-4

 458. பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு பெரும் பாணனார் தாம் 	2356-1
 தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கிக் 	2356-2
 கொள்ள இடும் பொழுதின் கண் குவலத்தோர் களிகூரக் குலவு சண்பை 	2356-3
 வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத் தொண்டர் உடன் மருவும் காலை 	2356-4

 459. மன்னு திரு நள்ளாற்று மருந்தை வணங்கிப் போந்து வாச நன்னீர்ப் 	2357-1
 பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பு அணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச் 	2357-2
 செந் நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச் சாத்த மங்கை மூதூர் 	2357-3
 தன்னில் எழுந்து அருளினார் சைவ சிகா மணியார் மெய்த் தவத்தோர் சூழ 	2357-4

 460. நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில் நீல நக்கர் தாமும் சைவ 	2358-1
 மறையவனார் எழுந்து அருளும் படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் 	2358-2
 துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி 	2358-3
 முறைமையில் வந்து எதிர் கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் 2358-4

 461. அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் 2359-1
 உயவந்தித்து எழு முன்றில் புடை வலம் கொண்டு உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர் 	2359-2
 மய வந்தி மதிச் சடையார் முன் தாழ்ந்து மாதவம் இவ் வையம் எல்லாம் 	2359-3
 செய வந்த அந்தணனார் செங்கைமேல் குவித்து எழுந்து திருமுன் நின்றார் 	2359-4

 462. போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம 	2360-1
 ஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர் நின்று துதித்துப் போந்து எல்லை இல்லா 	2360-2
 நீற்று நெறி மறையவனார் நீல நக்கர் மனையில் எழுந்து அருளி அன்பால் 	2360-3
 ஆற்றும் விருந்தவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் 	2360-4

 463. நீடு திரு நீல நக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மைப் 	2361-1
 பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி 	2361-2
 ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று 	2361-3
 நாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து 	2361-4

 464. கோது இலா ஆர் அமுதைக் கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டு ஏத்தி 	2362-1
 ஆதி ஆம் மறைப் பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார் 	2362-2
 நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம் பெரும் சீர் நிகழ வைத்துப் 	2362-3
 பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப் பதிகம் போற்றி செய்தார் 	2362-4

 465. பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு 	2363-1
 விரவிய நண்பு உடை அடிகள் விருப்பு உறு காதலில் தங்கி மேவும் நாளில் 	2363-2
 அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் 	2363-3
 உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி 	2363-4

 466. மற்றவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் 2364-1
 பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக் 2364-2
 கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக் கண் நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச் 2364-3
 சொல் தமிழ் மாலைகள் பாடிச் சில நாள் வைகித் தொழுது அகன்றார் தோணி புரத் தோன்றலாம் தாம் 	2364-4

 467. கழிக் கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச் 	2365-1
 சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும் பரவிப் போய்த் தோகைமார் தம் 	2365-2
 விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி 	2365-3
 மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி அங்கு அகன்றார் மூதூர் நின்றும் 	2365-4

 468. அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம் அங்கணரைப் பணிந்து போற்றிப் 2366-1
 பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்து அருளும் பெருமை கேட்டுத் 	2366-2
 திரு மருவு செங் காட்டங் குடி நின்றும் சிறுத் தொண்டரோடிச் சென்று அங்கு 	2366-3
 குருகு மனம் களி சிறப்ப எதிர் கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் 	2366-4

 469. சிறுத் தொண்டர் உடன் கூடச் செங்காட்டங் குடியில் எழுந்து அருளிச் சீர்த்தி 2367-1
 நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர் அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம் 	2367-2
 பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச் சரத்தின் கண் போகம் எல்லாம் 	2367-3
 வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் மெய்த் தொண்டருடன் அணைந்தார் வேதகீதர் 	2367-4

 470. அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டு அருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து 2368-1
 செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு பணிந்து எழுந்து செங்கை கூப்பித் 	2368-2
 தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றிப் 	2368-3
 பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் 	2368-4

 471. போந்து மா மாத்திரர் தம் போர் ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தை 	2369-1
 வாய்ந்த மாதவர் அவர் தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் 	2369-2
 காய்ந்த மால் விடையார் தம் கணபதீச் சரம் பரவு காதல் கூர 	2369-3
 ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் 	2369-4

 472. திருமருகல் நகரின் கண் எழுந்து அருளித் திங்களுடன் செங்கண் பாம்பு 	2370-1
 மருவு நெடும் சடைமவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கிப் போற்றி 	2370-2
 உருகிய அன்புறு காதல் உள் அலைப்பத் தெள்ளும் இசையுடனே கூடப் 	2370-3
 பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம் 2370-4

 473. அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு 2371-1
 பொன்னார் மேருச் சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது 2371-2
 மினார் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத் 2371-3
 தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வான் 2371-4

 474. வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடு பார் இன்றி 2372-1
 ஆளரியேறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போது 2372-2
 கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லாக் கொள்கையினாலும் தீர்க்கக் குறையாதாக 2372-3
 நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் 2372-4

 475.  அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடி 2373-1
 என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை 	2373-2
 மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே 2373-3
 சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் 2373-4

 476.  அடியாராம் இமையவர் தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செங்கண் 	2374-1
 நெடியானும் நான்முகனும் காணாக் கோல நீலவிட அரவு அணிந்த நிமலா வெந்து 	2374-2
 பொடியான காமன் உயிர் இரதி வேண்டப் புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாசக் 2374-3
 கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழும் கவின் மருகற் பெருமானே காவாய் என்றும் 2374-4

 477. வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெருங்கால வலயம் போலும் 	2375-1
 செந்தறு கண் வெள் எயிற்றுக் கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்யதாளா 2375-2
 இந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி நின்றும் ஏறு மாறும் 	2375-3
 அந்தி மதிக் குழவி வளர் செய்ய வேணி அணி மருகற் பெருமானே அருளாய் என்றும் 2375-4

 478. இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் 	2376-1
 அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம் 2376-2
 மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சார மேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல் 2376-3
 வைத் தன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்து அருளி வந்தார் 	2376-4

 479. சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்து 2377-1
 பரிவுறுவாள் தனை நோக்கிப் பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்னக் 2377-2
 கரமலர் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு கண் அருவி சொரிந்து இழியக் காழி வேதப் 2377-3
 புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள் 2377-4

 480. வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர்நல்ல 	2378-1
 இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்குக் 2378-2
 குளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் 2378-3
 தளர்ந்து அழியும் இவனுக்காத் தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன் தனையே சார்ந்துபோந்தேன் 	2378-4

 481. மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல்நின்றேன் 	2379-1
 சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால் துயரம் எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக் 2379-2
 கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப் 2379-3
 பற்றியவாள் அரவு விடம் தீரு மாறு பணைமருகர் பெருமானைப் பாடலுற்றார் 	2379-4

 482. சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை சசி கண்ட மவுலியானை 2380-1
 விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற 2380-2
 படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் 2380-3
 உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையார் உள் மெலிவு என்று எடுத்துப் பாட 2380-4

 483. பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப 	2381-1
 அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டு அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில்வீழ்ந்த 	2381-2
 நங்கை அவள் தணை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் 	2381-3
 மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார் 2381-4

 484. மற்றவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலியபாசம் 	2382-1
 சொற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப் 	2382-2
 பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும் 2382-3
 சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச் சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் 2382-4

 485. புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்த 	2383-1
 செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம் திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக 	2383-2
 மைக் குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் 2383-3
 கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார் 2383-4

 486. மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங் காட்டங் குடியின் மன்னிப் 	2384-1
 பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு உடைக் கோலமே ஆகித் தோன்ற 	2384-2
 உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட 	2384-3
 அருவி கண் வார் உறப் பாடலுற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து 	2384-4

 487. கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக் கணபதி ஈச்சரம் காதலித்த 	2385-1
 அண்டர் பிரானை வணங்கி வைகும் அப்பதியில் சில நாள் போற்றித் 	2385-2
 தொண்டருடன் அருள் பெற்று மற்றத் தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப் 	2385-3
 புண்டரிகத் தடம் சூழ் பழனப் பூம் புகலூர் தொழப் போதுகின்றார் 	2385-4

 488. சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத் தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல 	2386-1
 வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப் பெற்று மீண்ட பின்பு 	2386-2
 நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகன் பல பணிந்து 	2386-3
 பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார் 	2386-4

 489. திருப்புகலூர் திருத் தொண்டரோடும் செம்மை முருகனார் மெய்ம் மகிழ்ந்த 	2387-1
 விருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து வேத முதல்வர் தம் கோயில் எய்திப் 	2387-2
 பொருப்பு உறழ் கோபுரத்து உட் புகுந்து பூமலி முன்றில் புடை வலம் கொண்டு 	2387-3
 ஒருப் படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் 	2387-4

 490. புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம் புகலூர் மன்னு புண்ணியரை 	2388-1
 நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய 	2388-2
 மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து 	2388-3
 திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் 	2388-4

 491.  ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அப் பதி தன்னில் அமரு நாளில் 	2389-1
 வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி 	2389-2
 ஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் 	2389-3
 பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார் 	2389-4

 492. மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார் தாம் 	2390-1
 புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப் பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச் 2390-2
 சிறு இடைப் பொன் தொடிப் பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழச் சிந்தை செய்து 2390-3
 கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார் 	2390-4

 493. நாவுக்கு அரசர் எழுந்து அருளும் நல்ல திருவார்த்தை கேட்ட போதே 	2391-1
 சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு 	2391-2
 மேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்து எதிர் கொள்ள மெய் அன்பர் ஓடும் 2391-3
 பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார் 2391-4

 494. அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும் எதிர் வந்து அணைய வாசப் 	2392-1
 பொங்கு புனல்தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தித் 	2392-2
 தங்களின் அன்பின் முறைமை யாலே தாழ்ந்து வணங்கித் தனித் தனியே 	2392-3
 மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது 	2392-4

 495. மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே 	2393-1
 அப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் அந்தனர் ஆரூர் 	2393-2
 எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறில் பெரும் தவத்தோர் 	2393-3
 செப்பிய வண் தமிழ் மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் 	2393-4

 496. அரசர் அருளிச் செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட 	2394-1
 சிரபுர வேந்தரும் சிந்தையின் கண் தென் திருவாரூர் வணங்குதற்கு 	2394-2
 விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று 	2394-3
 உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் 2394-4

 497. சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொடத் தாமும் 2395-1
 பொன் புகலூர் தொழச் சென்று அணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தை 	2395-2
 விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப் 	2395-3
 பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான் மறைப் பாடிப் போந்தார் 	2395-4

 498. துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின் 	2396-1
 மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்கு உற நோக்கி மகிழ்ந்து அருளி 	2396-2
 அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்கப் 	2396-3
 புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார் 2396-4

 499. வான் உயர் செங்கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் 	2397-1
 தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த 	2397-2
 பால் நிற நீற்றர் பருக்கையானைப் பதிகத் தமிழ் இசைபாடி ஆடித் 	2397-3
 தேனொடு வண்டுமுரலும் சோலைத் திருப்பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் 	2397-4

 500. பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேல் பொலிவது என்ன 	2398-1
 எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளிச் 	2398-2
 செங்கை நிறை மலர் கொண்டு தூவித் திரு இருக் குறள் பாடி ஏத்தித் 	2398-3
 தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர் தனைப் பணிவு உற்றார் தமிழ் விரகர் 	2398-4

 501. படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்கு 	2399-1
 அடியர் சென்று எதிர் கொள எழுந்து அருளும் அஞ்ஞான்று 	2399-2
 வடி கொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க் 	2399-3
 கடி கொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார் 	2399-4

 502. நான மான் மத நளிர் பெரும் சேற்று இடை நறும் பொன் 	2400-1
 தூ நறுந்துகள் சொரிதலில் சுடர் ஒளிப் படலை 	2400-2
 யான வீதிகள் அடி வலித்து அவை கரைந்தலைய 	2400-3
 வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி 	2400-4

 503.  ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் 	2401-1
 தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு 	2401-2
 காடு கொண்டன கதலி தோரணம் நிரைக் கமுகு 	2401-3
 மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம் 	2401-4

 504. மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின் 	2402-1
 கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் 	2402-2
 நீல மா மணி நிழல் பொர நிறம்புகர் படுக்கும் 	2402-3
 பால வாயின பவன வேதிகை மலர்ப் பந்தர் 	2402-4

 505. தழை மலர்த்தடம் சாலைகள் தெற்கள் சதுக்கம் 	2403-1
 குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும் 	2403-2
 விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து 	2403-3
 மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள் 	2403-4

 506. விரவு பேர் அணி வேறு வேறு இன்னன விளங்கும் 	2404-1
 பிரசமென்மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் 	2404-2
 அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் 	2404-3
 புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர் கொள்ளும் பொழுது 	2404-4

 507. வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச் 	2405-1
 சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர் 	2405-2
 அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே 	2405-3
 எந்தை தான் எனை என்று கொள்ளும் கொல் என்று இசைத்தார் 	2405-4

 508.  ஆன அத்திரு பதிகம் முன் பாடிவந்து அணையும் 	2406-1
 ஞான வித்தகர் மெய்த்தவர் சூழ அந் நகரார் 	2406-2
 தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய்த் தொழுது ஏத்த 	2406-3
 வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார் 	2406-4

 509. மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் 	2407-1
 தன் உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம் 	2407-2
 பன் நெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச் 	2407-3
 சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார் 	2407-4

 510. மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிக் 	2408-1
 கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்துத் 	2408-2
 தேடு மால் அயர்க்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில் 	2408-3
 நீடு வாழ் முன்பு நிலமுறப் பல முறை பணிந்தார் 	2408-4

 511. பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம் 	2409-1
 அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில் 	2409-2
 துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் தமைக் கண்டு துதிப்பார் 	2409-3
 தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார் 	2409-4

 512. செஞ் சொல் வண் தமிழ்த் திருப்பதிகத்து இசை எடுத்து 	2410-1
 நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி 	2410-2
 மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து 	2410-3
 அஞ்சு எழுத்தின் மெய் உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார் 	2410-4

 513. அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த 	2411-1
 செங்கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப் 	2411-2
 பொங்கு பேர் ஒளிப் புற்று இடம் கொண்டவர் புனிதப் 	2411-3
 பங்கயப் பதம் தொழுது காலம் தொறும் பணிந்தார் 	2411-4

 514. புற்றிடம் கொளும் புனிதரைப் போற்றி இசை பெருக 	2412-1
 பற்றும் அன்பொடு பணிந்து இசைப் பதிகங்கள் பாடி 	2412-2
 நல்தவத் திருத்தொண்டர்கள் ஒடு நலம் சிறப்ப 	2412-3
 மற்ற வண்பதி தன் இடை வைகும் அந் நாளில் 	2412-4

 515. மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலாத் 	2413-1
 தொல்லை நான் மறை முதல்வர் தம் பதி பல தொழுதே 	2413-2
 எல்லை இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி 	2413-3
 அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார் 	2413-4

 516.  ஊறு காதலில் ஒளி வளர் புற்றிடம் கொண்ட 	2414-1
 ஆறு உலாவிய சடை முடி ஐயரைப் பணிந்து 	2414-2
 நீறு வாழ் என நிகழ் திருத் தொண்டர் களோடும் 	2414-3
 ஈறிலாத் திரு ஞான சம்பந்தர் அங்கு இருந்தார் 	2414-4

 517. அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல 	2415-1
 நங்கள் தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து 	2415-2
 பொங்கு சீர்ப் புகலூர் தொழ அருளினால் போவார் 	2415-3
 தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்து அருள் செய்வார் 	2415-4

 518. புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே 	2416-1
 அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே 	2416-2
 சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பி 	2416-3
 பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே 	2416-4

 519. காழியார் வாழ வந்து அருள் செயும் கவுணியப் பிள்ளையார் தாம் 	2417-1
 ஆழியான் அறிஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் 	2417-2
 பாழி மால் யானையின் உரி புணைந்தார் பனையூர் பணிந்து 	2417-3
 வாழி மாமறை இசைப் பதிகமும் பாடி அப் பதியினில் வைகி 	2417-4

 520. அங்கு நின்று அரிது எழுந்து அருளுவார் அகில காரணமும் ஆனார் 	2418-1
 தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே 	2418-2
 எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர் கொளத் தொழுது எழுந்து அருளி வந்தார் 	2418-3
 பொங்கு தண் பாசடைப் பங்கயப் புனல் வயல் புகலூர் சார 	2418-4

 521. நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாமச் 	2419-1
 சேவுகைத்தவர் திருத் தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீதப் 	2419-2
 பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே 	2419-3
 மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் 	2419-4

 522. தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்து உற வணங்கி 	2420-1
 பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே 	2420-2
 தாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி அத் தனி முதல் தொண்டர் தாமே 	2420-3
 யாவையும் குறை அறுத்து இட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் 2420-4

 523. நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மைச் 2421-1
 சீலம் மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை 	2421-2
 சாலமிக்கு உயர் திருத் தொண்டின் உண்மை திறம் தன்னையே தெளிய நாடிக் 	2421-3
 காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக் கலந்து அருளினார் காழி நாடார் 	2421-4

 524. கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் 	2422-1
 தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி 	2422-2
 உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூர 	2422-3
 நம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப் பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் 	2422-4

 525. புள்ளல் அம்பு தண்புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்றுப் 	2423-1
 பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழச் செல்வார் 	2423-2
 வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல நக்கரும் வளம் பதிக்கு ஏக 	2423-3
 உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் 	2423-4

 526. கண்ணகன் புகல் ஊரினைத் தொழுது போம் பொழுதினில் கடல் காழி 	2424-1
 அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே 	2424-2
 வண்ண நித்திலச் சிவிகையும் பின் வர வழிகொள உறும் காலை 	2424-3
 எண்ணில் சீர்த்திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் 	2424-4

 527.  நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த இந் நலம் கிளர் ஒளி முத்தின் 	2425-1
 தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர் என்றலும் சுடர்த் திங்கள் 	2425-2
 மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் 	2425-3
 போய தெங்குநீர் அங்கு யான் பின் வரப் போவது என் அருள் செய்தார் 	2425-4

 528. என்று பிள்ளையார் மொழிந்து அருள் செய்திட இரும் தவத்து இறையோரும் 	2426-1
 நன்று நீர் அருள் செய்ததே செய்வன் என்று அருள் செய்து நயப்பு உற்ற 	2426-2
 அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அவ் இயல்பினில் செல்வார் 	2426-3
 சென்று முன் உறத் திருவம்பர் அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும் 	2426-4

 529. சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலைச் செல்வார் 	2427-1
 பண்பு மேம் படு பனிக்கதிர் நித்திலச் சிவிகையில் பணிந்து ஏறி 	2427-2
 வண் பெரும் புகல் ஊரினைக் கடந்து போய் வரும் பரிசனத்தோடும் 	2427-3
 திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார் 	2427-4

 530. அம்பர்மா நகர் அணைந்து மா காளத்தில் அண்ணலார் அமர்கின்ற 	2428-1
 செம் பொன் மாமதில் கோயிலை வலம் கொண்டு திருமுன்பு பணிந்து ஏத்தி 	2428-2
 வம்புலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை 	2428-3
 உம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப் பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார் 	2428-4

 531. தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச் 	2429-1
 சூழ்ந்த தொண்டரோடு அப்பதி அமர்பவர் சுரநதி முடிமீது 	2429-2
 வீழ்ந்த வேணியர் தமைப் பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு 	2429-3
 வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் 	2429-4

 532. பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றித் 	2430-1
 திருவின் ஆர்ந்த கோச் செங்கணான் அந்நகர் செய்த கோயிலைச் சேர்ந்து 	2430-2
 மருவு வாய்மை வண் தமிழ் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப் 	2430-3
 பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் 	2430-4

 533. இன்ன வாறு சொல் மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் 	2431-1
 கன்னி மா மதில் திருக்கடவூர் தொழக் காதல் செய்து அருளிப்போய் 	2431-2
 மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின் மன்னவ ரோடும் 	2431-3
 அந்நெடும்பதி அணை உறக் அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் 	2431-4

 534. மற்ற வண் பதி அணைந்து வீர அட்டத்து மழவிடையார் கோயில் 	2432-1
 சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய 	2432-2
 பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன் போற்றி உய்ந்து எதிர் நின்று 	2432-3
 பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி 	2432-4

 535. பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு 	2433-1
 விரவு நண்பு உடை குங்கிலிய பெருங் கலயர் தம் மனை மேவிக் 	2433-2
 கரை இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து 	2433-3
 சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி 	2433-4

 536. சிறப்பு உடைத் திருப்பதி அதன் இடைச் சில நாள் அமர்ந்து அருளோடும் 	2434-1
 விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழச் செல்வார் 	2434-2
 மறைப் பெரும் திருக் கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் 	2434-3
 அறப் பெரும் பயன் அனைய அத் தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் 	2434-4

 537. தக்க அந்தணர் மேவும் அப் பதியினில் தான் தோன்றி மாடத்துச் 	2435-1
 செக்கர் வார் சடை அண்ணலைப் பணிந்து இசைச் செந்தமிழ் தொடைபாடி 	2435-2
 மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்திப் 	2435-3
 பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார் 	2435-4

 538. பாம்புரத் துறை பரமரைப் பணிந்து நல் பதிக இன் இசை பாடி 	2436-1
 வாம்புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றிக் 	2436-2
 காம்பினில் திகழ் கரும்பொடு செம் நெலின் கழனி அம்பணை நீங்கித் 	2436-3
 தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்கு உறச் செல்கிறார் 	2436-4

 539. அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர் கொண்ட 	2437-1
 மெய்ப் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார் 	2437-2
 பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் 	2437-3
 எப் பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர் கொண்டார் 	2437-4

 540. நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி 	2438-1
 நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி 	2438-2
 மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப 	2438-3
 இறைவர் திரு மைந்தர் தமை எதிர் கொள் வரவேற்றார் 	2438-4

 541. வந்து திரு வீழி மிழலை மறை வல்ல 	2439-1
 அந்தணர்கள் போற்றி இசைப்பத் தாமும் மணி முத்தின் 	2439-2
 சந்த மணிச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து அருளி 	2439-3
 உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் 	2439-4

 542. அப்போது அரையார் விரிகோவண ஆடை 	2440-1
 ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி 	2440-2
 மெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார் 	2440-3
 கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியர் 	2440-4

 543. நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண 	2441-1
 மேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார் 	2441-2
 பூவியலும் உந்தியான் போற்றப் புவிக் கிழிந்த 	2441-3
 தேவியலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார் 	2441-4

 544. வலம் கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் 	2442-1
 சலம் கொண்ட வேணித் தனி முதலைத் தாழ்ந்து 	2442-2
 நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல் 	2442-3
 புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார் 	2442-4

 545. போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்து 	2443-1
 சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை 	2443-2
 ஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில் 	2443-3
 நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார் 	2443-4

 546. நீடிய பேரன்பு உருகி உள்ளலைப்ப நேர் நின்று 	2444-1
 பாடி எதிர் ஆடிப் பரவிப் பணிந்து எழுந்தே 	2444-2
 ஆடிய சேவடிகள் ஆர்வம் உற உட்கொண்டு 	2444-3
 மாடுயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார் 	2444-4

 547. வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து ஓர் மா மடத்துச் 	2445-1
 செம் தமிழ்ச் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருளச் 	2445-2
 சந்த மணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பை 	2445-3
 அந்தணர் சூளா மணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார் 	2445-4

 548. அங்கண் அமர்வார் அரனார் அடி இணைக் கீழ்த் 	2446-1
 தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே 	2446-2
 பொங்கு புகழ் வாகீசரும் கூடப் போற்றி இசைத்தே 	2446-3
 எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார் 	2446-4

 549.  ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட 	2447-1
 பாங்கர் திலதைப் பதிமுற்றமும் பணிந்து 	2447-2
 வீங்கு ஒலி நீர் வீழி மழலையினில் மீண்டும் அணைந்து 	2447-3
 ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில் 	2447-4

 550. சேண் உயர் மாடப் புகலி உள்ளார் திரு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக் 	2448-1
 காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம் மிகு காதல் கரை இகப்பப் 	2448-2
 பூணும் மனத்தொடு தோணி மேவும் பொருவிடை யார் மலர்ப் பாதம் போற்றி 	2448-3
 வேணு புரத்தை அகன்று போந்து வீழி மிழலையில் வந்து அணைந்தார் 	2448-4

 551.  ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில் 	2449-1
 வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன 	2449-2
 வீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு மெய் ஞானம் உண்டாரை முன்னா 	2449-3
 ஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி எதிர் கொள் முறைமையில் கொண்டு புக்கார் 	2449-4

 552. சண்பைத் திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரைப் பணிந்து போந்து 	2450-1
 நண்பில் பெருகிய காதல் கூர்ந்து ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப் 	2450-2
 பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே 	2450-3
 எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்து அருளப் பெற வேண்டும் என்றார் 	2450-4

 553. என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு இல் சிவ ஞானப் பிள்ளை யாரும் 2451-1
 நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச 	2451-2
 இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே 	2451-3
 அன்று புகலி அருமறையோர்க்கு அருள் செய்து அவர்க்கு முகம் அளித்தார் 	2451-4

 554. மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப 	2452-1
 பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம் பொருள் ஆனார் தமைப் பரவும் 	2452-2
 சீர் பட்ட எல்லை இனிது செல்லத் திருத் தோணி மேவிய செல்வர் தாமே 	2452-3
 கார் பட்ட வண்கைக் கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள் செய்கின்றார் 	2452-4

 555.  தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூமறை வீழி மிழலை தன்னுள் 	2453-1
 சேண் உயர் விண்ணினின்று இழிந்த இந்தச் சீர் கொள் விமானத்துக் காட்டுகின்றோம் 2453-2
 பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்து அருள் செய்யப் பெரும் தவங்கள் 	2453-3
 வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத் தொடும் உணர்ந்தார் 	2453-4

 556. அறி உற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி 	2454-1
 வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு 	2454-2
 மறி உற்ற கையரைத் தோணி மேல் முன் வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்து 	2454-3
 குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார் 	2454-4

 557.  மைம் மரு பூங்குழல் என்று எடுத்து மாறில் பெரும் திருத்தோணி தன் மேல் 	2455-1
 கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னுள் 	2455-2
 செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என் கொல் என்று 	2455-3
 மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேதவாயர் 	2455-4

 558. செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடி திருக் கடைக் காப்புச் சாத்தி 	2456-1
 அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து 	2456-2
 மஞ்சிவர் சோலைப் புகலி மேவும் மா மறையோர் தமை நோக்கி வாய்மை 	2456-3
 நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள் செய்கின்றார் 	2456-4

 559. பிரம புரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டி யோடும் 	2457-1
 விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி 	2457-2
 வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று 2457-3
 தெரிய உரைத் தருள் செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் 	2457-4

 560. என்று கவுணியப் பிள்ளையார் தாம் இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே 	2458-1
 ஒன்றிய காதலின் உள்ளம் அம் கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து 	2458-2
 மன்றுள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கிச் சென்று 	2458-3
 நின்ற புகழ்த் தோணி நீடுவாரைப் பணியும் நியதியராய் உறைந்தார் 	2458-4

 561. சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத் திருவீழி மேவிய செல்வர் பாதம் 	2459-1
 பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழாத் திருத் தொண்டர் சூழ 	2459-2
 உரவுத் தமிழ்த் தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கு அரசரோடும் 	2459-3
 விரவிப் பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் 	2459-4

 562. மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி 2460-1
 விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு 2460-2
 பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞானப் பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் 2460-3
 கண் நுதலான் திருநீற்றுச் சார் வினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் 2460-4

 563. வானாகி நிலனாகி அனலுமாகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி 	2461-1
 ஊனாகி உயிராகி உணர்வுமாகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் 2461-2
 ஆனாத வடிவாகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது 	2461-3
 கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளிச் செய்வார் 2461-4

 564. உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறுபசி நோய் உமை அடையாது எனினும் உம்பால் 2462-1
 நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் 	2462-2
 இலகு மணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும் உமக்கு இந்தக் காலம் தீர்ந்தால் 	2462-3
 அலகில் புகழீர் தவிர்வ தாகும் என்றே அருள் புரிந்தார் திருவீழி மிழலை ஐயர் 	2462-4

 565. தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச் சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து 2463-1
 நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி 2463-2
 வம்புலா மலர் இதழி வீழிநாதர் மணிக் கோயில் வலம் செய்யப் புகுந்த வேலி 	2463-3
 அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம் அபிமுகத்துப் பீடிகை மேல் காசு கண்டார் 2463-4

 566. காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்துபொங்க 	2464-1
 நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று 	2464-2
 தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர் திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன 2464-3
 ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இருதிறத்து பெரும் தவரும் இருந்த நாளில் 	2464-4

 567. நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டு 2465-1
 சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித் 	2465-2
 தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு 	2465-3
 மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார் 2465-4

 568. திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத் திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் 	2466-1
 ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர் பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு 2466-2
 கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால் காசு தனை வாசி பட வேண்டும் என்பார் 2466-3
 பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் 	2466-4

 569. திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச் சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த 2467-1
 ஒரு காசு வாசிபட மற்றக் காசு நன்று ஆகி வாசி படாது ஒழிவான் அந்தப் 	2467-2
 பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை 2467-3
 வருநாள்கள் தரும் காசு வாசி தீரப் பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் 2467-4

 570. மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப் 2468-1
 பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட 	2468-2
 நல் தவத்தீர் இக் காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க 	2468-3
 அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் 2468-4

 571. அருவிலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்யத் தொண்டர் அளவு இறந்துபொங்கி 	2469-1
 வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆகத் 2469-2
 திரு முடி மேல் திங்களடு கங்கை சூடும் சிவ பெருமான் அருள் செய்ய சிறப்பின் மிக்க 2469-3
 பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கு அரசர் இவர் பெரும் சோற்றுப் பிறங்கல் ஈந்தார் 2469-4

 572. அவனி மிசை மழை பொழிய உணவு மல்க்¢ அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே 2470-1
 புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பலநாள் போற்றி வைகிப் 2470-2
 தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத் தம்பிரான் அருள் பெற்றுத் தலத்தின் மீது 	2470-3
 சிவன் மகிழும் தானங்கள் வணங்கப் போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் 2470-4

 573. நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப் 2471-1
 பாடொலி நீர்த் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி 	2471-2
 நாடு புகழ்த் தனிச் சாத்தங் குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடித் 	2471-3
 தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித் திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் 2471-4

 574. நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப் 2472-1
 பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப் பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி 2472-2
 உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றி 2472-3
 செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித் திரு மலி வெண் துறை தொழுவான் சென்று சேர்ந்தார் 	2472-4

 575. மற்றவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் 2473-1
 பற் பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக் 	2473-2
 கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திருக் களரும் கருதார் வேள்வி 	2473-3
 செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித் திருமறைக் காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே 	2473-4

 576. கார மண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர் தம் தலைவர் தாமும் 2474-1
 சேர எழுந்து அருளிய அப் பேறு கேட்டுத் திறை மறைக் காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கி 	2474-2
 ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் 	2474-3
 வார் முரசம் மங்கள் நாள் தங்கள் மல்க எதிர் கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் 	2474-4

 577. முன் அணைந்த திருநாவுக்கு அரசர் தம்மை முறைமையால் எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப் 	2475-1
 பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார் தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டுச் 2475-2
 சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை 	2475-3
 மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் 	2475-4

 578. சொல் அரசர் உடன் கூடப் பிள்ளையாரும் தூமணி நீர் மறைக் காட்டுத் தொல்லை மூதூர் 2476-1
 மல்கு திரு மறுகின் கண் புகுந்த போது மாதவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் 	2476-2
 எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி 	2476-3
 ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண்மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே 	2476-4

 579. அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த 2477-1
 கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர்க் கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக்குறுகிப் புக்கு 	2477-2
 முடிவில் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள் 	2477-3
 படியின் மறை அருச்சித்துக் காப்பு செய்த பைம் பொன் மணித் திருவாயில் பாங்கு வந்தார் 	2477-4

 580. அரு மறைகள் திருக் காப்புச் செய்து வைத்த அக்கதவம் திறந்திட அம் மறைகள் ஓதும் 2478-1
 பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்கப் பெருமையினால் அன்று முதலாகப் பின்னை 	2478-2
 ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பைத் 	2478-3
 திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கு அரசருக்குச் செப்புகின்றார் 	2478-4

 581.  அப்பரே வேத வனத்து ஐயர் தம்மை அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே 	2479-1
 எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறு 	2479-2
 மெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை 2479-3
 இப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆகில் இது செய்வேன் எனப் பதிகம் எடுத்துப் பாட 	2479-4

 582. பாடிய அப் பதிகப் பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில் 2480-1
 சேடு உயர் பொன் கதவு திருக் காப்பு நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து 	2480-2
 நீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட 	2480-3
 ஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க	2480-4

 583. மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப் 2481-1
 பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி 	2481-2
 அற்பது நிலையினார்கள் அணி திரு மறைக்காடு ஆளும் 	2481-3
 கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார் 	2481-4

 584. கோயில் உட்புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும் 	2482-1
 தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார் 	2482-2
 பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது 	2482-3
 மேயின மெய்யர் ஆகி விதிர்புற்று விரைவின் வீழ்ந்தார் 	2482-4

 585. அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி 	2483-1
 என்பு நெக்கு உருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் 	2483-2
 முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி 	2483-3
 மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார் 	2483-4

 586. புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி 	2484-1
 நிறம் கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத் 	2484-2
 திறிந்தவாறு அடைக்கப்பாடி அருளும் நீர் என்றார் தீய 	2484-3
 மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் 	2484-4

 587. அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும் 	2485-1
 வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும் 	2485-2
 இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும் 	2485-3
 நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே 	2485-4

 588. அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகை யாரும் அஞ்சொல் 	2486-1
 தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார் 	2486-2
 புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ மழை புகலி வேந்தர் 	2486-3
 நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி 	2486-4

 589. அத்திரு வாயில் தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே 	2487-1
 மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற 	2487-2
 வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு இலாப் பெருமையோரை 	2487-3
 கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் 	2487-4

 590. அருமறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்துப் 	2488-1
 பெருமையின் முழங்கப் பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்க 	2488-2
 இரு பெரும் தகையோர் தாமும் எதிர் எதிர் இறைஞ்சிப் போந்து 	2488-3
 திரு மடங்களின் முன் புக்கார் செழும்பதி விழவு கொள்ள 	2488-4

 591. வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து செய் பணியை மிக்க 	2489-1
 ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் 	2489-2
 நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய 	2489-3
 பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார் 	2489-4

 592. திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும் 	2490-1
 ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்க 	2490-2
 வரும் அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் 	2490-3
 பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே 	2490-4

 593. இவ்வகை திருமறைக் காட்டு இறையவர் அருளை உன்னி 	2491-1
 மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் 	2491-2
 மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் 	2491-3
 அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளிப் போக 	2491-4

 594. கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் 	2492-1
 மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார் 	2492-2
 எண்திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா 	2492-3
 அண்டர் தம்பிரானார் தம் பின் போயினார் ஆர்வத் தோடும் 	2492-4

 595. அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் அப்பர் 	2493-1
 எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் 	2493-2
 பொங்கிய காதலால் என்று உரைத்திடப் போன தன்மை 	2493-3
 சங்கை உற்று என்கொல் என்று தாமும் அங்கு அணையப் போந்தார் 	2493-4

 596. அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட 	2494-1
 மன்னிய ஆடல் காட்டத் தளர் இளவள ரும் பாடிச் 	2494-2
 சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு 	2494-3
 இன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் 	2494-4

 597. நீடு சீர்த் திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப் 	2495-1
 பாடு சொல் பதிகம் தன்னால் பரவி அப் பதியில் வைகிக் 	2495-2
 கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு 	2495-3
 தேடு மா மறைகள் கண்டார் திரு மறைக்காடு சேர்ந்தார் 	2495-4

 598. சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழித் தலைவரோடு 	2496-1
 மண் பயில் சீர்த்திச் செல்வ மா மறைக் காட்டு வைகிக் 	2496-2
 கண் பயில் நெற்றியார் தம் கழல் இணை பணிந்து போற்றிப் 	2496-3
 பண் பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே 	2496-4

 599. இவ் வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் 	2497-1
 செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டு 	2497-2
 மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக் 	2497-3
 கை வகை முறைமைத் தன்மை கழிய முன் கலங்கும் காலை 	2497-4

 600. தென்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலே 	2498-1
 அந் நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப 	2498-2
 மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் 	2498-3
 நன் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே 	2498-4

 601. பூழியர் தமிழ் நாட்டு உள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம் 	2499-1
 பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச் 	2499-2
 சூழ் இருள் குழுக்கள் போலத் தொடை மயில் பீலி யோடு 	2499-3
 மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப 	2499-4

 602. பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் 	2500-1
 செறியும் உக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி 	2500-2
 அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ 	2500-3
 நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை 	2500-4

 603. வரிச் சிலைத் தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் 	2501-1
 திரு உயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும் 	2501-2
 குரை கழல் அமைச்சனாராங் குலச் சிறையாரும் என்னும் 	2501-3
 இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாதாக 	2501-4

 604.  ஆங்கு அவர் தாங்கள் அம் கண் அரும் பெறல் தமிழ் நாடு உற்ற 	2502-1
 தீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டே 	2502-2
 ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை 	2502-3
 பூங்கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார் 	2502-4

 605. இந் நெறி ஒழுகு கின்றார் ஏழ் உலகு உய்ய வந்த 	2503-1
 மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச் 	2503-2
 செந்நெறி விளக்கு கின்றார் திரு மறைக்காடு சேர்ந்த 	2503-3
 நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார் 	2503-4

 606. கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க 	2504-1
 நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி 	2504-2
 வாள் படை அமைச்சனார் உம் மங்கையர்க்கு அரசியாரும் 	2504-3
 சேட் படு புலத்தார் ஏனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார் 	2504-4

 607. காதலால் மிக்கோர் தாங்கள் கை தொழும் கருத்தினாலே 	2505-1
 போது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்ய 	2505-2
 பாதங்கள் பணிமின் என்று பரிசன மாக்கள் தன்மை 	2505-3
 மா தவம் சுருதி செய்த மா மறைக் காட்டில் விட்டார் 	2505-4

 608.  ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடைமாந்தர் அம் கண் 	2506-1
 நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி 	2506-2
 ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து 	2506-3
 தேன் கமழ் கை தை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார் 	2506-4

 609. திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்த 	2507-1
 அருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ 	2507-2
 பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் 	2507-3
 வரு முறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார் 	2507-4

 610. மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர் 	2508-1
 கொற்றவன் தேவி யாரும் குலச்சிறையாரும் ஏவப் 	2508-2
 பொற்கழல் பணிய வந்தோம் எனச் சிலர் புறத்து வந்து 	2508-3
 சொற்றனர் என்று போற்றித் தொழுது விண்ணப்பம் செய்தார் 	2508-4

 611. புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா அருள் முன் கூர 	2509-1
 அகம் மலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்று அருளிச் செய்ய 	2509-2
 நகை முகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத் 	2509-3
 தகவு உடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார் 	2509-4

 612. நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச் சண்பை மன்னர் 	2510-1
 மன்றல் அங்குழலியாராம் மானியார் தமக்கும் மானக் 	2510-2
 குன்று என நின்ற மெய்ம்மை குலச் சிறையார் தமக்கும் 	2510-3
 நன்று தான் வினவக் கூறி நல் பதம் போற்றுவார்கள் 	2510-4

 613.  கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் 	2511-1
 மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும் 	2511-2
 கொன்னவில் அயில் வேல் வென்றிச் குலச் சிறையாரும் கூடி 	2511-3
 இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சி விட்டார் 	2511-4

 614. என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர்எல்லாம் 	2512-1
 நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை 	2512-2
 வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு 	2512-3
 நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற 	2512-4

 615. மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூடச் சென்று 2513-1
 பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு 2513-2
 உற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை 	2513-3
 சொற்ற தனி மன்னவருக்குப் புகலி மன்னர் சொல்லி எழுந்து அருளுதற்குத் துணிந்தபோது 	2513-4

 616. அரசர் அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை 2514-1
 உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்து அருள உடன்படுவது ஒண்ணாது என்ன 	2514-2
 பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய 	2514-3
 விரை செய் மலர்த்தாள் போற்றி புகலி வேந்தர் வேய் உறு தோளியை எடுத்து விளம்பினாரே 	2514-4

 617. சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு 	2515-1
 அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்து அருள அமைந்த போது 	2515-2
 புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்தப் புனல் நாட்டில் எழுந்து அருளி இருப்பீர் என்று 	2515-3
 கரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார்	2515-4

 618. வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப் 	2516-1
 பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப் பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்து 2516-2
 மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள் செய்து விடை கொடுத்து மன்னும் 	2516-3
 காதலினால் அருமை உறக் கலந்து நீங்கிக் கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் 2516-4

 619. திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின் 	2517-1
 பெருநாமச் சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து 	2517-2
 ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் 2517-3
 வருநாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மாதவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே 2517-4

 620. பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் 2518-1
 மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் 2518-2
 சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் 2518-3
 எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப2518-4

 621. மலர் மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப 	2519-1
 அலர் வாசப் புனல் குடங்கள் அணி விளக்குத் தூபம் உடன் 	2519-2
 நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர் கொள்ளக் 	2519-3
 கலை மாலை மதிச் சடையார் இடம் பலவும் கை தொழுவார் 	2519-4

 622. தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி 	2520-1
 அண்டர் பிரான் கழல் வணங்கி அருந்தமிழ் மா மறை பாடிக் 	2520-2
 கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடிக் குழகர் தமைத் 	2520-3
 தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுரத் தோன்றலார் 	2520-4

 623. கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி 	2521-1
 எண் ஆர்ந்த திரு இடும்பா வனம் ஏத்தி எழுந்து அருளி 	2521-2
 மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கிப் 	2521-3
 பண் ஆர்ந்த தமிழ் பாடிப் பரவியே செல்கின்றார் 	2521-4

 624. திரு உசாத் தானத்துத் தேவர் பிரான் கழல் பணிந்து 	2522-1
 மருவிய செந்தமிழ்ப் பதிகமால் போற்றும் படி பாடி 	2522-2
 இரு வினையும் பற்று அறுப்பார் எண் இறந்த தொண்டருடன் 	2522-3
 பெருகு விருப்பினர் ஆகிப் பிற பதியும் பணிந்து அருள்வார் 	2522-4

 625. கருங்கழி வேலைப் பாலைக் கழி நெய்தல் கடந்து அருளித் 	2523-1
 திருந்திய சீர் புனல் நாட்டுத் தென் மேல் பால் திசை நோக்கி 	2523-2
 மருங்கு மிடை தடஞ் சாலி மாடு செறி குலத்தெங்கு 	2523-3
 நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழிச் சென்றார் 	2523-4

 626. சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும் 	2524-1
 கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர் வாசத் தடம் எங்கும் 	2524-2
 அங்கு அங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் 	2524-3
 எங்கும் எங்கும் மலர்ப் படுகர் இவை கழிய எழுந்து அருளி 	2524-4

 627. தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம் 	2525-1
 இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை 	2525-2
 மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனைவதுவை 	2525-3
 நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து 	2525-4

 628. நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும்புதல்கள் 	2526-1
 கார் நாடு முகை முல்லைக் கடி நாறு நிலம் கடந்து 	2526-2
 போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கிச் 	2526-3
 சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார் 	2526-4

 629. மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல 	2527-1
 சென்று அணைந்து கடந்து ஏறித் திரி மருப்பின் கலை புணர்மான் 	2527-2
 கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார் 	2527-3
 கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும் குன்றம் 	2527-4

 630. கொடும் குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழுங் குன்றை 	2528-1
 அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி 	2528-2
 நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி 	2528-3
 தொடும் குன்ற மதில் மதுரைத் தொன் நகர் வந்து அணைகின்றார் 	2528-4

 631. இந்நிலை இவர் வந்து எய்த எண் பெரும் குன்றம் மேவும் 	2529-1
 அந்நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்றுப் 	2529-2
 பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத்தீக் கனாக்களோடும் 	2529-3
 துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம் 	2529-4

 632. பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும் 	2530-1
 ஓள்ளிதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் 	2530-2
 கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய 	2530-3
 புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும் 	2530-4

 633. பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக் 	2531-1
 கால்களும் தடுமாறும் ஆடிக் கண்களும் இடமே ஆடி 	2531-2
 மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் 	2531-3
 மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம் 	2531-4

 634. கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள 	2532-1
 வந்தவாறு அமணர் தம்மில் மாறு கொண்டு ஊறு செய்ய 	2532-2
 முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச் 	2532-3
 சிந்தையில் செற்றம் முன்னாத் தீக் குணம் தலை நின்றார்கள் 	2532-4

 635. இப்படி அமணர் வைகும் எப் பெயர்ப் பதியும் எய்தும் 	2533-1
 ஒப்பில் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி 	2533-2
 மெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டு 	2533-3
 செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் 	2533-4

 636. அந்நகர் தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி 	2534-1
 மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித் 	2534-2
 துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி 	2534-3
 இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார் 	2534-4

 637.  சீர் மலி அசோகு தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே 	2535-1
 வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன் பின் ஆக 	2535-2
 ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போக 	2535-3
 ஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார் 	2535-4

 638. குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி ஓடப் 	2536-1
 பண்டிதர் பாழி நின்றும் கழுதை மேல் படர்வார் தம்பின் 	2536-2
 ஒண்தொடி இயக்கி யாரும் உளை இட்டுப் புலம்பி ஓடக் 	2536-3
 கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார் 	2536-4

 639.  கான் இடை நட்டம் ஆடும் கண் நுதல் தொண்டர் எல்லாம் 	2537-1
 மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோம் என்பார் 	2537-2
 கோன் அவன் தானும் வெய்ய கொடும் தழல் முழுகக் கண்டோம் 	2537-3
 ஆனபின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் 	2537-4

 640.  மழவிடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம் தன்னை 	2538-1
 உழறிடச் சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி 	2538-2
 விழ ஒரு புகலும் இன்றி மேதினி தன்னை விட்டு 	2538-3
 நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம் என்பர் 	2538-4

 641.  ஆவது என் பாவிகாள் இக் கனாத்திறம் அடிகள் மார்க்கு 	2539-1
 மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே என்று 	2539-2
 நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் 	2539-3
 யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் 	2539-4

 642. அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச் 	2540-1
 சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் 	2540-2
 பை வளர் அரவேர் அல்குல் பாண்டி மா தேவியார்க்கும் 	2540-3
 மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேன் மேல் 	2540-4

 643. அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த 	2541-1
 உள மகிழ் உணரும் காலை உலகெலாம் உய்ய வந்த 	2541-2
 வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை 	2541-3
 கிளர் உறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார் 	2541-4

 644. அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி 	2542-1
 மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி 	2542-2
 தம்மையும் அறியா வண்ணம் கை மிக்குத் தழைத்துப் பொங்கி 	2542-3
 விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார் 	2542-4

 645. மங்கையர்க் கரசியார் பால் வந்து அடி வணங்கி நின்ற 	2543-1
 கொங்கு அலர் தெரியல் ஆராம் குலச்சிறை யாரை நோக்கி 	2543-2
 நங்கள் தம்பிரானாராய ஞான போனகர் முன்பு எய்தி 	2543-3
 இங்கு எழுந்து அருள உய்ந்தோம் என எர் கொள்ளும் என்றார் 	2543-4

 646. மன்றலங் குழலினாரை வணங்கப் போந்த அமைச்சனாரும் 	2544-1
 வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து 	2544-2
 பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி 	2544-3
 இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும் காலை 	2544-4

 647. அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக் 	2545-1
 கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி 	2545-2
 தம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்று 	2545-3
 நம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார் 	2545-4

 648. திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து 	2546-1
 வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண் குடை நிழற்றப் 	2546-2
 பெருகு ஒளிய திரு நீற்றுத் தொண்டர் குழாம் பெருகிவர 	2546-3
 அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் 	2546-4

 649. துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே 	2547-1
 அந்தணராம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப 	2547-2
 வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்கச் 	2547-3
 செந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப 	2547-4

 650. பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன் நாட்டு இடைப் பரந்த 	2548-1
 எண்ணில் அமண் எனும் பாவ இருஞ்சேனை இரிந்து ஓட 	2548-2
 மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும் 	2548-3
 புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த 	2548-4

 651. துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால் 	2549-1
 அன்னெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு 	2549-2
 மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர் தம் 	2549-3
 கன்னி நாட்டு இடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட 	2549-4

 652. பானல் வயல் தமிழ் நாடு பழி நாடும்படி பரந்த 	2550-1
 மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு 	2550-2
 ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டதொரு 	2550-3
 ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப 	2550-4

 653. புரசை வயக் கட களிற்றுப் பூழியர் வண் தமிழ் நாட்டுத் 	2551-1
 தரை செய் தவப் பயன் விளங்கச் சைவ நெறி தழைத்து ஓங்க 	2551-2
 உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணிச் சின்னம் எலாம் 	2551-3
 பர சமயக் கோளரி வந்தான் என்று பணிமாற 	2551-4

 654. இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்து அருளும் பொழுது இசைக்கும் 2552-1
 ஒப்பில் நித்திலப் பொன் தனிப் பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை 2552-2
 செப்பரும் பெருமைக் குலச் சிறையார் தம் செவி நிறை அமுது எனத் தேக்க 	2552-3
 அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு அரும் களிப்பினர் ஆனார் 	2552-4

 655. அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் அணைந்திடக் கடிது சென்று அணைவார் 2553-1
 நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார் உடன் வரும் நல்தவக் கடலை 	2553-2
 நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக் கண்டு நீள் நிலத்து இடைத் தாழ்ந்து 	2553-3
 பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்கு உற அணைந்து முன் பணிந்தார் 	2553-4

 656. நிலமிசை பணிந்த குலச் சிறையாரை நீடிய பெரும் தவத் தொண்டர் 	2554-1
 பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்தாம் படியின் நின்று எழாவகை கண்டு 	2554-2
 மலர் மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிகச் சேகரர் பாதம் 	2554-3
 குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற 	2554-4

 657. சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து 	2555-1
 விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து விரைந்து சென்றவர் தமை அணைந்து 	2555-2
 கரகமலங்கள் பற்றியே எடுப்பக் கை தொழுது அவரும் முன் நிற்ப 	2555-3
 வரமிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் 	2555-4

 658.  செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் 	2556-1
 நம் பெருமான் தன் திரு அருள் பெருகும் நன்மை தான் வாலிதே என்ன 	2556-2
 வம்பு அலர் அலங்கல் மந்திரி யாரும் மண் மிசைதாழ்ந்து அடி வணங்கித் 	2556-3
 தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்குத் தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் 	2556-4

 659. சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் 	2557-1
 இன்று எழுந்து அருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திரு அருள் உடையோம் 	2557-2
 நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து 	2557-3
 வென்றி கொள் திரு நீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் 2557-4

 660. இங்கு எழுந்து அருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி 2558-1
 மங்கையர்க் கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்து அருளியது என்றே 	2558-2
 அங்கு நீர் சென்று அடிபணிவீர் என்று அருள் செய்தார் எனத் தொழுதார்வம் 	2558-3
 பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர் 	2558-4

 661. ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவுஇலா அருள் புரி கருணை 	2559-1
 தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் 	2559-2
 ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரைத் தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி 	2559-3
 ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ 	2559-4

 662. அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி 	2560-1
 முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து 	2560-2
 மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் 	2560-3
 என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திருவாலவாய் இது என்றார் 	2560-4

 663. தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரம் குவித்து அருளி 2561-1
 மண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே 	2561-2
 எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர் தம் பணியும் 	2561-3
 கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற 	2561-4

 664. பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும் 	2562-1
 தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து 	2562-2
 நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு 	2562-3
 மாடு சூழ் வலம் கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார் 	2562-4

 665.  ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த 	2563-1
 கான கண்டரைக் கண்களின் பயன் பெறக் கண்டு 	2563-2
 நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் 	2563-3
 மீளவும் பல முறை நிலம் உற விழுந்து எழுவார் 	2563-4

 666. அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப் 	2564-1
 பொங்கு காதலின் மெய்ம் மயிர் புளகமும் பொழியும் 	2564-2
 செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி 	2564-3
 எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர் 	2564-4

 667.  நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும் 	2565-1
 மூலம் ஆகிய திரு இருக்குக் குறள் மொழிந்து 	2565-2
 சீல மாதவத் திருத் தொண்டர் தம் ஒடும் திளைத்தார் 	2565-3
 சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன் 	2565-4

 668. சேர்த்தும் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச் 	2566-1
 சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை 	2566-2
 பேர்த்தும் இன்புறப் பாடி வெண் பிறை அணி சென்னி 	2566-3
 மூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய 	2566-4

 669. பிள்ளையார் எழுந்து அருளி முன் புகுதும் அப் பொழுது 	2567-1
 வெள்ள நீர் பொதி வேணியார் தம்மைத் தொழும் விருப்பால் 	2567-2
 உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் 	2567-3
 தெள்ளு நீர் விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த 	2567-4

 670. மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக் 	2568-1
 கரும் குழல் கற்றை மேல் குவிகைத்து அருளி உடையார் 	2568-2
 பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்னப் 	2568-3
 பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார் 	2568-4

 671. தென்னவன் பெருந் தேவியார் சிவக் கன்றின் செய்ய 	2569-1
 பொன்னடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் 	2569-2
 மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் 	2569-3
 இன்னருட் பெரும் சிறப் பொடும் திருக்கையால் எடுத்தார் 	2569-4

 672. ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல்தவத்து 	2570-1
 மானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தே 	2570-2
 பானலங் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறி 	2570-3
 யானும் என் பதியும் செய்த தவம் என் கொல் என்றார் 	2570-4

 673. யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக் 	2571-1
 காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் 	2571-2
 சூழும் ஆகிய பர சமயத்து இடைத் தொண்டு 	2571-3
 வாழும் நீர் மையீர் உமைக் காண வந்தனம் என்றார் 	2571-4

 674. இன்னவாறு அருள் செய்திடத் தொழுது அடி வீழ்ந்தார் 	2572-1
 மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய 	2572-2
 அன்ன மென் நடையார் தமக்கு அருள் செய்து போக்கித் 	2572-3
 துன்னு மெய்த் தொண்டர் சூழ வந்து அருளும் அப் பொழுது 	2572-4

 675. செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்து 	2573-1
 அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி 	2573-2
 மல்குகார்அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள 	2573-3
 எல்லையில் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் 	2573-4

 676. அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து 	2574-1
 மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச் 	2574-2
 சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப் 	2574-3
 பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் 	2574-4

 677. பரவு காதலில் பாண்டிமா தேவியார் அருளால் 	2575-1
 விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பக் 	2575-2
 சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் 	2575-3
 இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய 	2575-4

 678. வழுதி மாநகர் அதன் இடை மாமறைத் தலைவர் 	2576-1
 பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட 	2576-2
 கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி 	2576-3
 இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால் 	2576-4

 679. அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த 	2577-1
 துங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள் 	2577-2
 எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த 	2577-3
 பொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய் 	2577-4

 680.  மற்றிவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச் 	2578-1
 சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் 	2578-2
 கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகி 	2578-3
 வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் 	2578-4

 681. வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கி 	2579-1
 ஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்ன 	2579-2
 ஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார் 	2579-3
 பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் 	2579-4

 682. புக்க போது அவர் அழிவுறு மனத்து இடைப் புலர்ச்சி 	2580-1
 மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி 	2580-2
 ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்னத் 	2580-3
 தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார் 	2580-4

 683.  ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று 	2581-1
 காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர் 	2581-2
 மாவலாய் உன் தன் மதுரையில் சைவ வேதியர் தாம் 	2581-3
 மேவலால் இன்று கண்டுமுட்டியாம் என்று விளம்ப 	2581-4

 684. என்று கூறலும் கேட்டு முட்டி யானும் என்று இயம்பி 	2582-1
 நன்று நல் அறம் புரிந்தவா நான் என்று நகுவான் 	2582-2
 கன்றும் உள்ளத்தன் ஆகி அக் கண் நுதல் அடியார் 	2582-3
 இன்று இம் மாநகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் 	2582-4

 685.  மாலை வெண் குடை வளவர் சோணாட்டு வண்புகலிச் 	2583-1
 சூல பாணிபால் ஞானம் பெற்றான் என்று சுருதிப் 	2583-2
 பாலன் அன்பர் தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை 	2583-3
 மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல 	2583-4

 686. என்று கூறுவார் இத்திறம் முன்பு தாம் அறிந்தது 	2584-1
 ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் 	2584-2
 மன்றலம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம் 	2584-3
 சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான் 	2584-4

 687.  மற்ற மா மறை மைந்தன் இம் மருங்கு அணைந்தானேல் 	2585-1
 உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப 	2585-2
 செற்றம் மீக் கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் 	2585-3
 கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் 	2585-4

 688. வந்த அந்தணன் தன்னை நாம் வலிது செய்து போக்கும் 	2586-1
 சிந்தை அன்றி அச் சிறு மறையோன் உறை மடத்தில் 	2586-2
 வெம் தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால் 	2586-3
 இந்த நன்னகர் இடத்திரான் ஏகும் என்று இசைத்தார் 	2586-4

 689.  ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப் 	2587-1
 போவது என்று அவரைப் போக்கிப் பொய் பொருளாகக் கொண்டான் 	2587-2
 யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும் 	2587-3
 பூவணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள் 	2587-4

 690. மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்தாம் 	2588-1
 என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ 	2588-2
 முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று 	2588-3
 பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய் என்றார் 	2588-4

 691. தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான் 	2589-1
 காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும் 	2589-2
 தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு 	2589-3
 மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான் 	2589-4

 692. வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் 	2590-1
 கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டியானும் காதல் 	2590-2
 வண்டுணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்த 	2590-3
 பண்பு மற்று இதுவேயாகும் பரிசு வேறு இல்லை என்றான் 	2590-4

 693. மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கு அரசியார் தாம் 	2591-1
 நின்னிலை இதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மை 	2591-2
 அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து 	2591-3
 துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார் 	2591-4

 694. சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழு மலத்தார் வேந்தன் 	2592-1     
 வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சி யோடும் 	2592-2
 கொந்தலர் குழலார் போதக் குலச் சிறையார் அங்கு எய்த 	2592-3
 இந்த நன் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் 	2592-4

 695. கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்று 	2593-1
 பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு என்பார் 	2593-2
 இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம் 	2593-3
 மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார் 	2593-4

 696. மானியார் தாமும் அஞ்சி வஞ்சகப் புலையர் தாங்கள் 	2594-1
 ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி 	2594-2
 ஞான சம்பந்தர் தம்பால் நன்மை அல்லாது செய்யும் 	2594-3
 ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் 	2594-4

 697. இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல் தென்னவன் ஆன 	2595-1
 அவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலை யாது என்னில் 	2595-2
 தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீ 	2595-3
 சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேரச் செய்தார் 	2595-4

 698.  ஆதி மந்திரம் அஞ்சு எழுத்து ஓதுவார் நோக்கும் 	2596-1
 மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே 	2596-2
 பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள் 	2596-3
 சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார் 	2596-4

 699. தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீத்தொழில் சரியக் 	2597-1
 கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி 	2597-2
 விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை 	2597-3
 உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் 	2597-4

 700.  மந்திரச் செயல் வாய்த்து இல மற்று இனிச் செய்யும் 	2598-1
 புந்தியாவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்கு 	2598-2
 அந்தண் மாதவர் திரு மடப் புறத்து அயல் இருள் போல் 	2598-3
 வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் 	2598-4

 701. திரு மடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர் 	2599-1
 மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப் 	2599-2
 பரிசனத்தவர் பதைப் பொரும் சிதைத்து நீக்கி 	2599-3
 அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் 	2599-4

 702. கழுமலப் பதிக் கவுணியர் கற்பகக் கன்றைத் 	2600-1
 தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினைச் சொன்ன 	2600-2
 பொழுது மாதவர் துயிலும் இத்திரு மடப் புறம்பு 	2600-3
 பழுது செய்வதோ பாவிகாள் எனப் பரிந்து அருளி 	2600-4

 703.  என் பொருட்டு அவர் செய்த தீங்கு ஆயினும் இறையோன் 	2601-1
 அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம் 	2601-2
 முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் 	2601-3
 மன் புரக்கும் மெய்ம்முறை வழு என மனம் கொண்டார் 	2601-4

 704.  வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் 	2602-1
 செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் 	2602-2
 சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப் 	2602-3
 பையவே சென்று பாண்டியற்கு ஆக எனப் பணித்தார் 	2602-4

 705. பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் 2603-1
 ஆண் தகையார் குலச் சிறையார் அன்பினாலும் அரசன் பால் அபராதம் உறுதலாலும் 2603-2
 மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்பு அகலப் புகலி வேந்தர் 2603-3
 தீண்டி இடப் பேறு உடையன் ஆதலாலும் தீப்பிணி பையவே செல்க என்றார் 	2603-4

 706. திருந்து இசைப் பதிகம் தொடை திரு ஆல வாயின் 	2604-1
 மருந்தினைச் சண்பை மன்னவர் புனைந்திட அருளால் 	2604-2
 விரிந்த வெம் தழல் வெம்மை போய்த் தென்னனை மேவிப் 	2604-3
 பெருந்தழல் பொதி வெதுப்பு எனப் பெயர் பெற்றதன்றே 	2604-4

 707. செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில் 	2605-1
 நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகிக் 	2605-2
 கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப 	2605-3
 வெய்யவன் குண கடல் இடை எழுந்தன மீது 	2605-4

 708. இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில் 	2606-1
 குரவ ஓதியார் குலச் சிறை யாருடன் கேட்டுச் 	2606-2
 சிவபுரப் பிள்ளை யாரை இத் தீயவர் நாட்டு 	2606-3
 வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி 	2606-4

 709. பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு 	2607-1
 திரு மடப்புறம் மருங்கு தீது இன்மையில் தெளிந்து 	2607-2
 கரும் உருட்ட மண்கையர் செய்தீங்கு இது கடைக்கால் 	2607-3
 வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது 	2607-4

 710. அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள் 	2608-1
 உரை செயப் பதைத்து ஒரு தனித் தேவியார் புகுத 	2608-2
 விரைவும் அச்சமும் மேல் கொளக் குலச்சிறையாரும் 	2608-3
 வரை செய் பொன்புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் 	2608-4

 711. வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை 	2609-1
 காந்து வெந்தழல் கதும் என மெய் எலாம் கவர்ந்து 	2609-2
 போந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து 	2609-3
 தீந்து போம்படி எழுந்தது விழுந்துடல் திரங்க 	2609-4

 712. உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க 	2610-1
 அணையல் உற்றவர் அருகு தூரத்து இடை அகலப் 	2610-2
 புணர் இளம் கதலிக் குருத்தொடு தளிர் புடையே 	2610-3
 கொணரினும் சுருக்கொண்டு அவை நுண்துகள் ஆக 	2610-4

 713. மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த 	2611-1
 திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல் மேல் 	2611-2
 உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக் 	2611-3
 கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன் 	2611-4

 714.  ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம் 	2612-1
 மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து 	2612-2
 போன கங்குலில் புகுந்தது இன் விளைவு கொல் என்பார் 	2612-3
 மான முன் தெரியா வகை மன்னன் மாட்டு அணைந்தார் 	2612-4

 715. மால் பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் 2613-1
 மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் 2613-2
 பீலிகொடு தை வருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து 	2613-3
 மேல் எரியும் பொறி சிதறி வீழக் கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார் 2613-4

 716. கருகிய மாசு உடையக்கைத் தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்துக்காவாய் 	2614-1
 அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப் 2614-2
 பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போல 	2614-3
 ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரைப் பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான்2614-4

 717. பாண்டி மாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் 	2615-1
 பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மை 	2615-2
 ஆண்டு கொண்டவர் பால் கங்குல் அமணர் தாம் செய்த தீங்கு 	2615-3
 மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற 	2615-4

 718. கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து 	2616-1
 மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் 	2616-2
 செற்றவர் அன்பர் தம்பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு 	2616-3
 முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார் 	2616-4

 719. இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு 	2617-1
 வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண 	2617-2
 அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து 	2617-3
 பெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று 	2617-4

 720. காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும் 	2618-1
 மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் 	2618-2
 மேய வேணியர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் 	2618-3
 தீய இப்பிணியே அன்றி இப் பிறவியும் தீரும் என்றார் 	2618-4

 721. மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற 	2619-1
 ஞான சம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல 	2619-2
 ஆன போது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும் 	2619-3
 மானம் இல்லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல் உற்றான் 	2619-4

 722. மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் 	2620-1
 இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி 	2620-2
 மன்னிய சைவ நீதி மா மறைச் சிறுவர் வந்தால் 	2620-3
 அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன் என்றான் 	2620-4

 723. என்று முன் கூறிப் பின்னும் யான் உற்ற பிணியைத் தீர்த்து 	2621-1
 வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன 	2621-2
 அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச் 	2621-3
 சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார் 	2621-4

 724. பாய் உடைப் பாதகத்தோர் திரு மடப் பாங்கு செய்த 	2622-1
 தீவினைத் தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் 	2622-2
 மேய அத்துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு 	2622-3
 நாயகப் பிள்ளையார் தம் நற்பதம் பணிவார் ஆகி 	2622-4

 725. மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல் கொண்டே 	2623-1
 அன்னமென் நடையினாரும் அணிமணிச் சிவிகை ஏறி 	2623-2
 மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் 	2623-3
 முன் அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார் 	2623-4

 726. திருமடம் சாரச் சென்று சேயரிக் கண்ணினார் முன் 	2624-1
 வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை 	2624-2
 சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப் 	2624-3
 பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்து கின்றார் 	2624-4

 727.  பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும் 	2625-1
 ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை 	2625-2
 ஆண் தகையாரும் ஈண்ட அழையும் என்று அருளிச் செய்ய 	2625-3
 மீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரை உறும் விருப்பின் மிக்கார் 	2625-4

 728. ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை 	2626-1
 வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தைத் 	2626-2
 தேன் நக்க மலர்க் கொன்றைச் செஞ் சடையார் சீர் தொடுக்கும் 	2626-3
 கானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள் 	2626-4

 729. கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே 	2627-1
 மண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப் 	2627-2
 புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நில முற விழுந்தார் 	2627-3
 கொண்ட குறிப் போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் 	2627-4

 730. உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித் 	2628-1
 தரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக் 	2628-2
 கரையில் கவலைக் கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று 	2628-3
 விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு 	2628-4

 731. அருமறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட 	2629-1
 இருவரையும் திருக்கையால் எடுத்து அருளித் தேற்றிடவும் 	2629-2
 தெரு மந்து தெளியாதார் தமை நோக்கிச் சிறப்பு அருளிச் 	2629-3
 திருவுடையீர் உங்கள் பால் தீங்கு உளதோ என வினவ 	2629-4

 732. வெஞ்சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே 	2630-1
 அஞ்சினோம் திருமேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் 	2630-2
 வஞ்சகர் மற்று அவர் செய்த தீத்தொழில் போய் மன்னவன் பால் 	2630-3
 எஞ்சல் இலாக் கொடுவிதுப்பாய் எழா நின்றது எனத் தொழுது 	2630-4

 733.  வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம் 	2631-1
 செய்யும் மதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால் 	2631-2
 மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் 	2631-3
 உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் 	2631-4

 734. என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் 	2632-1
 ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர் தம்மை 	2632-2
 இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் 	2632-3
 வென்று மீனவனை வெண் நீறு அணிவிப்பன் விதியால் என்றார் 	2632-4

 735. மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் 	2633-1
 அழுந்தும் இடர்க் கடல் இடை நின்று அடியோமை எடுத்து அருள 	2633-2
 செழும் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய்தவத்தால் 	2633-3
 எழுந்து அருளப் பேறு உடையேம் என் பெறோம் எனத் தொழலும் 	2633-4

 736.  ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் 	2634-1
 பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச் 	2634-2
 சேவுயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன் என்று 	2634-3
 பூவலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார் 	2634-4

 737. வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தினின்று 	2635-1
 மெய்யணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து 	2635-2
 கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்டச் 	2635-3
 செய்யவார் சடையார் மன்னும் திரு ஆல வாயுள் புக்கார் 	2635-4

 738.  நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்யத் 	2636-1
 தீக் கனல் மேனியானே திருவுளமே என்று எண்ணில் 	2636-2
 பாக்கியப் பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை 	2636-3
 நோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகம் தான் நுவலல் உற்றார் 	2636-4

 739. கான் இடை ஆடுவாரைக் காட்டு மா உரி முன் பாடித் 	2637-1
 தேன் அலர் கொன்றையார் தம் திருவுளம் நோக்கிப் பின்னும் 	2637-2
 ஊனமில் வேத வேள்வி என்று எடுத்துத் துரையின் மாலை 	2637-3
 மானமில் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி 	2637-4

 740.  ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக் 	2638-1
 காலனை மார்க் கண்டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று 	2638-2
 ஞலம் நின் புகழே ஆக வேண்டும் நான் மறைகள் ஏத்தும் 	2638-3
 சீலமே  ஆலவாயில் சிவ பெருமானே என்றார் 	2638-4

 741. நாதர் தம் அருள் முன்பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப் 	2639-1
 போதுவார் பணிந்து போற்றி விடை கொண்டு புனித நீற்று 	2639-2
 மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ 	2639-3
 மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் 	2639-4

 742. அம் மலர்க் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச் 	2640-1
 செம் மணிப் பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் 	2640-2
 எம் மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றி 	2640-3
 மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே 	2640-4

 743. பல்லிய நாதம் பொங்கப் படர் திருநீற்றின் சோதி 	2641-1
 நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன 	2641-2
 வில் வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு 	2641-3
 எல்லையில் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத 	2641-4

 744. கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார் 	2642-1
 நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு 	2642-2
 பண்ணிய தவங்கள் என் கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப் 	2642-3
 புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் 	2642-4

 745. தென்னவர் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது 	2643-1
 பின் வர அமைச்சர் முன்பு பெரும் தொண்டர் குழத்துச் செல்லப் 	2643-2
 பொன் அணி மாட வீதி ஊடு எழுந்து அருளிப் புக்கார் 	2643-3
 கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடையப் பிள்ளை 	2643-4

 746. கொற்றவன் தன் பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப் 	2644-1
 பொன் தட மதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற 	2644-2
 முன் துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப் பொன் பீடம் 	2644-3
 மற்றவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் 	2644-4

 747. மந்திரி யாரைப் பின்னும் எதிர் செல மன்னன் ஏவச் 	2645-1
 சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் 	2645-2
 பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் 	2645-3
 நம் தனிச் சமயம் தன்னை நாட்டு மாறு என்று பின்னும் 	2645-4

 748. நின் அற நெறியை நீயே காத்து அருள் செய்தி ஆகில் 	2646-1
 அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் 	2646-2
 முன் உற ஒக்கத் தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது 	2646-3
 என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார் 	2646-4

 749. பொய் தவம் ஆகக் கொண்ட புன் தலைச் சமணர் கூறச் 	2647-1
 செய்தவப் பயன் வந்து எய்தும் செவ்வி முன் உறுதலாலே 	2647-2
 எய்திய தெய்வச் சார்வால் இரு திறத்தீரும் தீரும் 	2647-3
 கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான் 	2647-4

 750. என்று அவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லைத் 	2648-1
 தென் தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார் 	2648-2
 வன் தனிப் பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு 	2648-3
 பொன் திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார் 	2648-4

 751. குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும் 	2649-1
 தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ் நாட்டு மன்னன் 	2649-2
 நிலத்து இடை வானின் நின்று நீள் இருள் நீங்க வந்த 	2649-3
 கலைச் செழும் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டார் 	2649-4

 752. கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கித் 	2650-1
 தண்டுணர் முடியின் பாங்கர்த் தமனிய பீடம் காட்ட 	2650-2
 வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை 	2650-3
 கொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் 	2650-4

 753. செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று 	2651-1
 விழி உற நோக்கல் ஆலே வெம்மை நோய் சிறிது நீங்கி 	2651-2
 அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கிக் 	2651-3
 கெழுவுறு பதியாது என்று விருப்புடன் கேட்ட போது 	2651-4

 754.  பொன்னி வளம் தரு நாட்டுப் புனல் பழனப் புறம் பணை சூழ் 	2652-1
 கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் எனச் சிறந்த 	2652-2
 பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் 	2652-3
 தென்னவன் முன்பு அருள் செய்தார் திருஞான சம்பந்தர் 	2652-4

 755. பிள்ளையார் செம் பொன் மணிப் பீடத்தில் இருந்த பொழுது 	2653-1
 உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர் 	2653-2
 கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோபத்தீத் 	2653-3
 துள்ளி எழும் எனக் கண்கள் சிவந்து பல சொல்லுவார் 	2653-4

 756. காலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல் 	2654-1
 பீலி சேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார் 	2654-2
 ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித் தாங்கு 	2654-3
 கோலுநூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள் 	2654-4

 757. பிள்ளையார் அது கோளாப் பேசுக நும் பொருள் எல்லை 	2655-1
 உள்ளவாறு என்று அருள ஊத்தைவாய்ப் பறி தலையார் 	2655-2
 துள்ளி எழும் அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற 	2655-3
 ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி 	2655-4

 758. தென்னவன் தன்னை நோக்கித் திருமேனி எளியர் போலும் 	2656-1
 இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்ணிலார்கள் 	2656-2
 மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர் நல்கும் 	2656-3
 பின்னை இவ்வமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் 	2656-4

 759. மாறனும் அவரை நோக்கி வருந்தநீ என்று மற்று 	2657-1
 வேறு ஆவது என் கொல் என்மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் 	2657-2
 ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள் 	2657-3
 தேறிய தெய்வத்தன்மை என்னிடைத் தெரிப்பீர் என்றான் 	2657-4

 760. ஞான ஆரமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி 	2658-1
 மானினேர் விழியினாய் கேள் மற்று எனைப் பாலன் என்று 	2658-2
 நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் 	2658-3
 யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம்பாடி 	2658-4

 761. பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் 	2659-1
 சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் 	2659-2
 இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும் 	2659-3
 தெற்று எனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப 	2659-4

 762 . மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு 	2660-1
 துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள் 	2660-2
 உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம் 	2660-3
 முன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார் 	2660-4

 763. யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று 	2661-1
 வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார் 	2661-2
 மீது தம் பீலி கொண்டு தடவிட மேல் மேல் வெப்புத் 	2661-3
 தீதுறப் பொறாது தென்னவன் சிரபுரத்தவரைப் பார்த்தான் 	2661-4

 764. தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர் 	2662-1
 அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே 	2662-2
 மன்னும் மந்திரமும் ஆகி மருந்துமாய் தீர்ப்பது என்று 	2662-3
 பன்னிய மறைகள் ஏத்திப் பகர் திருப்பதிகம் பாடி 	2662-4

 765. திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன் 	2663-1
 பொருவரு வெப்பு நீங்கிப் பொய்கையில் குளிர்ந்தது அப்பால் 	2663-2
 மருவிய இடப்பால் மிக்க அழல் என மண்டு தீப்போல்     2664-3
 இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாதுஎன்னப் பொங்க2663-4

 766. உறி உடைக் கையர் பாயின் உருக்கையர் நடுக்கம் எய்தி 	2664-1
 செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீத்தம்மை 	2664-2
 ஏறிய மாகடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் 	2664-3
 அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார் 	2664-4

 767. பலர் தொழும் புகலி மன்னர் ஒரு புடை வெப்பைப் பாற்ற 	2665-1
 மலர்தலை உலகின்மிக்கார் வந்து அதிசயத்துச் சூழ 	2665-2
 இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் 	2665-3
 உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே 	2665-4

 768. மன்னவன் மொழிவான் என்னே மதித்த இக் காலம் ஒன்றில் 	2666-1
 வெம் நரகு ஒரு பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு பால் ஆகும் 	2666-2
 துன்னு நஞ்சு ஒரு பால் ஆகும் சுவை அமுது ஒரு பால் ஆகும் 	2666-3
 என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் 	2666-4

 769.  வெந்தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் 	2667-1
 வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே 	2667-2
 இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர் என்று 	2667-3
 சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் 	2667-4

 770. திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டிப் 	2668-1
 பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும் 	2668-2
 ஒருமுறை தடவ அம் கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் 	2668-3
 மருவு தீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் 	2668-4

 771. கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு 	2669-1
 செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப் 	2669-2
 பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை 	2669-3
 உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் 	2669-4

 772. மீனவன் தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற 	2670-1
 ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி 	2670-2
 மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த 	2670-3
 ஞான சம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான் 	2670-4

 773. கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர் 	2671-1
 வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் 	2671-2
 முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே 	2671-3
 சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் 	2671-4

 774. சைவமைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல் மாலையால் 	2672-1
 கைதவன் தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் 	2672-2
 மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு 	2672-3
 எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் 	2672-4

 775. பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றலும் 	2673-1
 தள்ளு நீர்மை யார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம் 	2673-2
 கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான் 	2673-3
 உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் 	2673-4

 776. என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் 	2674-1
 கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்புநோய் கவர்ந்த போது 	2674-2
 என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்னவாது உமக்கு எனச் 	2674-3
 சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார் 	2674-4

 777.  என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா எனச் 	2675-1
 சொன்னவாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் 	2675-2
 மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் 	2675-3
 வெம் நெருப்பின் வேவு உருமை வெற்றி ஆவது என்றனர் 	2675-4

 778. என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் 	2676-1
 நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடுதான் 	2676-2
 வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல் 	2676-3
 வன் தனிக்கை யானை மன்னன் முன்பு வம்மின் என்றனர் 	2676-4

 779. அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில் 	2677-1
 ஒப்பில் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால் 	2677-2
 செப்பரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் 	2677-3
 வெப்புறும் தழல் அமைக்க என வினை ஞரை விடுத்தான் 	2677-4

 780.  ஏயமாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி 	2678-1
 தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து 	2678-2
 காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட 	2678-3
 ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி 	2678-4

 781.  செங்கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த 	2679-1
 பொங்கு இசைத் திருப்பதிகங்கள் முறையினைப் போற்றி 	2679-2
 எங்கள் நாதனே பரம் பொருள் எனத் தொழுது எடுத்தே 	2679-3
 அங்கையால் முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார் 	2679-4

 782. சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே 	2680-1
 நீற்று வண்கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் 	2680-2
 நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு 	2680-3
 போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் 	2680-4

 783. அத் திருப் பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி 	2681-1
 மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி 	2681-2
 மெய்த்த நல் திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து 	2681-3
 கைத் தலத்து இடைக் கொண்டனர் கவுணியர் தலைவர் 	2681-4

 784.  நன்மை உய்க்கும் மெய்ப் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் 	2682-1
 என்னை ஆள் உடை ஈசன் தன் நாமமே என்றும் 	2682-2
 மன்னும் மெய்ப் பொருளாம் எனக் காட்டிட வன்னி 	2682-3
 தன்னில் ஆக எனத் தளிர் இள வளர் ஒளி பாடி 	2682-4

 785. செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்த 	2683-1
 கையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காண 	2683-2
 வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ 	2683-3
 வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் 	2683-4

 786. இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம் 	2684-1
 மட்டுலாங்குழல் வனமுலை மலைமகள் பாகத்து 	2684-2
 அட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து 	2684-3
 பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே 	2684-4

 787. மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த 	2685-1
 கையில் ஏட்டினைக் கதுவு செம் தீயினில் இடுவார் 	2685-2
 உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் 	2685-3
 நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார் 	2685-4

 788. அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவிலா அமணர் 	2686-1
 வெம் சுடர்ப் பெரும் தீயினில் விழுத்திய ஏடு 	2686-2
 பஞ்சு தீ இடைப் பட்டது படக் கண்டு பயத்தால் 	2686-3
 நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்து திலர் நின்றார் 	2686-4

 789. மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செந்தீயின் 	2687-1
 ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் 	2687-2
 ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்பு உற எடுத்தார் 	2687-3
 பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப 	2687-4

 790. எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் 	2688-1
 அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் 	2688-2
 தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கிக் 	2688-3
 அடுத்த நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான் 	2688-4

 791. அருகர் தாம் இட்ட ஏடு வாங்கச் சென்று அணையும் போதில் 	2689-1
 பெருகு தீக் கதுவ வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன் 	2689-2
 தருபுனல் கொண்டு செம் தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக் 	2689-3
 கருகிய சாம்ப ரோடும் கரி அலால் மற்று என் காண்பர் 	2689-4

 792. செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் 	2690-1
 கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன் 	2690-2
 எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் 	2690-3
 பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான் 	2690-4

 793.  வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் 	2691-1
 அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக 	2691-2
 இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் 	2691-3
 துப்புர உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான் 	2691-4

 794. தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார் 	2692-1
 சொன்னது பயனாகக் கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது 	2692-2
 முன்னுற இருகால் செய்தோம் முக்காலில் ஒரு கால் வெற்றி 	2692-3
 என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் 	2692-4

 795. தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டு இம் 	2693-1
 மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் 	2693-2
 நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் 	2693-3
 வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் 	2693-4

 796.  நீடு மெய்ப் பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் 	2694-1
 ஏடுற எழுதி மற்றவ் வேட்டினை யாமும் நீரும் 	2694-2
 ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு 	2694-3
 நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் 	2694-4

 797. என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் 	2695-1
 நன்று அது செய்வோம் என்று அங்கு அருள் செய நணுக வந்து 	2695-2
 வென்றிவேல் அமைச்சனார் தாம் வேறு இனிச் செய்யும் இவ்வாது 	2695-3
 ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் 	2695-4

 798. அங்கது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று 	2696-1
 பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத் 	2696-2
 தங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோம் ஆகில் 	2696-3
 வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே என்று சொன்னார் 	2696-4

 799. மற்றவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் 	2697-1
 செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று 	2697-2
 பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் 	2697-3
 பொற்புற விடுவதற்குப் போதுவ என்று கூற 	2697-4

 800. பிள்ளையார் முன்னம் பைம் பொன் பீடத்தில் இழிந்து போந்து 	2698-1
 தெள்ளு நீர்த் தரளப் பத்தி சிவிகை மேல் ஏறிச் சென்றார் 	2698-2
 வள்ளலார் அவர் தம் பின்பு மன்னன் மா ஏறிச் சென்றான் 	2698-3
 உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறிச் சென்றார் 	2698-4

 801. தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப் 	2699-1
 பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் 	2699-2
 மன்னிய மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டு 	2699-3
 துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் 	2699-4

 802.  மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த 	2700-1
 ஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார் 	2700-2
 பால் நறும் குதலைச் செய்ய பவளவாய் பிள்ளையார் தாம் 	2700-3
 மான சீர்த் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் 	2700-4

 803.  எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார் 	2701-1
 புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோம் என்பார் 	2701-2
 பெருகு ஒளி முத்தின் பைம் பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் 	2701-3
 வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் 	2701-4

 804.  ஏதமே விளைந்த இந்த அடிகள் மார் இயல் பால் என்பார் 	2702-1
 நாதனும் ஆல வாயில் நம்பனே காணும் என்பார் 	2702-2
 போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார் 	2702-3
 வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் 	2702-4

 805.  அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார் 	2703-1
 கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார் 	2703-2
 வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார் 	2703-3
 விடிவதாய் முடிந்தது இந்த வெஞ்சமணர் இருளும் என்பார் 	2703-4

 806.  நெருப் பினில் தோற்றார் தாங்கள் நீரிவெல்வார் களோ என்பார் 	2704-1
 இருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் 	2704-2
 பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார் 	2704-3
 கருப்புடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம் என்பார் 	2704-4

 807.  ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் 	2705-1
 ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார் 	2705-2
 நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார் 	2705-3
 நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார் 	2705-4

 808.  தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர் என்பார் 	2706-1
 ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது என்பார் 	2706-2
 நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் 	2706-3
 போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார் 	2706-4

 809. இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல 	2707-1
 மின் ஒளி மணி பொன் வெண் குடை மீது போதப் 	2707-2
 பன் மணி சிவிகை தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு 	2707-3
 நன் நெறி காட்ட வந்தார் நான் மறை வாழ வந்தார் 	2707-4

 810. தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான் 	2708-1
 மன்றுளார் அளித்த ஞான் வட்டில் வண்கையன் வந்தான் 	2708-2
 வென்றுலகு உய்ய மீளவை கையில் வெல்வான் வந்தான் 	2708-3
 என்றுபன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க 	2708-4

 811. பன் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்பப் பின்னே 	2709-1
 தென்னனும் தேவியாரும் உடன் செலத் திரண்டு செல்லும் 	2709-2
 புன் நெறி அமணர் வேறு ஓர் புடைவரப் புகலி வேந்தர் 	2709-3
 மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் 	2709-4

 812. கார் கெழு பருவம் வாய்ப்பக் காமுறும் மகளிர் உள்ளம் 	2710-1
 சீர் கெழு கணவன் தன்பால் விரைவு உறச் செல்லுமா போல் 	2710-2
 நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்துச் செல்லும் 	2710-3
 பார் கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு 	2710-4

 813.  ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி 	2711-1
 நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும் 	2711-2
 வேற்றுரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் 	2711-3
 தோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள் 	2711-4

 814. படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் 	2712-1
 அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் 	2712-2
 கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடு 	2712-3
 விடுதலும் விரிஅந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே 	2712-4

 815.  ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத் 	2713-1
 தேறு மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார் 	2713-2
 பாறும் அப்பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு 	2713-3
 நூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார் 	2713-4

 816. காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு 	2714-1
 நாணிலா அமணர் தம்மை நாட்டாற்றில் விட்டுப் போகச் 	2714-2
 சேணிடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன் 	2714-3
 ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் 	2714-4

 817. வேறு ஒரு செயல் இலாதார் வெரு உற்று நடுங்கித் தம்பால் 	2715-1
 ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி 	2715-2
 ஊறுடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று 	2715-3
 மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார் 	2715-4

 818. மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற 	2716-1
 ஆசிலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத் 	2716-2
 தேசு உடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப் 	2716-3
 பாசுரம் பாடல் உற்றார் பர சமயங்கள் பாற 	2716-4

 819. தென்னவன் மாறன் தானும் சிரபுரத்துத் தலைவர் தீண்டிப் 	2717-1
 பொன் நவில் கொன்றையார் தம் திருநீறு பூசப் பெற்று 	2717-2
 முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை 	2717-3
 உன்னினான் வினைகள் ஒத்துத் துலை என நிற்றலாலே 	2717-4

 820. உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும் 	2718-1
 நிலவு மெய்ந் நெறி சிவ நெறியது என்பதும் 	2718-2
 கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும் 	2718-3
 பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால் 	2718-4

 821.  அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று 	2719-1
 இந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்பு உறச் 	2719-2
 சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன் 	2719-3
 வந்த அர்ச்சனை வழிபாடும் அன்னவாம் 	2719-4

 822. வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது 	2720-1
 நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் 	2720-2
 ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை 	2720-3
 மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் 	2720-4

 823.  ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி 	2721-1
 வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் 	2721-2
 சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் 	2721-3
 வாழி அஞ்சு எழுத்து ஓதி வளர்கவே 	2721-4

 824. சொன்ன வையகமும் துயர் தீர்கவே 	2722-1
 என்னும் நீர்மை இக பரத்தில் உயர் 	2722-2
 மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட 	2722-3
 முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர் 	2722-4

 825.  அரிய காட்சியர் என்பது அவ் வாதியைத் 	2723-1
 தெரியலாம் நிலையால் தெரியார் என 	2723-2
 உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் 	2723-3
 பெரிய நல் அடையாளங்கள் பேசினார் 	2723-4

 826.  ஆயினும் பெரியார் அவர் என்பது 	2724-1
 மேய இவ் இயல்பே அன்றி விண் முதல் 	2724-2
 பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள் 	2724-3
 ஏயும் யாவும் இவர் வடிவு என்பதாம் 	2724-4

 827. பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே 	2725-1
 என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா 	2725-2
 மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார் 	2725-3
 அன்பு சூழ் சண்பை ஆண் தகையார் அவர் 	2725-4

 828.  வெந்த சாம்பல் விரை என்பது தமது 	2726-1
 அந்தம் இல் ஒளி அல்லா ஒளி எலாம் 	2726-2
 வந்து வெம் தற மற்றப் பொடி அணி 	2726-3
 சந்த மாக் கொண்ட வண்ணமும் சாற்றினார் 	2726-4

 829. தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும் 	2727-1
 அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது 	2727-2
 இமைத்த சோதி அடங்கிப் பின் ஈதலால் 	2727-3
 எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றதாம் 	2727-4

 830.  தம்மையே சிந்தியார் எனும் தம்மை தான் 	2728-1
 மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என 	2728-2
 இம்மையே நினைவார் தம் இருவினைப் 	2728-3
 பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றதாம் 	2728-4

 831.  எந்தையார் அவர் எவ்வகையார் கொல் என்று 	2729-1
 இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் 	2729-2
 முந்தையோரை எக் கூற்றின் மொழிவது என்று 	2729-3
 அந்தண் பூந்தராய் வேந்தர் அருளினார் 	2729-4

 832.  ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் திறம் 	2730-1
 நாதன் மாட்சிமை கேட்க நவிலுங் கால் 	2730-2
 ஓதும் எல்லை உலப்பில ஆதலின் 	2730-3
 யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம் 	2730-4

 833. அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து 	2731-1
 இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் 	2731-2
 முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அத் 	2731-3
 தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர் 	2731-4

 834. மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான் 	2732-1
 அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் 	2732-2
 இன்ன தன்மையை ஏது எடுத்துக் காட்டு 	2732-3
 அன்ன ஆற்றால் அளப்பு இலன் என்றதாம் 	2732-4

 835. தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது 	2733-1
 ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில் 	2733-2
 ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் 	2733-3
 ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்ற தாம் 	2733-4

 836.  மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது 	2734-1
 ஆதிச் சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப் 	2734-2
 போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து 	2734-3
 போதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம் 	2734-4

 837.  ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று 	2735-1
 வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள் 	2735-2
 பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்று 	2735-3
 ஆண்ட சண்பை அரசர் அருளினார் 	2735-4

 839.  ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் 	2736-1
 நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று 	2736-2
 தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் 	2736-3
 கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர் 	2736-4

 839. கருதும் கடிசேர்ந்த என்னும் திருப் பாட்டில் ஈசர் 	2737-1
 மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி 	2737-2
 தரு தன்மையது ஆதல் சண்ணீசர் தம் செய்கை தக்கோர் 	2737-3
 பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம் 	2737-4

 840.  வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட்டினினேர் 	2738-1
 ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் 	2738-2
 பாதம் முதலாம் பதிணெண் புராணங்கள் என்றே 	2738-3
 ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் 	2738-4

 841.  பாவுற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மை 	2739-1
 காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது 	2739-2
 யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று 	2739-3
 மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் 	2739-4

 842.  மாலா யவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் 	2740-1
 தோலா மறை நான்முகனும் தொடர்வாம் அமரர் 	2740-2
 ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த 	2740-3
 மேலாம் கருணைத் திறம் வெம் குருவேந்தர் வைத்தார் 	2740-4

 843.  ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல் 	2741-1
 மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா 	2741-2
 ஈனர்கள் எல்லைக் கிட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் 	2741-3
 ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் 	2741-4

 844. வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக் 	2742-1
 குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் 	2742-2
 சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திருப்பாதம் தந்த 	2742-3
 நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் 	2742-4

 845. அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம் 	2743-1
 மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் 	2743-2
 பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து ஆற்றில் 	2743-3
 நிலவும் திரு ஏடு திருக்கையால் நீட்டி இட்டார் 	2743-4

 846. திரு உடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு 	2744-1
 மரு உறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல் 	2744-2
 பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும் 	2744-3
 இரு நிலத்தோர் கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி 	2744-4

 847.  எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்று எழுதும் ஏட்டில் 	2745-1
 தம்பிரான் அருளால் வேந்தன் தன்னை முன் ஓங்கப் பாட 	2745-2
 அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச் 	2745-3
 செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே 	2745-4

 848.  ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் 	2746-1
 நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார் 	2746-2
 ஆடியல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் 	2746-3
 பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார் 	2746-4

 849.  ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக் 	2747-1
 காற்றென விசையில் செல்லும் கடும் பரி ஏறிக் கொண்டு 	2747-2
 கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் 	2747-3
 ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க 	2747-4

 850.  ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக் 	2748-1
 கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக் 	2748-2
 காடு இடமாக ஆடுங்கண்ணுதல் கோயில்மாடு 	2748-3
 சீர் நடவுட் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார் 	2748-4

 851. தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க 	2749-1
 அலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச் 	2749-2
 சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ 	2749-3
 மலை மகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார் 	2749-4

 852. மற்றவர் பிள்ளையார் தம் மலர் அடி வணங்கிப் போற்றிக் 	2750-1
 கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு 	2750-2
 பற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்ட 	2750-3
 அற்றருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே 	2750-4

 853. மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி 	2751-1
 துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள் 	2751-2
 முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய் தார் 	2751-3
 கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற 	2751-4

 854. புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும் 	2752-1
 இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு 	2752-2
 தகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே 	2752-3
 மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை 	2752-4

 855. பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால் 	2753-1
 கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற 	2753-2
 நண்பு உடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட 	2753-3
 எண் பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் 	2753-4

 856. தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம் 	2754-1
 ஆற்று இடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம் 	2754-2
 வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம் 	2754-3
 போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பம் ஆகும் 	2754-4

 857. தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார் 	2755-1
 முன்னவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான் 	2755-2
 மன்னன் நீறு அணிந்தான் என்று மற்றவன் மதுரை வாழ்வார் 	2755-3
 உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் 	2755-4

 858. பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது 	2756-1
 நீதியும் வேதநீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும் 	2756-2
 மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதி 	2756-3
 மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே 	2756-4

 859. மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்க 	2757-1
 ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட 	2757-2
 ஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத் 	2757-3
 தேனலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே 	2757-4

 860. மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க 	2758-1
 இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் 	2758-2
 குறைவிலது எனினுங் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி 	2758-3
 நிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே 	2758-4

 861. அம் கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் 	2759-1
 பங்கயச் செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று 	2759-2
 பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார் 	2759-3
 மங்கையர்க்கு அரசியாரும் மன்னனும் போற்றி வந்தார் 	2759-4

 862. எண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப் 	2760-1
 புண்ணியப் பிள்ளையாரைப் புகழ்ந்து அடி போற்றி போத 	2760-2
 மண் எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு 	2760-3
 கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம் 	2760-4

 863.  ஆலவாய் அண்ணல் கோயில் அம் கண் முன் தோன்றக் கண்டு 	2761-1
 பால் அறாவாயர் பண்பினால் தொழுது சென்று 	2761-2
 மாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில் 	2761-3
 சீல மாதவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புக்கார் 	2761-4

 864. தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும் 	2762-1
 நன்னெறி அமைச்சனாரும் ஞான சம்பந்தர் செய்ய 	2762-2
 பொன்னடிக் கமலம் போற்றி உடன் புகப் புனிதர் கோயில் 	2762-3
 தன்னை முன் வலம் கொண்டுள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் 	2762-4

 865. கைகளும் தலை மீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம் 	2763-1
 மெய் எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி 	2763-2
 ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல 	2763-3
 மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் 	2763-4

 866.  ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவற நிறைந்த கோலம் 	2764-1
 மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி 	2764-2
 நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் 	2764-3
 என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட 	2764-4

 867. தென்னவன் பணிந்து நின்று திரு ஆல வாயில் மேவும் 	2765-1
 மன்னனே அமணர் தங்கள் மாய்கை ஆல் மயங்கி யானும் 	2765-2
 உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட் கொள்ள 	2765-3
 இன் அருள் பிள்ளையாரைத் தந்தனை இறைவா என்றான் 	2765-4

 868. சீர் உடைப் பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும் 	2766-1
 காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கிக் காதல் 	2766-2
 ஆர் அருள் பெற்றுப் போற்றி அங்கு நின்று அரிது நீங்கி 	2766-3
 ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்து அருளிப் புக்கார் 	2766-4

 869. நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை ஆரும் 	2767-1
 மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக் 	2767-2
 கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினாலே	2767-3
 நாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார் 	2767-4

 870. திருவியம் அகத்தின் உள்ளும் திரு நீல கண்டப் பாணர்க்கு 	2768-1
 அருளிய திறமும் போற்றி அவர் ஒடும் அளவளாவித் 	2768-2
 தெருள் உடைத் தொண்டர் சூழத் திருத் தொண்டின் உண்மை நோக்கி 	2768-3
 இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே 	2768-4

 871. பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும் 	2769-1
 பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் 	2769-2
 கீழ் உறப் பறித்துப் போக்கிக் கிளர் ஒளித் தூய்மை செய்தே 	2769-3
 வாழி அப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார் 	2769-4

 872. மீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும் மிக்க 	2770-1
 ஞான சம்பந்தர் பாதம் நாள் தொறும் பணிந்து போற்ற 	2770-2
 ஆன சண்பையர் கோன் ஆரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் 	2770-3
 ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் 	2770-4

 873. செய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்று எடுத்த 	2771-1
 வைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வை 	2771-2
 மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை 	2771-3
 எய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார் 	2771-4

 874.  ஆன புகழ்த் திருநாவுக்கரசர் பால் அவம் செய்த 	2772-1
 மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் 	2772-2
 மீனவன் தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்கு தற்கும் 	2772-3
 போனவர் பால் புகுந்தபடி அறிவன் எனப் புறப்படுவார் 	2772-4

 875. துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்று இருந்த பிரான் 	2773-1
 அடி வணங்கி அலர் சண்பை அதன் இன்றும் வழிக் கொண்டு 	2773-2
 படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி 	2773-3
 வடி நெடு வேல் மீனவன் தன் வள நாடு வந்து அணைந்தார் 	2773-4

 876. மா மறையோர் வளம் பதிகள் இடைத் தங்கி வழிச் செல்வார் 	2774-1
 தே மருவு நறும் பைந்தார்த் தென்னவன் தன் திரு மதுரை 	2774-2
 தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் 	2774-3
 பூ மருவும் சேவடிக் கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் 	2774-4

 877. அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவ 	2775-1
 இங்கு எம்மைக் கண் விடுத்த காழியர் இள ஏறு 	2775-2
 தங்கும் இடம் திரு நீற்றுத் தொண்டர் குழாம் சாரும் இடம் 	2775-3
 செங்கமலத் திருமடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் 	2775-4

 878. செப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்த 	2776-1
 அப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோர் அடி வணங்கி 	2776-2
 ஒப்பில் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய 	2776-3
 எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்து அருள 	2776-4

 879. சிவ பாத இருதயர் தாம் முன் தொழுது சென்று அணையத் 	2777-1
 தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர் தொழுவார் 	2777-2
 அவர் சார்வு கண்டு அருளித் திருத் தோணி அமர்ந்து அருளிப் 	2777-3
 பவ பாசம் அறுத்தவர் தம் பாதங்கள் நினைவுற்றார் 	2777-4

 880. இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி 	2778-1
 அரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட 	2778-2
 பெரும் தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று 	2778-3
 பொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார் 	2778-4

 881.  மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி 	2779-1
 உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக 	2779-2
 அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார் 	2779-3
 தண்