திருச்சிற்றம்பலம் உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல
2.3 காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த
|
| 24. |
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சம்என்பாய்த் தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை இளந்திங் களும்எருக் கும்மிருக் குஞ்சென்னி ஈசனுக்கே. | 1 |
| 25. |
ஈசன் அவன்அல்லா தில்லை எனநினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான். | 2 |
| 26. |
பிரானென்று தன்னைப்பன் னாள்பர வித்தொழு வார்இடர்கண் டிரான்என்ன நிற்கின்ற ஈசன்கண் டீர்இன வண்டுகிண்டிப் பொராநின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்துபொம் மென்றுறைவாய் அராநின் றிரைக்குஞ் சடைச்செம்பொன் நீள்முடி அந்தணனே. | 3 |
| 27. |
அந்தணனைத் தஞ்செமென் றாட்பட்டார் ஆழாமே வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த பொன்கண்டாற் பூணாதே கோள்நாகம் பூண்டானே என்கண்டாய் நெஞ்சே இனி. | 4 |
| 28. |
இனிவார் சடையினிற் கங்கையென் பாளைஅங் கத்திருந்த கனிவாய் மலைமங்கை காணில்என் செய்திகை யிற்சிலையால் முனிவார் திரிபுரம் மூன்றும்வெந் தன்றுசெந் தீயில்முழ்கத் தனிவார் கணைஒன்றி னால்மிகக் கோத்தஎஞ் சங்கரனே. | 5 |
| 29. |
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற் பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள் ஆவாவென் றாழாமைக் காப்பானை எப்பொழுதும் ஓவாது நெஞ்சே உரை. | 6 |
| 30. |
உரைக்கப் படுவதும் ஒன்றுண்டு கேட்கிற்செவ் வான்தொடைமேல் இரைக்கின்ற பாம்பினை என்றும் தொடேல்இழிந் தோட்டந்தெங்கும் திரைக்கின்ற கங்கையும் தேன்நின்ற கொன்றையும் செஞ்சடைமேல் விரைக்கின்ற வன்னியுஞ் சென்னித் தலைவைத்த வேதியனே. | 7 |
| 31. |
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக் காதியனை ஆதிரைநன் னாளானைச் - சோதிப்பான் வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது கில்லேன மாஎன்றான் கீழ். | 8 |
| 32. |
கீழா யினதுன்ப வெள்ளக் கடல்தள்ளி உள்ளுறப்போய் வீழா திருந்தின்பம் வேண்டுமென் பீர்விர வார்புரங்கள் பாழா யிடக்கண்ட கண்டன்எண் தோளன்பைம் பொற்கழலே தாழா திறைஞ்சிப் பணிந்துபன் னாளும் தலைநின்மினே. | 9 |
| 33. |
தலையாய ஐந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து தலையா யினஉணர்ந்தோர்காண்பர் - தலையாய அண்டத்தான் ஆதிரையான் ஆலாலம் உண்டிருண்ட கண்டத்தான் செம்பொற் கழல். | 10 |
| 34. |
கழற்கொண்ட சேவடி காணலுற் றார்தம்மைப் பேணலுற்றார் நிழற்கண்ட போழ்தத்து நில்லா வினைநிகர் ஏதுமின்றித் தழற்கொண்ட சோதிச் செம் மேனிஎம் மானைக்கைம் மாமலர்தூய்த் தொழக்கண்டு நிற்கிற்கு மோதுன்னி நம்மடுந் தொல்வினையே. | 11 |
| 35. |
தொல்லை வினைவந்து சூழாமுன் தாழாமே ஒல்லை வணங்கி உமையென்னும்- மெல்லியல்ஓர் கூற்றானைக் கூற்றுருவங் காய்ந்தானை வாய்ந்திலங்கு நீற்றானை நெஞ்சே நினை. | 12 |
| 36. |
நினையா தொழிதிகண் டாய்நெஞ்ச மேஇங்கோர் தஞ்சமென்று மனையா ளையும்மக்கள் தம்மையும் தேறியோர் ஆறுபுக்கு நனையாச் சடைமுடி நம்பன்நந் தாதைநொந் தாதசெந்தீ அனையான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே. | 13 |
| 37. |
அடித்தலத்தின் அன்றரக்கன் ஐந்நான்கு தோளும் முடித்தலமும் நீமுரித்த வாறென் - முடித்தலத்தில் ஆறாடி ஆறா அனலாடி அவ்வனலின் நீறாடி நெய்யாடி நீ. | 14 |
| 38. |
நீநின்று தானவர் மாமதில் மூன்றும் நிரந்துடனே தீநின்று வேவச் சிலைதொட்ட வாறென் றிரங்குவல்வாய்ப் பேய்நின்று பாடப் பெருங்கா டரங்காப் பெயர்ந்துநட்டம் போய்நின்று பூதந் தொழச்செய்யும் மொய்கழற் புண்ணியனே. | 15 |
| 39. |
புண்ணியங்கள் செய்தனவும் பொய்ந்நெறிக்கட் சாராமே எண்ணியோ ரைந்தும் இசைந்தனவால் - திண்ணிய கைம்மாவின் ஈருரிவை மூவுருவும் போர்த்துகந்த அம்மானுக் காட்பட்ட அன்பு. | 16 |
| 40. |
அன்பால் அடைவதெவ் வாறுகொல் மேலதோர் ஆடரவம் தன்பால் ஒருவரைச் சாரஒட் டாதது வேயும்அன்றி முன்பா யினதலை யோடுகள் கோத்தவை ஆர்த்துவெள்ளை என்பா யினவும் அணிந்தங்கோர் ஏறுகந் தேறுவதே. | 17 |
| 41 |
ஏறலால் ஏறமற் றில்லையே எம்பெருமான் ஆறெலாம் பாயும் அவிர்சடையார் - வேறோர் படங்குலவு நாகமுமிழ் பண்டமரர் சூழ்ந்த தடங்கடல்நஞ் சுண்டார் தமக்கு. | 18 |
| 42 |
தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாம்ஒருநாள் எமக்கொன்று சொன்னால் அருளுங்கொ லாமிணை யாதுமின்றிச் சுமக்கின்ற பிள்ளைவெள்ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய் உமைக்கென்று தேடிப் பெறாதுட னேகொண்ட உத்தமரே. | 19 |
| 43. |
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள் செத்த மரம்அடுக்கித் தீயாமுன் - உத்தமனாம் நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே கேளாழி நெஞ்சே கிளர்ந்து. | 20 |
| 44. |
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர். | 1 |
| 45 |
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு. | 2 |
| 46 |
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற் பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். | 3 |
| 47 |
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம் செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மைஆட் கொண்ட இறை. | 4 |
| 48. |
இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அது மாற்றுவான். | 5 |
| 49 |
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்பன் யான். | 6 |
| 50. |
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக் கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக் காளாயி னேன். | 7 |
| 51 |
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் அ·தன்றே யாமாறு - தூய புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் அனற்கங்கை ஏற்றான் அருள். | 8 |
| 52 |
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு. | 9 |
| 53 |
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் மனிக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே யெனக்கரிய தொன்று. | 10 |
| 54. |
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது. | 11 |
| 55. |
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும் அதுவே இனியறிந்தோ மானால் - அதுவே பனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர் தனிக்கணங்கு வைத்தார் தகவு. | 12 |
| 56. |
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமே லேபாவந் தான். | 13 |
| 57. |
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான் தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானை நினைந்து. | 14 |
| 58. |
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து மின்செய்வார் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற் கென்செய்வான் கொல்லோ இனி. | 15 |
| 59. |
இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம் இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண். | 16 |
| 60. |
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக் காதியாய் நின்ற அரன். | 17 |
| 61 |
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத் தானவனைப் பாதத் தணிவிரலாற் செற்றானை யானவனை எம்மானை இன்று. | 18 |
| 62 |
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர் மூவா மதியானை மூவே ழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு. | 19 |
| 63 |
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன். | 20 |
| 64. |
அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து. | 21 |
| 65. |
வந்திதனைக் கொள்வதே யொக்கும்இவ் வாளரவின் சிந்தை யதுதெரிந்து காண்மினோ- வந்தோர் இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள் பிரானீர்உம் சென்னிப் பிறை. | 22 |
| 66. |
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையா உள்ள மிது. | 23 |
| 67 |
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. | 24 |
| 68 |
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று. | 25 |
| 69 |
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு. | 26 |
| 70. |
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல் பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே பொன்னாரம் மற்றொன்று பூண். | 27 |
| 71. |
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம் பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவ தாக இவர். | 28 |
| 72. |
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை இகழ்வதே கண்டீர் -இவர் தமது பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர். | 29 |
| 73. |
பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார் வன்பேயும் தாமும் மகிழ்ந்து. | 30 |
| 74. |
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு. | 31 |
| 75. |
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின் முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா நுதற்கண்ணான் தன்மார்பின் நூல். | 32 |
| 76. |
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்த தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே ஆம். | 33 |
| 77. |
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகணையா தாரை அடும். | 34 |
| 78 |
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந் திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல மணிமிடற்றின் உள்ள மறு. | 35 |
| 79. |
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான் தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி வளருமோ பிள்ளை மதி. | 36 |
| 80. |
மதியா அடலவுணர் மாமதில்மூண் றட்ட மதியார் வளர்சடையி னானை - மதியாலே என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில் என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு. | 37 |
| 81 |
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவம் தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர் தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு கூரேறு காரேனக் கொம்பு. | 38 |
| 82 |
கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன் அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன் அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி மணிவரையே போலும் மறித்து. | 39 |
| 83 |
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர் கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட் டுள்ளாதார் கூட்டம் ஒருவு. | 40 |
| 84 |
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால் நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து. | 41 |
| 85 |
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ இளங்குழவித் திங்கள் இது. | 42 |
| 86 |
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல் எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே தானே அறிவான் தனக்கு. | 43 |
| 87 |
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானோர் பிரான். | 44 |
| 88. |
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க் கெளிது. | 45 |
| 89 |
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற் றெந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழுந் திறம். | 46 |
| 90 |
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால் பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் திருவடிக்கட் சேருந் திரு. | 47 |
| 91 |
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும் பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள் இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா ததுமதியொன் றில்லா அரா. | 48 |
| 92 |
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு கதிர்விரியஓடி - விராவுதலால் பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே தன்னோடே யொப்பான் சடை. | 49 |
| 93 |
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல் வலப்பால்அக் கோல மதிவைத்தான்தன் பங்கின் குலப்பாவை நீலக் குழல். | 50 |
| 94. |
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத் தெழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு. | 51 |
| 95 |
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத் தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர். | 52 |
| 96. |
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - பேரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார். | 53 |
| 97 |
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய் ஓருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவ மேகத்தாற்செய்தனைய மேனியான் நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு. | 54 |
| 98 |
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு கண்டங் கறுத்ததுவு மன்றியே - உண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியி னுள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு. | 55 |
| 99 |
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண் புலாற்றலையின் உள்ளுண் புறம்பேசக் கேட்டோ நிலாத்தலையிற் சூடுவாய் நீ. | 56 |
| 100 |
நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடஅரவம் மேலாட மிக்கு. | 57 |
| 101 |
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும் ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல் ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில் பாகத்தாள் பூங்குழலும் பண்பு. | 58 |
| 102 |
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண் கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும் அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ தெவ்வுருவோ நின்னுருவ மேல். | 59 |
| 103 |
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல் போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ தம்மான் திருமேனி அன்று. | 60 |
| 104 |
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது. | 61 |
| 105 |
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால் வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு. | 62 |
| 106 |
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேல் திங்கள் நிலா. | 63 |
| 107 |
நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று. | 64 |
| 108 |
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு. | 65 |
| 109 |
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு. | 66 |
| 110 |
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன் உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு. | 67 |
| 111 |
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற் றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் முதிரா மதியான் முடி. | 68 |
| 112 |
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல அடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற் குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம் இனிஅவலம் உண்டோ எமக்கு. | 69 |
| 113 |
எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிரா தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில் ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். | 70 |
| 114 |
இடப்பால வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப் பாகங் கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே முக்கண்ணாய் கண். | 71 |
| 115 |
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும் கண்ணாளா ஈதென் கருத்து. | 72 |
| 116 |
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலஞ் சிக்கென நான்சொன்னேன் - பருத்தரங்க வெள்ளநீ ரேற்றேன் அடிக்கமலம் நீவிரும்பி உள்ளமே எப்போதும் ஓது. | 73 |
| 117 |
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட ஏது நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள் எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா கண்ணார் கபாலக் கமலம். | 74 |
| 118 |
கலங்கு புனல்கங்கை ஊடால லாலும் இலங்கு மதிஇயங்க லாலும் - நலங்கொள் பரிசுடையான் நீண்முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் காணில் விசும்பு. | 75 |
| 119 |
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும் எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி. | 76 |
| 120 |
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம் மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றா தரங்கு. | 77 |
| 121 |
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல் என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான் பன்னாள் இரந்தாற் பணிந்து. | 78 |
| 122 |
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு. | 79 |
| 123 |
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள் அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக் காலனையும் வென்றுதைத்த கால். | 80 |
| 124 |
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான் சரணார விந்தங்கள் சார்ந்து. | 81 |
| 125 |
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் - தேர்ந்துணரில் தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே என்றுரைக்கும் மின். | 82 |
| 126 |
மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது. | 83 |
| 127 |
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக் கண்டாலும் முக்கணான் கண். | 84 |
| 128 |
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும் எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன் எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ பெரியானைக் காணப் பெறின். | 85 |
| 129 |
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ துறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய நற்கணத்தி லொன்றாய நாம். | 86 |
| 130 |
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர் அறிவினையே பற்றினால் எற்றே தடுமே எறிவினையே என்னும் இருள். | 87 |
| 131 |
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி. | 88 |
| 132 |
ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம் உண்டவா ய·திருப்ப உன்னுடைய கண்டமிருள் கொண்டவா றென்இதனைக் கூறு. | 89 |
| 133 |
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித் திட் டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை. | 90 |
| 134 |
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே எம்மைப் புறம்உரைப்ப தென். | 91 |
| 135 |
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந் தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூச்சடையோன் வானோர்க் கருளாக வைத்த அவன். | 92 |
| 136 |
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும் அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன் கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. | 93 |
| 137 |
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள் மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லாய் அவள். | 94 |
| 138 |
அவளோர் குலமங்கை பாகத் தகலாள் இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ றென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள் அன்பணியார் சொல்லுமின்இங் கார். | 95 |
| 139 |
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும் போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து. | 96 |
| 140 |
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல் உறைப்போடும் உன்கைக் கொண்டாயோ - நிறைத்திட் டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக் களைந்தெழுந்த செந்தீ யழல். | 97 |
| 141 |
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாயிதனைக் செப்பு. | 98 |
| 142 |
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட் டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன் றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய நாகத்தா யாடுன் நடம். | 99 |
| 143 |
நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் திசைவேம் இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கற் பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே றுருமேறோ ஒன்றா உரை. | 100 |
| 144 |
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார் ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார் பேராத காதல் பிறந்து. | 101 |
| 145. |
ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று -நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர். | 1 |
| 146 |
கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்று நடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்த பாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக் கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட. | 2 |
| 147 |
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை. | 3 |
| 148. |
காளை வடிவொழிந்து கையுறவோ டையுறவாய் நாளும் அணுகி நலியாமுன் - பாளை அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆருரற் காளாய்க் கவிழ்கமுகம் கூம்புகஎன் கை. | 4 |
| 149 |
வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக் குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே திருத்துருத்தி யான்பாதஞ் சேர். | 5 |
| 150 |
காலைக் கலையிழையாற் கட்டித்தன் கையார்த்து மாலை தலைக்கணிந்து மையெழுதி - மேலோர் பருக்கோடி மூடிப் பலரழா முன்னம் திருக்கோடி காஅடைநீ சென்று. | 6 |
| 151. |
மாண்டுவாய் அங்காவா முன்னம் மடநெஞ்சே வேண்டுவாய் ஆகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த் தென்னிடைவாய் மேய சிவனார் திருநாமம் நின்னிடைவாய் வைத்து நினை. | 7 |
| 152. |
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தான் பாதம் நினை. | 8 |
| 153 |
அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பால் குழித்தண் டலையானைக் கூறு. | 9 |
| 154 |
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி உண்ப துறும். | 10 |
| 155 |
குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாம் - தழீஇயிருந்தும் என்னானைக் காவா இதுதகா தென்னாமுன் தென்னானைக்கா அடைநீ சென்று. | 11 |
| 156 |
குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல் பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத் திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யங்காந் திளைத்து. | 12 |
| 157. |
காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும் பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள் ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை மாகாளங் கைதொழுது வாழ்த்து. | 13 |
| 158. |
இல்லும் பொருளும் இருந்த மனையளவே சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல கிளைகுளத்து நீரளவே கிற்றியே நெஞ்சே வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. | 14 |
| 159 |
அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க் குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச் சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து. | 15 |
| 160. |
இட்ட குடிநீர் இருநாழி ஓருழக்காச் சட்டஒரு முட்டைநெய் தான்கலந் - தட்ட அருவாச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில் திருவாச்சி ராமமே சேர். | 16 |
| 161 |
கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி ஒழிந்த துடல்இரா வண்ணம் - அழிந்த திராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே சிராமலையான் பாதமே சேர். | 17 |
| 162 |
இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி விழவாடி ஆவிவிடா முன்னம் - மழபாடி ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை நீண்டானை நெஞ்சே நினை. | 18 |
| 163 |
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின் தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும் தன்திருவாய்ப் பாடியான் தாள். | 19 |
| 164. |
என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன் கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னெஞ்சேய் மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி ஏகம்பத் தானை இறைஞ்சு. | 20 |
| 165 |
கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர் மரம்ஊன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றுந் தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய ஈச்சரத்தான் பாதமே ஏத்து. | 21 |
| 166. |
தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட் டெஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங் கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி இரந்துண் டிருக்கப் பெறின். | 22 |
| 167 |
நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ் வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான் ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன் பாடரவங் கேட்ட பகல். | 23 |
| 168. |
உய்யும் மருந்திதனை உண்மின் எனஉற்றார் கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே செழுந்திரும யானமே சேர். | 24 |
| 169. |
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே. | 1 |
| 170 |
ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர் பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன் தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன் வாவெனைப் புல்லவென் றான்இமை விண்டன வாட்கண்களே. | 2 |
| 171 |
கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பஒண் கொன்றையந் தார்உருவப் பெண்களங் கம்மிவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம் பண்களங் கம்மிசை பாடநின் றாடும் பரமனையே. | 3 |
| 172 |
பரமனை யேபலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர் பிரமனை யேசிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம் சரமனை யேஉடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம் வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே. | 4 |
| 173 |
தவனே உலகுக்குத் தானே முதல்தான் படைத்தவெல்லாம் சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சமுண்ட பவனே எனச்சொல்லு வாரும் பெறுவர்இப் பாரிடமே. | 5 |
| 174 |
இடமால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பால்ஒண்கொன்றை வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான் இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர் குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே. | 6 |
| 175 |
கூத்துக் கொலாம் இவர் ஆடித் திரிவது கோல்வளைகள் பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளம்கொலாம் ஏத்துக் கொலாம்இவர் ஆதரிக் கின்ற திமயவர்தம் ஓத்துக் கொலாம்இவர் கண்டதிண் டைச்சடை உத்தமரே. | 7 |
| 176 |
உத்தம ராய்அடி யார்உல காளத் தமக்குரிய மத்தம் அராமதி மாடம் பதிநலம் சீர்மைகுன்றா எத்தம ராயும் பணிகொள்ள வல்ல இறைவர்வந்தென் சித்தம ராய்அக லாதுடன் ஆடித் திரிதவரே. | 8 |
| 177 |
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும் அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய் கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம் பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே. | 9 |
| 178 |
பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால் அணிபதங் கன்பற் கொளப்பனை அத்தவற் கேயடிமை துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீஎன் தனிநெஞ்சமே. | 10 |
| 179. |
நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முகம்மலர அஞ்செங் கரதலம் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான் வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே. | 11 |
| 180 |
வானகம் ஆண்டுமந் தாகினி ஆடிநந் தாவனம் சூழ் தேனக மாமலர் சூடிச்செல் வோரும் சிதவல்சுற்றிக் கானகந் தேயத் திரிந்திரப் போரும் கனகவண்ணப் பால்நிற நீற்றற் கடியரும் அல்லாப் படிறருமே. | 12 |
| 181 |
படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச் சென் றிடறா தொழிதும் எழுநெஞ்ச மேஎரி ஆடிஎம்மான் கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய் உடல்தான் உளபயன் ஆவசொன் னேன்இவ் வுலகினுள்ளே. | 13 |
| 182 |
உலகா ளுறுவீர் தொழுமின்விண் ணாள்வீர் பணிமின்நித்தம் பலகா முறுவீர் நினைமின் பரமனொ டொன்றலுற்றீர் நலகா மலரால் அருச்சிமின் ஆள்நர கத்துநிற்கும் அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே. | 14 |
| 183 |
அலையார் புனல்அனல் ஞாயி றவனி மதியம்விண்கால் தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கன்என்னே கலையான் ஒருவிரல் தாங்ககில் லான்விட்ட காரணமே. | 15 |
| 184 |
காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன் தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவர்யார் போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார் ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே. | 16 |
| 185 |
இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும் வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சேமடவாள் பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்ணியல் சூலத்தெம்மான் திருந்திய போதவன் தானே களையும்நம் தீவினையே. | 17 |
| 186 |
தீவினை யேனைநின் றைவர் இராப்பகல் செத்தித்தின்ன மேவினை வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட் டேன்வினையும் ஓவின துள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந் தடைந்தேன் பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே. | 18 |
| 187 |
பாதம் புவனி சுடர்நய னம்புவ னம்உயிர்ப் போங் கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேஉடம்பு வேதம் முகம்திசை தோள்மிகு பன்மொழி கீதம்என்ன போதம் இவற்கோர் மணிநிறம் தோற்பது பூங்கொடியே. | 19 |
| 188 |
கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும் அடிமேற் கழலும் அகலத்தில் நீறும்ஐ வாயரவும் முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய வடிவேல் வடிவும்என் கண்ணுள்எப் போதும் வருகின்றவே. | 20 |
| 189 |
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல் பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்பொடி பூசிவந்துன் அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம் வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே. | 21 |
| 190 |
வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும் சோதியென் பால்கொள்ள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான் நீதியென் றான்செல்வம் ஆவதென் றேன்மேல் நினைப்புவண்டேர் ஓதிநின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே. | 22 |
| 191 |
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் உவகையை ஓங்கிற்றுள்ளம் இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும் பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்தியக் குஞ்சரமும் தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே. | 23 |
| 192 |
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன் ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன் உரைத் தார்உரைத்த கள்ளிய புக்காற் கவிகள்ஒட் டார்கடல் நஞ்சயின்றாய் கொள்ளிய அல்லகண் டாய்புன்சொல் ஆயினும் கொண்டருளே. | 24 |
| 193 |
அருளால் வருநஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம் பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன் இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே. | 25 |
| 194 |
விரிகின்ற ஞாயிறு போன்றது மேனியஞ் ஞாயிறுசூழ்ந் தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக் கீழ்ச் சரிகின்ற காரிருள் போன்றது கண்டம்அக் காரிருட்கீழ்ப் புரிகின்ற வெண்முகில் போன்றுள தால்எந்தை ஒண்பொடியே. | 26 |
| 195 |
பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொற் பொருள்தெரியா முடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம் குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்த கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே. | 27 |
| 196 |
உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும் விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல் திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தஞ் செறியச் செய்த கரைவளர் ஒத்துள தாற்சிர மாலைஎம் கண்டனுக்கே. | 28 |
| 197 |
கண்டங் கரியன் கரியீர் உரியன் விரிதருசீர் அண்டங் கடந்த பெருமான் சிறுமான் தரித்தபிரான் பண்டன் பரம சிவனோர் பிரமன் சிரம்அரிந்த புண்தங் கயிலன் பயிலார மார்பன்எம் புண்ணியனே. | 29 |
| 198 |
புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சன்அங்கக் கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் கார்இயங்கும் விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொள உமையாள் பண்ணியன் பண்ணியல் பாடலன் ஆடற் பசுபதியே. | 30 |
| 199 |
பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர் கதியார் விடைஉண்டு கண்மூன் றுளகறைக் கண்டமுண்டு கொதியார் மழுவுண்டு கொக்கரை உண்டிறை கூத்துமுண்டு மதியார் சடைஉள மால்உள தீவது மங்கையர்க்கே. | 31 |
| 200 |
மங்கைகொங் கைத்தடத் திங்குமக் குங்குமப் பங்கநுங்கி அங்கமெங் கும்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான் கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்அர வங்கள்பொங்கிப் பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே. | 32 |
| 201 |
பண்டங்கன் வந்து பலிதாஎன்றான்பக லோற் கிடென்றேன் அண்டங் கடந்தவன் அன்னம்என்றான்அயன் ஊர்தியென்றேன் கொண்டிங் குன்ஐயம்பெய் என்றான் கொடித்தேர் அநங்கன்என்றேன் உண்டிங் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே. | 33 |
| 202 |
உற்றடி யார்உல காளஓர் ஊணும் உறக்கும் இன்றிப் பெற்றம தாவதென் றேனும் பிரான்பெரு வேல்நெடுங்கண் சிற்றடி யாய்வெண்பல் செவ்வாய் இவள்சிர மாலைக்கென்றும் இற்றிடை யாம்படி யாகஎன் னுக்கு மெலிக்கின்றதே. | 34 |
| 203 |
மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு கலிக்கின்ற காமம் கரதலம் எல்லி துறக்கம் வெங்கூற் றொலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே. | 35 |
| 204 |
பல்லுயிர் பாகம் உடல்தலை தோல்பக லோன்மறல்பெண் வில்லிஓர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப் புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான் புகழே சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே. | 36 |
| 205 |
துயருந் தொழும்அழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப் பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பணிகூர்ந் தயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும்அந் தோஇங்ஙனே மயரும் மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே. | 37 |
| 206 |
வாணுதற் கெண்ணம்நன் றன்று வளர்சடை எந்தைவந்தால் நாணுதற் கெண்ணாள் பலிகொடுசென்று நகும்நயந்து பேணுதற் கெண்ணும் பிரமன் திருமால் அவர்க் கரிய தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே. | 38 |
| 207 |
தாழுஞ் சடைசடை மேலது கங்கையக் கங்கைநங்கை வாமுஞ் சடைசடை மேலது திங்கள்அத் திங்கட்பிள்ளை போழுஞ் சடைசடை மேலது பொங்கர வவ்வரவம் வாழுஞ் சடைசடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே. | 39 |
| 208 |
முனியே முருகலர் கொன்றையி னாய்என்னை மூப்பொழித்த கனியே கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன் இனியேல் இருந்தவம் செய்யேன் திருந்தஅஞ் சேநினைந்து தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே. | 40 |
| 209 |
சாற்றுவன் கோயில் தலையும் மனமும் தவம்இவற்றால் ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந் தாற்றிஅஞ் சொல்மலரால் ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத் தான்என் றெழுந்தலரே தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே. | 41 |
| 210 |
சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண்திணிந்த கல்லாம் நினையா மனம்வணங்காத்தலை யும்பொறையாம் அல்லா அவயவந் தானும் மனிதர்க் கசேதனமே. | 42 |
| 211 |
தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால் மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும் புனக்கொன்றை யான்அரு ளால்புழுவாகிப் பிறந்திடினும் எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே. | 43 |
| 212 |
எண்ணம் இறையே பிழைக்குங் கொலாம்இமை யோர்இறைஞ்சும் தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென் உள்நன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான் கண்ணும் உறங்கா திராப்பகல் எய்கின்ற காமனுக்கே. | 44 |
| 213 |
காமனை முன்செற்ற தென்றாள் அவள்இவள் காலன்என்னும் தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள் நாம்முனஞ் செற்றதன் றாரைஎன் றேற்கிரு வர்க்கும் அஞ்சி ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தணரே. | 45 |
| 214 |
அந்தணராம் இவர்ஆருர் உறைவதென் றேன்அதுவே சந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன் பந்தணை கையாய் அதுவும்உண் டென்றார் உமையறியக் கொந்தணை தாரீர் உரைமின்என் றேன்துடி கொட்டினரே. | 46 |
| 215 |
கொட்டும் சிலபல சூழநின் றார்க்கும்குப் புற்றெழுந்து நட்ட மறியும் கிரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும் வட்டம் வரும்அருஞ் சாரணை செல்லும் மலர்தயங்கும் புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டரன் பூதங்களே. | 47 |
| 216 |
பூதப் படையுடைப் புண்ணியரேபுறஞ் சொற்கள்நும்மேல் ஏதப் படஎழு கின்றன வாலிளை யாளொடும்மைக் காதற்படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே. | 48 |
| 217 |
செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான் மைப்புரை கண்ணுக்கு வார்புனல் கங்கைவைத் தான்மனத்துக் கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்தமும் அமைத்தான் அப்பனை அம்மனைநீயென் பெறாதுநின் றார்க்கின்றதே. | 49 |
| 218 |
ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும் ஐவாய்அரவும் ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும்எல்லாம் கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே. | 50 |
| 219 |
கலந்தனக் கென்பலர் கட்டவிழ் வார்கொன்றை கட்டரவார் சலந்தனக் கண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும் நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத் தலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே. | 51 |
| 220 |
அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால் இழிகின்ற சங்கம் இருந்த முலைமேல் கிடந்தனபீர் பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார் மொழிகின்ற தென்இனி நான்மறை முக்கண் முறைவனுக்கே. | 52 |
| 221 |
முறைவனை மூப்புக்கு நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந் துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றா இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர் சித்தந்தம்பால் உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே. | 53 |
| 222 |
ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன் போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று மாதவ மாகிடு மாதவ மாவளர் புன்சடையான் யாதவன் சொன்னான் அதுகொண் டொழிஇனி ஆரணங்கே. | 54 |
| 223 |
ஆரணங் கின்முகம் ஐங்கணை யான்அகம் அவ்வகத்தில் தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்தொன் மைக்கண்வந்த பூரண கும்பம் முலைஇவை காணப் புரிசடைஎம் காரணன் தாள்தொழும் அன்போ பகையோ கருதியதே. | 55 |
| 224 |
கருதிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள் ஒருதின மும்முள ளாகஒட் டாதொடுங் கார்ஒடுங்கப் பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றைஇன்னே தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழ்இருளே. | 56 |
| 225 |
இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமறையால் பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர வாடுதலால் தெருளார் மதிவிசும் பால்பெளவந்தெண்புனல் தாங்குதலால் அருளாற் பலபல வண்ணமு மால்அரன் ஆயினனே. | 57 |
| 226 | ஆயினஅந்தண |