|
Home > Temples of India > vaippu sthalam
திருவாமூர்
இறைவர் திருப்பெயர் : பசுபதீசுவரர்
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி
தல மரம் : கொன்றை
தீர்த்தம் : கெடில நதி
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - .........
தல வரலாறு
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
சிறப்புக்கள்
- மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.
- திருநாவுக்கரசு சுவாமிகள் அவதரித்தருளிய புண்ணிய பூமி.
- சுவாமி சந்நிதிக்கு எதிர்புறத்தில் திருநாவுக்கரசு பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சித் தந்து அருள்பாலிக்கின்றார்.
- இத்தலத்திற்கு தனித் தேவாரத் திருப்பதிகம் இல்லையாயினும், அப்பர் சுவாமிகள் பாடியருளிய "பசுபதி திருவிருத்தம்" இத்தல இறைவனைக் குறித்தே அருளிச் செய்யப்பெற்றது எனலாம்.
- இப்பதியின் பெருமையினை பெரிய புராணத்தில் சேக்கிழார் மிகவும் சிறப்பித்துப் பாடுகிறார்.
- திருநாவுக்கரசு சுவாமிகள் திருவவதாரம் செய்தருளிய இடம் இக்கோயிலின் தென்மேற்கே உள்ளது.
- பங்குனி - ரோகிணி, சித்திரை - சதயத் திருநாட்களில் அப்பர் பெருமானுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- அருணகிரி நாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கடலூர் மாவட்டம் - பண்ருட்டியிலிருந்து மேற்றிசையில் 8 கி. மீ.ல் கெடில நதியில் வடகரையில் இக்கோயில் உள்ளது.
|