திண்டீச்சரம் - (திண்டிவனம்)

 
இறைவர் திருப்பெயர்		: திந்திரிணீஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்		: மரகதவல்லி, மரகதாம்பாள். 
தல மரம்			: புளியமரம். 
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			: வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள். 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - தெள்ளும் புனற்கெடில (6-7-8), திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9). 

தல வரலாறு

  • தற்போது திண்டிவனம் என வழங்கும் ஊராகும்.
  • கோயில் உள்ள தெருவுக்கு ஈசுவரன் கோயில் தெரு என்றே பெயர்.
  • மக்கள் 'ஈசுவரன் கோயில்' என்றும் 'திந்திரிணீஸ்வரர் கோயில்' என்றும் வழங்குகின்றனர்.
  • திந்திருணி, புளிதிந்திருண்வனம் - புளியமரக்காடு, இச்சொல் மருவி வழக்கில் திண்டிவனம் என்றாயிற்று. புளியமரக் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்று பெயர்.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.
  • பெரிய கோயில்; கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது.
  • இத்தலம் வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்களால் பூசிக்கப்பட்டது.
  • இக்கோயிலின் விமானம் வியாச முனிவரால் தாபிக்கப்பட்டது.
  • இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் "ஓய்மாநாட்டு..... திருத்தீண்டீஸ்வரம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் செல்லும் எல்லா பேருந்துகளும் திண்டிவனம் வழியாகச் செல்கின்றன.

< PREV <
தோழூர் (தோளூர்)
Table of Contents > NEXT >
திரிபுராந்தகம்