|
Home > Temples of India > vaippu sthalam
குமரிக்கொங்கு (கொங்கு குமரித்துறை - மோகனூர்)
இறைவர் திருப்பெயர் : அசலதீபேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மதுகரவேணி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : குமரித்துறை எனப்படும் அகண்ட காவிரி.
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9).
தல வரலாறு
- இன்று மக்கள் வழக்கில் "மோகனூர்" என்று வழங்குகிறது.
- 1. "அகண்ட காவிரியின் கரையில் சிவாலயம் உள்ளது இதுவே குமரிக் கொங்கு என்று அப்பர் க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிடும் தலம்" என்றும், "மோகனூர் சிவபெருமானுக்குக் "குமரீசர்" என்று பெயராதலால் இவ்வூர் மோகனூராக இருத்தல் வேண்டும்" என்றும் சொல்லப்படுகிறது.
- எனவே, "குமரிக் கொங்கு", "கொங்கு குமரித்துறை" ஆகிய இரண்டும் ஒன்றே என்பதும், அது இன்று வழங்கும் 'மோகனூரே' என்பதும் புலனாகிறது.
- 'ஞானப் பழம்' கிடைக்கவில்லை என்று கோபித்து வந்த முருகனைத் தேடி, சுவாமியும் அம்பிகையும் வந்தபோது, இவ்வூரில் முருகனைக்
கண்டு மகிழ்ந்தனராம். ஆதலின் இது "மகனூர்" என்பது மருவி "மோகனூர்" என்றாயிற்று என்பது ஒரு செவி வழிச் செய்தியாகவுள்ளது.
- சுவாமியின் திருவடியில் ஊறுகின்ற சிறிய நீரூற்று காவிரியில் சென்று கலப்பதாகச் சொல்லப்படுகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- மூலத்தானத்தில் - சுவாமிக்கு முன்னிலுள்ள தீபம், எவ்வளவு காற்றடித்தாலும் அசைவதில்லை. எனவே சுவாமிக்கு 'அசலதீபேஸ்வரர்'
என்று பெயருண்டாயிற்று.
- மூலவர் - மேற்கு நோக்கிய சந்நிதி; சுயம்பு மூர்த்தி.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
நாமக்கல்லுக்குப் பக்கத்தில் உள்ள ஊர். நாமக்கல்லிலிருந்து மோகனூருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
|