|
Home > Temples of India > vaippu sthalam
ஏழூர் - ஏளூர்
இறைவர் திருப்பெயர் : கைலாச நாதர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5).
தல வரலாறு
- இது 'அகரம்' என்னும் ஊருக்குப் பக்கத்தில் உள்ளமையால் இவ்வூரை மக்கள் "அகரம் ஏளூர்" என்று அழைக்கின்றனர்.
- கொங்கு மண்டலத்தில் உள்ள 1. பெரும்பாளப்பட்டி, 2. பெருமாகவுண்டன்பட்டி,
3. வண்டிப்பாளையம், 4. வேம்பம்பட்டி, 5. புதுப்பட்டி, 6. கண்ணன்பட்டி, 7. ஏழூர் - ஆகிய ஏழு ஊர்களுக்கு இது தலைமையாக இருந்த
ஊர்.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- கல் ஸ்தம்பத்தில் நாற்புறமும் சிவலிங்கம் - தட்சிணாமூர்த்தி - நந்தி - துர்க்கை ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
- மூலவர் - சிவலிங்கத் திருமேனி; 5 அடி உயரம் - கம்பீரமான திருக்காட்சி.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
நாமக்கல் - சேலம் சாலையில், கருங்கல் பாளையம் - செல்லப்பம்பட்டி - 'புதன் சந்தை' - தத்தாத்திரிபுரம் - அகரம் ஆகிய ஊர்களைக் கடந்தால் ஏளூரை அடையலாம். நாமக்கல்லிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன.
|