|
Home > Temples of India > vaippu sthalam
ஏமப்பேறூர் - (திருநெய்ப்பேறு)
இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர்.
இறைவியார் திருப்பெயர் : உமாபரமேஸ்வரி.
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - இடைமரு தீங்கோ (6-70-3).
தல வரலாறு
- திரு நெய்ப் பேறு'' என்று தற்போது வழங்குகிறது.
சிறப்புக்கள்
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- நமிநந்தியடிகள் நாயனார் அவதரித்த தலம்; சாலையோரத்தில் "அடியார் கோயில்" என்ற நாயனாரில் கோயில் உள்ளது. சிறிய கோயில் நாயனாரில் மூலத் திருமேனி இக்கோயிலில் உள்ளது. உற்சவத் திருமேனி திருவாரூர்க் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் நாயனாரின் குருபூசை நடைபெறுகிறது.
- மூலவர் தரிசனம் - நீண்டுயர்ந்த பாணம்.
- கோயிலுள் நுழைந்ததும் இடப்பால் நமிநந்தியடிகள் (மூலத்திருமேனி) எண்ணெய்க் குடுவையுடன் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - திருத்துறைப்பூண்டிச் சாலையில் 8 கி.மீல் திருநெய்ப்பேறு உள்ளது. "அடியார் கோயிலு"க்கு எதிர்ப்புறத்தில் உள்ள சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.
|