|
Home > Temples of India > vaippu sthalam
அவல்பூந்துறை - பூந்துறை
இறைவர் திருப்பெயர் : புஷ்பவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பாகம்பிரியாள்
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் :
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கயிலாயமலை யெடுத்தான் (6-71-11).
தல வரலாறு
- அவல்பூந்துறை, பூந்துறை என்னும் இரு பெயர்களும் ஒன்றே. மக்கள் வழக்கில் பூந்துறை என்றே உள்ளது.
சிறப்புக்கள்
- கொங்கு நாட்டின் இலக்கியச் சிறப்பில் பூந்துறை நாடு மிக்க புகழ்பெற்றது. "மேன்மைபெறு பூந்துறை" - "பொன் மேவும் பூந்துறை" - "பொன்னுலகோர் புகழ்ந்திடும் பூந்துறை" என்றெல்லாம் புலவர்கள் இத்தலத்தைப் புகழ்ந்துள்ளனர்.
- இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- பிரகாரத்தில் தான்தோன்றீஸ்வர லிங்கம், தர்மசம்வர்த்தனி முதலிய சந்நிதிகள் உள்ளன.
- கோயில் வளாகத்துள் தென்னையும், பூச்செடிகளும் செழித்திருந்து பசுமையான சூழலைத் தருகின்றன.
- யாத்திரையாக வருபவர்கள் தங்கி இளைப்பாற வசதியாக கோயிலில் பெரிய மண்டபம் உள்ளது.
- காளியண்ணப் புலவர் என்பவர் பூந்துறைப் புராணம் பாடியுள்ளார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
ஈரோட்டிலிருந்து - அறச்சலூர் வழியாகச் செல்லும் தாராபுரம் / பழனி சாலையில் பூந்துறை உள்ளது. ஈரோட்டிலிருந்து 15 கி.மீ. அடிக்கடி நகரப் பேருந்துகள் செல்கின்றன. கோயில் வாசலிலேயே இறங்கலாம்.
|