அரிச்சந்திரம் / பாற்குளம்

இறைவர் திருப்பெயர்		: சந்திரமௌலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்		: சௌந்தரவல்லி.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - கொடிமாட நீடெருவு (6-13-1), அரிச்சந் திரத்துள்ளார் (6-51-10).

தல வரலாறு

  • சோழன் மாளிகை என்னும் ஊருக்குப் பக்கத்தில் இருப்பதால், இது 'சோழன் மாளிகை அரிச்சந்திரபுரம்' என்றழைக்கப்படுகிறது.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • இக்கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் (சாலையின் மறுபுறத்தில்) சற்றுத் தொலைவில் உள்பகுதியில் ஒரு குளம் உள்ளது. அது "பாற்குளம்" எனப்படுகிறது. அங்குக் கோயில் ஏதுமில்லை. பாற்குளமும் ஒரு வைப்புத் தலமாகச் சொல்லப்படுகிறது. நாவுக்கரசு பெருமான் இப்பாற்குளத்தை "பழையாறும் பாற்குளமு" என்று சிறப்பிக்கின்றார்.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
(1) கும்பகோணத்திலிருந்து பட்டீச்சரம் சாலையில் வந்தால், சோழன் மாளிகை என்னும் ஊருக்கு முன்னால் அரிச்சந்திரபுரம் உள்ளது. அரிச்சந்திரபுரத்துக்கு முன்னாலேயே கோயிலும் குளமும் உள்ளது. (2) பட்டீச்சரம் கோயிலுக்கு முன்பு வலப்புறமாகச் செல்லும் சாலையில் சென்று கடைவீதியில் விசாரித்துச் செல்லலாம்.

< PREV <
அறப்பள்ளி (கொல்லிமலை)
Table of Contents > NEXT >
அத்தீச்சுரம் (சிவசைலம்)