அன்னியூர் - (அன்னூர்)

இறைவர் திருப்பெயர்		: மன்னீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்		: அருந்தவச்செல்வி.
தல மரம்			: 
தீர்த்தம்				: 
வழிபட்டோர்			: 
வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - .........

தல வரலாறு

  • அன்னி என்ற வேடன் வள்ளி கிழங்கு வெட்டும்போது, மண்ணுக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தை வெட்டி விட்டான். அவனது செயலை மன்னித்தாலும், 'மன்' நிலை பெறுதல் என்ற பொருளில் என்றும் உள்ள பெருமானாகவும் இருப்பதால், இறைவன் மன்னீசுவரர் என்று திருநாமம் பெற்று விளங்குகிறார்.

சிறப்புக்கள்

  • இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • இக்கோயில் தி. மு. 2000 வருடத்திற்கு முற்பட்ட கோயிலாகும்.
  • மூலவர் சிவலிங்கத் திருமேனி; மிகப் பெரிய மூர்த்தம்.
  • அன்னியூர்த் தலபுராணம் சிரவணபுரம் தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் இயற்றப்பட்டது.
  • இக்கோயிலி 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
  • திருமுருகன் பூண்டி கல்வெட்டில் இவ்வூரை "மேற்றலைத் தஞ்சாவூரான மன்னியூர்" என்று குறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
கோயம்புத்தூர் மாவட்டம், அவிநாசியிலிருந்து 19 கி. மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

< PREV <
அண்ணல்வாயில் (அன்னவாசல்)
Table of Contents > NEXT >
ஆன்பட்டிபேரூர் (பேரூர்)