|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருவெண்ணெய்நல்லூர்
இறைவர் திருப்பெயர் : கிருபாபுரீசுவரர், அருட்டுறை நாதர், தடுத்தாட்கொண்டநாதர்
இறைவியார் திருப்பெயர் : மங்களாம்பிகை, வேற்கண்ணிநாயகி
தல மரம் :
தீர்த்தம் : பெண்ணையாறு
வழிபட்டோர் : வேதங்கள், திருமால், வேதன், ஷண்முகன்,
விஜயன், சுந்தரமூர்த்தி நாயனார், கம்பர், மெய்கண்டார்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - பித்தா பிறைசூடி
தல வரலாறு
இறைவியார் வெண்ணெய்யால் கோட்டை அமைத்து வழிபட்டதால் வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றது.
- சிவபெருமான் சுந்தரரை ஓலை ஆவணம் காட்டி தடுத்தாட்கொண்டருளிய திருவூர்.
- சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் எழுந்தருளிய தலமும் இது.
கல்வெட்டு மூலம் அறியவரும் இறைவர் திருப்பெயர்கள்: திருவெண்ணைநல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார், திருவெண்ணைநல்லுர் உடையார் ஆட்கொண்டதேவர், தடுத்தாட்கொண்டதேவர்.
சிறப்புக்கள்
இக்கோயிலில் எழுந்தருளியிக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், "ஆளுடைய நம்பி" என்னும் பெயரால் அழைக்கபடுகின்றனர். அவர் நாச்சிமாரோடு எழுந்தருளியிருக்கும் இடம் ஆட்கொண்ட தேவர் தீர்த்தக் குளமான தேவனார் கேணியின் கீழ்க்கரை ஆகும்.
இறைவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு "பித்தனென்றே பாடுவாயென" மொழிய அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் 'பித்தாபிறைசூடீ' எனப் பெரிதாந் திருப்பதிகம் பாடினார்.
கல்வெட்டுக்கள்: இத்தலத்தில் சோழமன்னர், பாண்டியமன்னர், பல்லவமன்னர், விஜயநகரமன்னர், சாலுவமன்னர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மாவட்டம் : தென்னாற்காடு; வழி - விழுப்புரம் திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 7-கி. மீ. தொலைவில் உள்ளது.
|