|
Home > Temples of India > pADal peRRa sthalam
வலிவலம்
இறைவர் திருப்பெயர் : இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்.
இறைவியார் திருப்பெயர் : வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.
தல மரம் : புன்னை.
தீர்த்தம் : சங்கர தீர்த்தம்.
வழிபட்டோர் : சூரியன், கரிக்குருவி(வலியன்),
காரணமாமுனிவர் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : மூவர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.
- இது கோச் செங்கணான் கட்டிய மாடக்கோயில்.
- தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.
- இவ்விறைவனை, இறைவியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் 'வலிவலமும்மணிக்கோவை' என்னும் நூலொன்று, "தமிழ்தாத்தா" திரு. உ.வே. சாமிநாத ஐயர் அவர்களால்
வெளிடப்பட்டுள்ளது.
- இக்கோயிலில் சோழர் காலத்திய ஒன்பது கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு
வரலாம்; இரண்டுமே நல்ல பாதைகள். திருவாரூரிலிருந்து 10 கி. மீ. தொலைவு.
|