|
Home > Temples of India > pADal peRRa sthalam
வைகல்மாடக்கோயில்
இறைவர் திருப்பெயர் : சண்பகாரண்யேஸ்வரர், வைகல்நாதர்.
இறைவியார் திருப்பெயர் : சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை,
வைகலாம்பிகை.
தல மரம் : சண்பகம் (தற்போதில்லை).
தீர்த்தம் :
வழிபட்டோர் : இலக்குமி.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - துளமதி யுடைமறி தோன்று.
தல வரலாறு
சிறப்புக்கள்
இத்தலத்தில் மூன்று கோயில்கள் உள்ளன:- 1. விசுவநாதர் ஆலயம் - 'வளநகர் ' என்று இப்பகுதி வழங்குகிறது - திருமால் வழிபட்டது, 2. பிரமபுரீசுவரர் ஆலயம் - தற்போது சிறப்பாக உள்ள கோயில் - பிரமன் வழிபட்டது, 3. வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில்; பாடல் பெற்றது.
- சண்பகாரண்யம், நித்யவாசபுரம் முதலயன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
- மூலவர் - சுயம்பு மூர்த்தி; அழகான பாணம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
கும்பகோணம் - காரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சியநல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் 'நாட்டார் வாய்க்கா 'லைக் கடந்து, பழியஞ்சியநல்லூரை அடைந்து, மேலும் 2 கி. மீ. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். (நாட்டார் வாய்க்கால் மீது உள்ள பாலம் குறுகலானது; ஆதலின் பேருந்து செல்லாது.)
|