|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருப்பைஞ்ஞீலி
இறைவர் திருப்பெயர் : நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர்,
ஆரண்யவிடங்கர்.
இறைவியார் திருப்பெயர் : விசாலாட்சி
தல மரம் : ஞீலி வாழை.
தீர்த்தம் : அப்பர் தீர்த்தம்.
வழிபட்டோர் : உமாதேவி.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - ஆரிடம் பாடிலர்.
2. அப்பர் - உடையர் கோவண.
3. சுந்தரர் - காருலாவிய நஞ்சை
தல வரலாறு
ஞீலி - இது ஒருவகை வாழை; தனி இனம். வேறிடத்தில் பயிராவதில்லை. இதன் இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மனிதர்கள் உண்டால் பிணி வருதல் இன்றும் கண்கூடு. இக்கனியைச் சுவாமிக்கு நிவேதித்து தண்ணீரில் விட்டுவிடுவார்கள்.
இறைவன் அப்பர்பெருமானுக்கு பொதி சோறளித்துப் பசியைப் போக்கிய தலம்.
இங்கு வசிட்டமுனிவருக்கு நடராசப் பெருமான் நடனக் காட்சியருளியதால், இத்தலம் மேலைச்சிதம்பரம் என்றும் பெறுகின்றது.
சிறப்புக்கள்
ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம் முதலியன இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள்.
மதிலின் மேற்றளம் புலிவரிக் கற்களால் ஆனவை. (இவ்வகைக் கற்கல் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றதுபோலும்.)
இரண்டாங் கோபுரவாயிலில் அப்பருக்குக் கட்டமுது தந்து அருள்புரிந்து மறைந்த இடமான - கோயில், நிலமட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளது.
- கோயில் அமைப்பு பல்லவர் கால அமைப்புடையது.
சோழர் காலக் கல்வெட்டுக்களில் "பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி உடையார் " என்னும் பெயர்களால் இறைவன் குறிக்கப்படுகிறார்.
- இத்தலத்திற்கு மதுரை மெய்ப்பாத புராணிகர் தலபுராணம் பாடியுள்ளார்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சியிலிருந்து பேருந்து செல்கிறது. திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக இத்தலத் அடையலாம்.
|