|
Home > Temples of India > pADal peRRa sthalam
குரங்கணில்முட்டம்
இறைவர் திருப்பெயர் : வாலீஸ்வரர், கொய்யாமலை நாதர்.
இறைவியார் திருப்பெயர் : இறையார் வளையம்மை.
தல மரம் : இலந்தை.
தீர்த்தம் : காக்கைத்தீர்த்தம் (காக்கைமடு)
வழிபட்டோர் : வாலி, இந்திரன், எமன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- மேற்கு நோக்கிய சந்நிதி.
- கோயில் வாயிலின் முகப்பில் அணிலும் காகமும் வழிபடும் சிற்பம் உள்ளது.
- அம்பாள் பெயரை இப்பகுதி மக்கள் 'இளையாளம்மன்' என்று அழைக்கின்றனர்.
- கோயிலுக்கு சற்றுத் தொலைவில் ஒரு பாறை குடைக் கோயிலாகக் காட்சியளிக்கிறது.
- கல்வெட்டில் இத்தலம் 'காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்' எனக்
குறிக்கப்படுகிறது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்படுகிறார்.
- கல்வெட்டில், சகம் 1451-ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாக குறிப்புள்ளது.
- இப்பகுதி மக்களிடையே 'கொய்யாமலை' என்னும் பெயர் பலருக்கு இருப்பதை இன்றும் காணலாம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து சாலையில் பாலாற்றைத் கடந்து, 'தூசி ' என்னும் கிராமத்தை அடைந்து, அங்கிருந்து 2 கி.மீ. சென்றால்
இத்தலத்தை அடையலாம்.
|