|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்கோவலூர் வீரட்டம்
இறைவர் திருப்பெயர் : வீரட்டேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : தென் பெண்ணையாறு (தட்சிண பிநாகினி).
வழிபட்டோர் : மெய்ப்பொருள் நாயனார், நரசிங்கமுனையரையர் (சுந்தரரை வளர்த்தவர்),
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - படைகொள் கூற்றம்.
2. அப்பர் - செத்தையேன் சிதம்பநாயேன்.
தல வரலாறு
ஊர் பெயர் திருக்கோவலூர்; தலத்தின் பெயர் வீரட்டம்.
திருக்கோவலூர் என்பது மருவி இன்று திருக்கோயிலூர் என்று வழங்குகின்றது.
இது, அந்தகாசூரனைச் சம்ஹரித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.
சிறப்புகள்
- மெய்பொருள் நாயனார் அவதரித்து, குறுநில மன்னராக இருந்து ஆட்சி செய்த பதி. நாயனாரின் திருவுருவச் சிலை கோயில் உள்பிரகாரத்தில் உள்ளது.
அவதாரத் தலம் : திருக்கோவலூர்.
வழிபாடு : சங்கம வழிபாட்.
முத்தித் தலம் : திருக்கோவலூர்.
குருபூசை நாள் : கார்த்திகை - உத்திரம்
- முதல் இருவர் பாடல் பெற்றத் தலம்.
- சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்த பெருமையை உடைய நரசிங்கமுனையரையர் அவதரித்தத் தலம். (நரசிங்க முனையரைய நாயனார் வேறு.)
திருமுறை கண்ட இராஜராஜ சோழன் அவதரித்த பதி.
ஔவையார் இத்தல விநாயகரைப் பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.
- சோழர் காலக் கல்வெட்டுகள் 79 உள்ளன.
அமைவிடம்
அ/மி. வீரட்டேசுவரர் திருக்கோயில்,
திருக்கோயிலூர் - 605 757.
விழுப்புரம் மாவட்டம்.
தொலைபேசி : 04153 - 224036, +91-93448 79787.
மாநிலம் : தமிழ் நாடு
விழுப்புரம் - திருவண்ணாமலை இரயில் பாதையில் உள்ள நிலையம். நிலையத்திலிருந்து வடக்கே 5-கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது. பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கவேண்டும். திருவண்ணாமலை, பண்ணுருட்டி தலங்களிலிருந்து, ஏராளமான பேருந்து வசதி உள்ளது.
மெய்ப்பொருள் நாயனார் வரலாறு (மூலம்)
|