|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்கீழ்வேளுர்
இறைவர் திருப்பெயர் : அட்சயலிங்கேஸ்வரர், கேடிலியப்பர்
இறைவியார் திருப்பெயர் : வனமுலை நாயகி, சுந்தர குஜாம்பாள்
தல மரம் : இலந்தை
தீர்த்தம் : சரவண தீர்த்தம்
வழிபட்டோர் : முருகப் பெருமான், அகத்தியர், குபேரன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் (மின்னுலாவிய சடையினர்), அப்பர் (ஆளான் அடியவர்)
தல வரலாறு
வேள் (முருகப் பெருமான்) வழிபட்டதால், இப் பெயர். அவர் பூஜைக்கு கெடுதி வராது, இறைவியார், துர்க்கையின் அம்சமாக காவல் புரிந்தார்.அவருக்கு அஞ்சு வட்டத்து அம்மை என்று பெயர்.
- அகத்தியர் கூத்தபெருமானின், வலத் திருவடியைத் தரிசித்த பதி.
சிறப்புக்கள்
கோச்செங்கணானின் மாடக் கோவில்.
- மூன்று கல் வெட்டுகளில் இரண்டு சோழர் காலத்தவை,ஒன்று தஞ்சை மராட்டிய மன்னன் காலத்தது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர்-நாகை பாதையில் உள்ள இரயில் நிலையம் கீவளூர். நிலையத்திலிருந்து, வடக்கே 2கீ.மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது.
|