|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்கருப்பறியலூர் (தலைஞாயிறு)
இறைவர் திருப்பெயர் : குற்றம் பொறுத்த நாதர்
இறைவியார் திருப்பெயர் : கோல்வளை நாயகி
தல மரம் : கொகுடி முல்லை
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
வழிபட்டோர் : வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( சுற்றமொடு ), சுந்தரர் பாடல் பெற்றது.
தல வரலாறு
- கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப் பெயர் பெற்றது.(கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர். கோயிலின் பெயர் கொகுடிக்கோயில்).
- இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின் தன் பிழையை உணர்ந்து பொறுக்கவேண்டியதால், இவ்வூர் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர் என்றாயிற்று,
சிறப்புக்கள்
- இக்கோயிலில் சீர்காழி மலைக் கோயிலில் உள்ளது போல் அம்மையப்பரும், சட்டைநாதர் திருவுருவமும் உள்ளது,
- இதனை, மேலைக்காழி எனவும் கூறுவர்.
- சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது வைத்தீசுவரன்கோயில் இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 8கீ.மீ தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை,வைதீஸ்வரன்கோயில் ஆகிய இடங்களிலிருந்து தலைஞாயிறு (இத்தலத்தின் இன்றைய பெயர்) செல்ல பஸ்வசதி உள்ளது.
|