|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருக்கச்சிஏகம்பம் - (காஞ்சிபுரம்)
இறைவர் திருப்பெயர் : ஏகாம்பரநாதர், திருவேகம்பர், தழுவக்குழைந்த நாதர்
இறைவியார் திருப்பெயர் : ஏலவார்குழலி, காமாட்சியம்மை
தல மரம் : மா மரம்(வேதம் மா மரமாக உள்ளது.)
தீர்த்தம் : கம்பா நதி, சிவகங்கை, சர்வ தீர்த்தம்
வழிபட்டோர் : உமையம்மை, பிரம்மா, திருமால், ருத்திரர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் (1`. வெந்த வெண்பொடிப் பூசு, 2. மறையானை மாசிலா,
3. கருவார் கச்சி, 4. பாயுமால்விடை),
அப்பர் ( - கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை,
- நம்பனை நகரமூன்றும்,
- ஓதுவித்தாய் முன்,
- பண்டு செய்த,
- பூமேலானும்,
- கூற்றுவன் காண்,
- உரித்தவன்காண் உரக்களிற்றை
), சுந்தரர்.
தல வரலாறு
- மா மரத்தைத் தலமரமாக(ஏ+ஆம்ரம்= மாமரம்) கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெற்றது.(கச்சி என்பது ஊரின் பெயர்).
- தவம் செய்த அம்பிகைக்கு இறைவனார் மாமரத்தினடியில் காட்சி தந்து அருள்புரிந்த பதி.
- உமா தேவி இறைவனிடம் கேட்ட ஆகம முறைப்படி வழிபட விரும்பி இத்தலத்தில் இறைவனைப் பூசித்தார்.
- மூலவர் - அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிருதிவி(மணல்) லிங்கம் ஆகும்.
- பூசிக்கும்போது, வெள்ளம் பெருக்கெடுத்து எழ, தான் மணலால் நிறுவிய லிங்கத் திருமேனியைக் காமாட்சியம்மை தழுவி அணைக்க, இறைவன் அத் தழும்பு தோன்றுவராயினர்.
- காமாட்சியம்மை முப்பத்திரண்டு அறங்கள் செய்த இடம்.
- சுந்தரர் இடக் கண் பெற்ற தலம்.
- பிரம்மா, திருமால், ருத்திரர் பூசித்த இலிங்கங்கள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக்கம்பம், நல்லக்கம்பம் எனப்படுகின்றன.
- சக்தி பீடமாகிய காமக்கோடிப் பீடம் உள்ள தலம்.
சிறப்புக்கள்
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- பஞ்ச பூதத் தலங்களில் இது பிருத்துவித் (மண்) தலம்.
- நகரங்களில் சிறந்த காஞ்சி எனப்படுவது. (நகரேஷு காஞ்சி).
- விகடசக்கர விநாயகர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழிலாக வீற்றிருக்கிறார்.
- முத்தித் தல நகர் ஏழனுள் முக்கியமானது.
- ஐயடிகள் காடவர்கோன், சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்டர் ஆகியோர் தொழுது பேறு பெற்ற தலம்.
- பரிமேலழகர், கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்த தலம்.
- காஞ்சி காமக்கோடி சங்கராசாரிய சுவாமிகள் ஸ்ரீமடம், தொண்டை மண்டலாதீனம் திருமடம் உள்ள இடம்.
- இத்திருத்தலத்தில் பங்குனிப் பெருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு தமிழகத்தின் முக்கிய ஊர்களில் ஒன்று. சென்னையிலிருந்தும் பிற ஊர்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
பாடல்பெற்றத் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
காஞ்சித் தலங்களைத் தொடர்ந்து செல்ல : -
|