திருச்சோற்றுத்துறை

இறைவர் திருப்பெயர்		: ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.
இறைவியார் திருப்பெயர்		: அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.
தல மரம்			: 
தீர்த்தம்				: காவிரி.
வழிபட்டோர்			: இந்திரன், சூரியன், கௌதமர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள்		: மூவர்.

தல வரலாறு

  • வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.)

  • அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.

சிறப்புக்கள்

  • இது சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.
  • ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்னம் பாலிப்பு நடைபெறுகிறது.
  • தலப் பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
  • இத்தலத்திற்குச் மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.
  • தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.
  • முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவையாற்றிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

< PREV <
காவிரி தென்கரை 12வது தலம்
திருக்கண்டியூர்வீரட்டம்
Table of Contents > NEXT >
காவிரி தென்கரை 14வது தலம்
திருவேதிகுடி