|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருநெல்வாயில் அரத்துறை
இறைவர் திருப்பெயர் : அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர், தீர்த்தபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அரத்துறைநாயகி, ஆனந்த நாயகி, திரிபுர சுந்தரி
தல மரம் : ஆல மரம்
தீர்த்தம் : நிவா நதி
வழிபட்டோர் : வால்மீகி முனிவர், அரவான்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - எந்தையீசனெம் பெருமான்.
2. அப்பர் - கடவுளைக் கடலுள்.
3. சுந்தரர் - கல்வாய் அகிலும்.
தல வரலாறு
- ஊர் பெயர் - நெல்வாயில்; கோயில் - அரத்துறை.
- இத்தலம் தற்போது திருவரத்துறை, திருவட்டுறை என்றெல்லாம் வழங்குகிறது.
நிவாநதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோயில். நிவா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, அதனால் சேதம் உண்டாகாமல் இருக்க நந்தியம்பெருமான் தலையைச் சற்று திரும்பி வெள்ளத்தைப் பார்க்க, வெள்ளம் வடிந்ததாக வரலாறு சொல்லப்படுகிறது.
- சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, மணிக்குடை, பொற்சின்னம் அருளப் பெற்ற தலம்.
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, விழுப்புரம் - திருச்சி ரயில்பாதையில், திருப்பெண்ணாகடதிற்குத் தென்மேற்கே 7-கி. மீ. தூரத்தில் உள்ளது. விருதாச்சலத்திலிருந்து, தொழுதூர் செல்லும் பஸ்களில் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கி, தெற்கே 1-கி. மீ. தூரத்தில் இத்தலத்தை அடையலாம். (இன்று, திருவட்டுறை எனப்படுகிறது.)
|