|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்
இறைவர் திருப்பெயர் : பிரமபுரீஸ்வரர், பிரமபுரிநாதர்
இறைவியார் திருப்பெயர் : பூங்குழல்நாயகி, சுகந்தகுந்தளாம்பிகை
தலமரம் : புன்னை
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
வழிபட்டோர் : பிரமன்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( எரிதர அனல்கையில் ஏந்தி)
தல வரலாறு
- பிரமன் பூசித்துப் பேறுபெற்றான்.
சிறப்புக்கள்
- சோமாசி மாறநாயனாரின் அவதாரப்பதி.
- கோட்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
- சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, இன்று அம்பர் என்று வழங்கப்படுகிறது. இப் பதி பூந்தோட்டம் இரயில்நிலையத்திற்குக் கிழக்கே 5கீ.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத் தலத்திற்குக் கிழக்கே 1கீ.மீ. தூரத்தில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
|