|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருஆலவாய் (மதுரை)
இறைவர் திருப்பெயர் : சொக்கலிங்கப்பெருமான், சோம சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : அங்கயற்கண்ணி, மீனாட்சிதேவி
தல மரம் : கடம்பு
தீர்த்தம் : பொற்றாமரை, வைகை ஆறு, எழுகடல்
வழிபட்டோர் : இந்திரன் முதலானோர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நீல மாமிடற் (1-94), மந்திரமாவது நீறு (2-66), மானின்நேர்விழி மாதராய் (3-39),
காட்டு மாவ துரித்துரி (3-47), செய்ய னேதிரு (3-51), வீடலால வாயிலாய் (3-52), வேத வேள்வியை (3-108),
ஆலநீழ லுகந்த (3-115), மங்கையர்க் கரசி (3-120);
அப்பர் - வேதியா வேத கீதா (4-62), முளைத்தானை (6-19).
தல வரலாறு
- இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற சாபம் தீர்க்க விமானத்தில் எழுந்தருளியது.
- இறைவன், சௌந்திர பாண்டியனாக இருந்து ஆட்சி செய்தது.
- அங்கயற்கண்ணியாம் தடாதகைப் பிராட்டியார் இறைவனை மணம் புரிந்து ஆட்சி செய்த பதி.
- 64 திருவிளையாடல்கள் புரிந்த தலம்.
- இராஜசேகர பாண்டியனுக்கு இறைவன் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய தலம்.
- மாணிக்க வாசகர் இறைவனது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு உணர்த்திய தலம்.
- கூன் பாண்டியனின் வெப்பு நோய் ஞான சம்பந்தரால் நீக்கப்பெற்று, நின்ற சீர் நெடுமாறன் ஆகிய தலம்.
சிறப்புக்கள்
- ஐந்து சபைகளுள் இது வெள்ளிச் சபை.
- தமிழ் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த தலம்
- சம்பந்தர் அனல், புனல் வாதம் செய்து சைவத்தை நிலைப் பெறச் செய்த இடம்.
- மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் சைவம் வளர்த்த தலம்.
- மூர்த்தி நாயனார் அவதரித்த தலம்.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மதுரை தமிழ் நாட்டின் முக்கிய ஊராகும்.பேருந்துகளும், இரயில் வண்டிகளும் வெகுவாக உள்ளன.
See Also:
1. திருவிளையாடல் புராணம் (மூலம்)
2. Stories of thiruviLaiyADal purANam
|