திருஆலவாய் (மதுரை)


இறைவர் திருப்பெயர்	: சொக்கலிங்கப்பெருமான், சோம சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்	: அங்கயற்கண்ணி, மீனாட்சிதேவி
தல மரம்		: கடம்பு		
தீர்த்தம்			: பொற்றாமரை, வைகை ஆறு, எழுகடல்
வழிபட்டோர்		: இந்திரன் முதலானோர்.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - நீல மாமிடற் (1-94), மந்திரமாவது நீறு (2-66), மானின்நேர்விழி மாதராய் (3-39), 
			  காட்டு மாவ துரித்துரி (3-47), செய்ய னேதிரு (3-51), வீடலால வாயிலாய் (3-52), வேத வேள்வியை (3-108), 
			  ஆலநீழ லுகந்த (3-115), மங்கையர்க் கரசி (3-120); 
அப்பர் - வேதியா வேத கீதா (4-62), முளைத்தானை (6-19).

தல வரலாறு

  • இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற சாபம் தீர்க்க விமானத்தில் எழுந்தருளியது.
  • இறைவன், சௌந்திர பாண்டியனாக இருந்து ஆட்சி செய்தது.
  • அங்கயற்கண்ணியாம் தடாதகைப் பிராட்டியார் இறைவனை மணம் புரிந்து ஆட்சி செய்த பதி.
  • 64 திருவிளையாடல்கள் புரிந்த தலம்.
  • இராஜசேகர பாண்டியனுக்கு இறைவன் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய தலம்.
  • மாணிக்க வாசகர் இறைவனது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு உணர்த்திய தலம்.
  • கூன் பாண்டியனின் வெப்பு நோய் ஞான சம்பந்தரால் நீக்கப்பெற்று, நின்ற சீர் நெடுமாறன் ஆகிய தலம்.

சிறப்புக்கள்

  • ஐந்து சபைகளுள் இது வெள்ளிச் சபை.
  • தமிழ் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த தலம்
  • சம்பந்தர் அனல், புனல் வாதம் செய்து சைவத்தை நிலைப் பெறச் செய்த இடம்.
  • மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் சைவம் வளர்த்த தலம்.
  • மூர்த்தி நாயனார் அவதரித்த தலம்.

    அமைவிடம்

    மாநிலம் : தமிழ் நாடு
    மதுரை தமிழ் நாட்டின் முக்கிய ஊராகும்.பேருந்துகளும், இரயில் வண்டிகளும் வெகுவாக உள்ளன.

See Also:
1. திருவிளையாடல் புராணம் (மூலம்)
2. Stories of thiruviLaiyADal purANam

< PREV <
காவிரி தென்கரை 128வது தலம்
திருவிடைவாய்
Table of Contents > NEXT >
பாண்டிய நாட்டு 2வது தலம்
திருஆப்பனூர்

ℼⴭ琠硥⁴敢潬⁷敧敮慲整⁤祢猠牥敶⹲倠䕌十⁅䕒位䕖ⴠ㸭ℼⴭ䌠畯瑮牥匯慴楴瑳捩⁳慤慴挠汯敬瑣潩潣敤ⴠ㸭猼牣灩⁴慬杮慵敧∽慊慶捓楲瑰•牳㵣栢瑴㩰⼯獵樮㉳礮浩⹧潣⽭獵樮⹳楹杭挮浯氯扩猯扭樯⽳潨瑳湩⽧灣樯彳潳牵散眯癨弲〰⸱獪㸢⼼捳楲瑰㰾捳楲瑰氠湡畧条㵥樢癡獡牣灩≴朾潥楶楳⡴㬩⼼捳楲瑰㰾潮捳楲瑰㰾浩⁧牳㵣栢瑴㩰⼯楶楳⹴敷桢獯楴杮礮桡潯挮浯瘯獩瑩朮晩甿ㅳㄲ㠶㐷〰∱愠瑬∽敳獴慴獴•潢摲牥∽∰眠摩桴∽∱栠楥桧㵴ㄢ㸢⼼潮捳楲瑰