|
Home > Temples of India > kAnychipuram thalangkaL

இரண்யேசம்
இறைவர் திருப்பெயர் : இரண்யேசர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் :
வழிபட்டோர் : இரணியன்.
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- பெரிய சிவலிங்க மூர்த்தம் - பதினாறு பட்டைகளுடன் கூடியது.
-
இவ்வுலகத்தில் நன்மைகள் அனைத்தையும் பெறுவதற்குரிய வழி சிவபூசையே என்று, தன் குலகுருவான சுக்கிரரின் வாயிலாக அறிந்து, சுக்கிரன் கூறியவாறு, தன்னுடைய மகன் பிரகலாதன், தன் தம்பி இரண்யாட்சன், அவன் மகன் அந்தாசுரன் ஆகியரோடு காஞ்சி வந்து, அனைவரும் தத்தம் பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இரணியன் வழிபட்டது இரண்யேசம் எனப்பட்டது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - இரன்யேசம், சர்வ தீர்த்தத்தின் மேற்கரையில் உள்ளது.
|